தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பேராசிரியருக்கு பதில் கொடுத்த மாணவன் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பேராசிரியருக்கு பதில் கொடுத்த மாணவன் Empty பேராசிரியருக்கு பதில் கொடுத்த மாணவன்

Mon Aug 25, 2014 8:35 am
நாத்திகரான ஒரு பேராசிரியர் தனது வகுப்பில் கடவுளை அறிவியல் ரீதியாக ஏற்பதில் உள்ளபிரச்சினைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்அப்போது அவர் (வழக்கம் போல.?) ஒரு கிறித்தவமாணவனிடம் ...

பேராசிரியர்தம்பிநீ கிறிஸ்தவ மார்க்கத்தைச் சார்ந்தவன் தானே? 
மாணவன்ஆம்,ஐயா.
 

பேராசிரியர்எனவே நீ கடவுளை நம்புகிறாய் அல்லவா? 
மாணவன்நிச்சயமாகஐயா.
 
பேராசிரியர்கடவுள் நல்லவரல்லவா?

மாணவன்நிச்சயமாக.
பேராசிரியர்அவர் எதையும் செய்ய வல்லவரல்லவா?

மாணவன்அதிலென்ன சந்தேகம்?
பேராசிரியர்:
எனது சகோதரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்;அதிலிருந்து அவர் சுகமடைய அவரும் அவர் மீதுஅன்புள்ள நாங்களனைவரும் மனதுருகி பிரார்த்தனை செய்தோம்;ஆனால் கடவுள் கேட்கவேஇல்லை;இதுபோல அவதிப்படும் அநேகருக்காக‌ நாம் பிரார்த்தனை செய்கிறோம்;அவர்கள் யாருமேசுகமடைகிறதில்லை;

பிறகு கடவுள் நல்லவர் என்று எப்படி சொல்லமுடியும்..?

(மாணவன் மௌனமாகிறான்...)

பேராசிரியர்:
உன்னால் பதில் சொல்லமுடியாது,சிறுபிள்ளாய்;நாம் மீண்டும் துவங்குவோம்;கடவுள் நல்லவரா?
மாணவன்:ஆம்.


பேராசிரியர்சாத்தான் நல்லவனா?
மாணவன்இல்லை.


பேராசிரியர்சாத்தான் எங்கிருந்து வருகிறான்?
மாணவன்கடவுளிடமிருந்து.


பேராசிரியர்நல்லது,இந்த உலகில் தீமை இருக்கிறதா தம்பி?
மாணவன்ஆம்.


பேராசிரியர்:
தீமை எங்கும் நிறைந்திருப்பதையும் இந்த உலகை கடவுள் படைத்தார் என்பதையும்ஒப்புக்கொள்கிறாயல்லவா?
மாணவன்:ஆம்.


பேராசிரியர்:அப்படியானால் தீமையைப் படைத்தது யார்?

(மாணவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை)

பேராசிரியர்:
இந்த உலகில் வியாதி,ஒழுங்கீனம்,கொடுமை,அருவருப்பு,அசுத்தம் எல்லாம் நிறைந்திருக்கிறதல்லவா?
மாணவன்:ஆம்,ஐயா.


பேராசிரியர்அவற்றையெல்லாம் உண்டாக்கியது யார்?

(மாணவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை)
பேராசிரியர்:
நீ அறிந்துக்கொள்ளவும் உணர்ந்துக்கொள்ளவும் ஐந்து வகையான புலன்கள் உதவுவதாக அறிவியல்சொல்லுகிறது;தம்பி,இதன் நீ எப்போதாவது கடவுளை பார்த்திருக்கிறாயா?
மாணவன்இல்லை,ஐயா.


பேராசிரியர்:
(
உணர்ச்சிகரமாகஎப்போதாவது உன் கடவுள் சத்தத்தை கேட்டிருக்கிறாயா என்று எங்களுக்குச் சொல்.
மாணவன்இல்லை,ஐயா.


பேராசிரியர்:
உன் கடவுளை எப்போதாவது உணர்ந்திருக்கிறாயாருசித்திருக்கிறாயாநுகர்ந்திருக்கிறாயா அல்லதுஎந்த வகையிலாவது அவரை அறிந்திருக்கிறாயா
மாணவன்:
(
பயத்துடன்இல்லைஐயாஒருபோதும் அது போன்ற எந்த அனுபவத்தையும் நான் பெற்றதில்லை;அதுபோன்று ஆராய எனக்கு தைரியமுமில்லை.


பேராசிரியர்ஆனாலும் அவரை இன்னும் நம்புகிறாயோ?
மாணவன்:ஆம்.


பேராசிரியர்:
எந்த ஒரு சோதித்துப் பார்க்கக்கூடிய‌ பரிசோதனையின் மூலமாகவோநிரூபணத்தின் மூலமாகவோ,ஒரு ஆய்வு அறிக்கையின் மூலமாகவோஅறிவியல் ரீதியாகவோ கடவுள் என்ற ஒன்று இல்லை;இதற்கு என்ன சொல்கிறாய்,தம்பி?
மாணவன்நான் சொல்ல ஒன்றுமில்லைநான் கடவுளை நம்புகிறேன்அவ்வளவு தான்.


பேராசிரியர்ஆம்,நம்பிக்கை என்பதே அறிவியலின் பெரிய பிரச்சினை.


மாணவன்ஐயா,உஷ்ணம் என்பது இருக்கிறதல்லவா?
பேராசிரியர்:ஆம்.

மாணவன்குளுமை என்பது?
பேராசிரியர்:ஆம்.

மாணவன்இல்லைஐயா;அப்படி எதுவுமில்லை
(
அந்த வகுப்பறையானது மாறுபட்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக அமைதியாகிறது...)
 
மாணவன்:
ஐயாஉஷ்ணத்தையோஅதிக உஷ்ணத்தையோஇன்னும் அதிக உஷ்ணத்தையோமிக அதிகஉஷ்ணத்தையோபஸ்மமாக்கும் வெப்பத்தையோகுறைந்த வெப்பத்தையோ அல்லது இதுஎதுவுமில்லாத நிலையையும் உருவாக்கமுடியும்;

ஆனால் குளுமை என்ற எதுவும் நம்மிடமில்லை; 0*டிகிரிக்கும் கீழே 458*டிகிரி வரை மட்டுமே நாம்போகமுடியும்அதற்கும் கீழே போகமுடியாதுஎனவே குளுமை என்று எதுவுமில்லை;குளுமை,ஐஸ்என்பதெல்லாம் வெப்பமில்லாத தன்மையைக் குறிக்கும் சொல் அவ்வளவேவெப்பம் என்பது சக்தி;குளுமை என்பது அதற்கு எதிரானது அல்ல;அது வெப்பத்தின் புலப்படாத நிலை அவ்வளவே.(அந்தவகுப்பறையே நிசப்தமாகிறது...)


மாணவன்:
இருளைப் பற்றி என்ன,ஐயா;இருள் என்ற எதாவது இருக்கிறதா என்ன?

பேராசிரியர்இல்லையா,பின்னே இரவு என்பதே இருள் தானே?



மாணவன்:
மீண்டும் நீங்கள் தவறுகிறீர்கள்ஐயாஇருள் என்பதும் ஏதோ ஒன்றின் காணப்படாத நிலையே;உங்களால் குறைந்த வெளிச்சத்தையோ,சாதாரண வெளிச்சத்தையோபிரகாசமான ஒளியையோ,மின்னல் போன்ற வெளிச்சத்தையோ பார்க்கமுடியும் அல்லது தொடர் வெளிச்சமில்லாத நிலையில்எதையும் பார்க்கமுடியாத நிலையையும் அடையலாம்அதுவே இருள் எனப்படுகிறது,அல்லவா?ஆனால் அது இருள் அல்லஅப்படியிருக்குமானால் அதன் அடுத்தடுத்த நிலையை எப்படிஉருவாக்கமுடியும்?
பேராசிரியர்சரிஇதன்மூலம் என்ன சொல்லவருகிறாய்,தம்பி?

மாணவன்உங்கள் தத்துவ மேடையானது தகர்ந்தது என்று சொல்கிறேன்!
பேராசிரியர்என்ன..தகர்ந்ததா..எப்படி?

மாணவன்:
ஐயா நீங்கள் இரண்டு எதிரெதிர் தன்மைகளுக்குள்ளிருந்து வாதிடுகிறீர்கள்;பிறப்பும் மரணமும் கடவுள்நல்லவரா,கெட்டவரா என்ற அள்விலேயே சிந்திக்கிறீர்கள்;உங்களைப் பொருத்தவரையில் கடவுள் ஒருஎல்லைக்குட்பட்டவராகவும் கணிக்கக்கூடியவராகவும் இருக்கவேண்டும்இதன்படி அறிவியலும்கூடசிலவற்றை விவரிக்க இயலாது;அறிவியல் பயன்படுத்தும் மின்சாரமும் காந்த சக்தியும் விவரிக்கவோபார்க்கவோ புரிந்துக்கொள்ளவோ முடியாதவை;

இதேபோன்று மரணத்தை ஜீவித்தலின் எதிர்ப்பொருளாகக் கொள்வதும் அறியாமையாகும்;ஏனெனில்மரணம் ஜீவனின் எதிர் அல்ல;அது ஜீவன் இல்லாமை அவ்வளவே.

ஐயாநீங்கள் மாணவர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவன் என்றுகற்றுக்கொடுக்கிறீர்களல்லவா?பேராசிரியர்ஆம்இயற்கையின் பரிணாமக் கொள்கையின்படி அதுசரியே.

மாணவன்நன்றி ஐயா,நீங்கள் எப்போதாவது பரிணாம வளர்ச்சி என்பதை கண்களால் பார்த்ததுண்டா?(பேராசிரியர் மென்மையான புன்னகையுடன் வாதம் செல்லும் போக்கை உணர்ந்தவராக‌ மெதுவாக"இல்லை" என்பதாக தலையாட்டுகிறார்..)
மாணவன்
இன்னும் நிகழ்ந்துக் கொண்டேயிருந்தும் இதுவரை எந்த ஒரு அமைப்பினாலும் அவதானிக்கப்படாததும்நிரூபிக்கப்படாததுமான‌ பரிணாமக் கொள்கையை உங்கள் கருத்தாகப் போதிக்கிறீர்களே நீங்கள்விஞ்ஞானியாமதபோதகரா?(வகுப்பு ஆர்ப்பரிக்கிறது...)
மாணவன்மாணவர்களேஉங்களில் யாராவது நமது பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?
(
வகுப்பு சிரிப்பலையில் மூழ்கியது...)


மாணவன்:
மாணவர்களேஉங்களில் யாராவது நமது பேராசிரியரின் மூளையின் சத்தத்தைக் கேட்டிருக்கிறீர்களா,தொட்டு உணர்ந்ததுண்டாநுகர்ந்ததுண்டா?
உங்களில் யாரும் இதற்கு முன்வரப்போவதில்லைஇதனால் என்ன தெரிகிறதுஅறிவியல் விதியானதுகூறும் வழிகாட்டுதல்களின்படி ஆய்வின் மூலமோ ஒரு அறிக்கையின் மூலமோ நிகழ்த்திக் காட்டப்படவேண்டிய சோதனை முறைமைகளின் மூலமோ உங்களுக்கு மூளை இருப்பதைநீருபிக்கமுடியவில்லைஇந்த நிலையில் உங்கள் நான் பணிவுடன் உங்களைக் கேட்கிறேன்நீங்கள்நடத்தும் பாடத்தை நாங்கள் எப்படி நம்ப முடியும்?
(
வகுப்பில் அமைதி...பேராசிரியரோ வாயடைத்தவராக அந்த மாணவனை பிரமிப்புடன்பார்த்தவராக...)
பேராசிரியர்தம்பி நீ அதையெல்லாம் ஒரு நம்பிக்கையுடன் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். 
மாணவன்:
அதைத்தான் ஐயா நானும் சொல்லுகிறேன்;கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள உறவுக்குஅடிப்படையானதுமாறாததும் உறுதியானதுமான நம்பிக்கையாகும்அதுவே அனைத்தையும் நகரவும்இயங்கவும் வைத்துக் கொண்டிருக்கிறது;

 (அந்த மாணவன் யார் தெரியுமாவிஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum