அறிந்தும் தவறுசெய்தால்?.....
Tue Nov 21, 2017 9:49 pm
அறிந்தும் தவறுசெய்தால்?.....
-------------------------------
அறியாத ஒருவன் தவறு செய்வதை ஆண்டவர் மன்னிக்கிறார், அவனை விடுவிக்கிறார்! அவனை தனக்கு ஊழியக்காரனாயும் மாற்றிவிடுவார்! மந்திரவாதிகள் எத்தனையோபேர் சுவிசேஷம் சொல்லுகிறார்கள்! ஆனால்!......
இயேசுவை அறிந்த, பேதுருவின் வாரிசென்று பீற்றுகிற ரோமன் கத்தோலிக்க சபை மேய்ப்பர்கள்
வத்திக்கானில் மரித்துப்போனவர்களின் மண்டையோடுகளையும், எலும்புகளையும் கையில் ஏந்தி, கடவுளுக்குச் சேரவேண்டிய துதியை சாத்தானுக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்!
"நாங்கள் மரித்துப்போன புனிதர்களையல்லவா வணங்குகிறோம்?... அவர்கள் உடற்பாகங்கள் அழியாமல் இருப்பது புதுமையல்லவா?... அவர்கள் எங்களுக்காக பரிந்து பேசுவார்களல்லவா?...." என்று இவர்கள் கூறினாலும் வேதம் சொல்லுகிறது,
"உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?"
(ஏசாயா 8:19)
"உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை."
(பிரசங்கி 9:6)
"மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்;"
(உபாகமம் 18:11-12)
இது அவர்களது கையிலிருக்கும் விவிலியத்திலுமிருக்கிறது! கண்ணாடிப்பேழையில், காய்ந்து கருவாடாகி, கோரமாக காட்சிதரும் இவை எப்படி யேசுவைக் காண்பிக்கும்? எப்படி பரலோகம் சேர்ப்பிக்கும்? இவை இருக்கும் ஆலயத்துக்குள், யார்துணையுமின்றி நள்ளிரவில் போகவே பயப்படும் ஆத்துமாக்கள், எதற்காக இவைகளை நம்பி மோசம்போகவேணும்? மறைந்தவர்களின் மண்டையோட்டைத் தாங்கும் மறைபரப்பு மேய்ப்பர்களும் மண்டையோடாகி மக்கும் காலமும் வரும்!.... வேதத்துக்கு எதிராக விசுவாசிகளை தடம் புரட்டியதற்காய் இந்த மந்திரவாதிகள் கணக்கு ஒப்புவிப்பார்கள்!....
இயேசு சொல்கிறார்,
"காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்"
யோவான் 20:29
தாங்கள் யாரோ????.....
(Guyde Dunstan அவர்களுக்கு நன்றி)
Re: அறிந்தும் தவறுசெய்தால்?.....
Tue Nov 21, 2017 9:50 pm
தூதரின் கீழ்
விழுந்த தூதர்!.......
------------------------
ஒரு வயதான பெண் மிக்கேல் தூதனென்று நிறுவப்பட்ட சொரூபத்தினடியில் நின்று தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு நின்றாளாம்!
பக்கத்தில் நின்றவர், "ஆச்சி நீ தொடுவது மிக்கேல் சம்மனசின் காலின் கீழ் மிதிபட்டுக் கொண்டிருக்கும் சாத்தானை, கொஞ்சம் மேலே தொடணை" என்றாராம்! அதற்கு ஆச்சி, "அது தெரியும் எனக்கு, ஒருவேளை தவறி நரகத்துக்க போனால் அவர் பார்த்துக்கொள்வார்தானே, அதுதான்" என்றாளாம்!
இது நான் ரோமன் கத்தோலிக்கனாய் இருந்தபோது பூசையில் பாதர்
பிரசங்கத்தில் சொன்னது!....
நிஜமாகவே இந்நிலைதான்
நிறையபேருக்கு இருக்கிறது!
இயேசுவின் உரு என்று காண்பிக்கிற
வடிவங்களை தொட்டால் பரலோகம் போகமுடியாது! இயேசுவின் வார்த்தையால் தொடப்பட்டவனே பரலோகம் செல்வான்!... எதைத்தொடுவோம்?
வடிவத்தையா?.....................
வார்த்தையையா?.................
விழாத தூதரின் கீழ்
விழுந்த தூதர்!.......
------------------------
ஒரு வயதான பெண் மிக்கேல் தூதனென்று நிறுவப்பட்ட சொரூபத்தினடியில் நின்று தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு நின்றாளாம்! பக்கத்தில் நின்றவர், "ஆச்சி நீ தொடுவது மிக்கேல் சம்மனசின் காலின் கீழ் மிதிபட்டுக் கொண்டிருக்கும் சாத்தானை, கொஞ்சம் மேலே தொடணை" என்றாராம்! அதற்கு ஆச்சி, "அது தெரியும் எனக்கு, ஒருவேளை தவறி நரகத்துக்க போனால் அவர் பார்த்துக்கொள்வார்தானே, அதுதான்" என்றாளாம்! இது நான் ரோமன் கத்தோலிக்கனாய் இருந்தபோது பூசையில் சுவாமி
பிரசங்கத்தில் சொன்னது!....
நிஜமாகவே இந்நிலைதான்
நிறையபேருக்கு இருக்கிறது!
இயேசுவின் உரு என்று காண்பிக்கிற
வடிவங்களை தொட்டால் பரலோகம் போகமுடியாது! இயேசுவின் வார்த்தையால் தொடப்பட்டவனே பரலோகம் செல்வான்!... எதைத்தொடுவோம்?
வடிவத்தையா?.....................
வார்த்தையையா?.................
(Guyde Dunstan அவர்களுக்கு நன்றி )
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|