- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
சுவிசேஷத்தை அறிவித்தும்
Tue Jan 10, 2017 9:00 am
“… வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத மனுஷரு.... க்காக நான் பரிதபியாமலிருப்பேனோ.....” - யோனா 4:11
இயேசுகிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்த நான், அவரைப் பற்றி அறிவிக்க யாராவது என்னுடைய கிராமத்திற்கு வந்தால் அவர்களை மிரட்டி அனுப்பி விடுவேன். இந்நாட்களில் என் இருதயத்தில் வந்த வியாதியினிமித்தம் ஆறுமாதமே உயிர் வாழ்வேன் என்று டாக்டர் சொல்லி விட்டார். உயிர்வாழ விரும்பிய நான் தெய்வம் நமக்கு சுகம் தரும் என்று எல்லா புனித ஸ்தலங்களுக்கும் சென்றேன். எந்த பயனுமில்லை. கடைசியில் என் ஊருக்கு வரும் கிறிஸ்தவர்கள் இயேசு சுகம் தருவார் என்று சொன்ன வார்த்தைகள் என் நினைவில் வரவே, ஒரு கிறிஸ்தவ சபைக்கு செல்லலானேன். ஒரு சில வாரங்களுக்குள்ளே எனக்குள்ளே புதுபெலனும் மகிழ்ச்சியும் உருவாக, நான் மறுபடியும் டாக்டரை சந்தித்தேன். எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து பார்த்துவிட்டு நோயிருந்ததற்கான அறிகுறியே இல்லையென்று கூறினார்.
அளவற்ற மகிழ்ச்சியால் நிரம்பிய நான் ஆரம்பத்தில் இயேசுகிறிஸ்துதான் சுகம் கொடுத்தார் என்று நினைத்தேன். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல ஏதோ ஒரு தெய்வம் சுகம் கொடுத்ததென்று இயேசுவை மறந்து விட்டேன். அந்நாட்களில் ஒருமுறை விழிக்கையில் பூட்டிய அறைக்குள் வெண்ணுடை தரித்த ஒருவர் எல்லா ஜனங்களுக்காகவும் அழுகிறதையும், தானே மெய்யான தெய்வம் என்று சொல்வதையும் கேட்டேன். ஆரம்பத்தில் அவரை யாரென்று அறியாதிருந்த நான் ஒரு கிறிஸ்தவ சகோதரர் மூலம் அவர்தான் இயேசு என்று அறிந்து அவர் மேல் முழு விசுவாசத்தையும் வைக்கலானேன்.
அதற்குப் பின்பு பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், பஜார் போன்ற ஜனக்கூட்டம் நிறைந்த இடங்களை பார்க்கும்பொழுதெல்லாம் நான் தரிசனத்தில் பார்த்த இயேசுவின் அழுகுரலை கேட்பேன். பின்பு என்னையும் அறியாமல் நானும் அழுவேன். சிலநேரம் தூங்கி எழும்போதும் என் அருகே அவர் அழுதுகொண்டிருப்பதை உணர்வேன். “இயேசப்பா அழாதீங்க” என்று சொல்லியும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. எனக்கு சுகம் கொடுத்து, என் பாவங்களை நீக்கி இரட்சித்த இயேசுகிறிஸ்துவின் அழுகையை நிறுத்த வழி தேடினேன். ஜனங்கள் இயேசுவை அறியாமல் அழிகின்றார்கள் என்பதற்காகத்தானே அவர் அழுகிறார் என்று உணர்ந்த நான் அவரைக் குறித்து ஜனங்களுக்கு சொன்னால் அவர் அழுகையை நிறுத்த முடியும் என்று சொல்லி அன்றிலிருந்து நான் பார்க்கிற ஒவ்வொருவரிடமும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் இயேசுவின் அன்பைக் குறித்து சொல்ல ஆரம்பித்தேன். அந்த ஆரம்பம்தான் இன்றைக்கு கிராம மிஷனெரி இயக்கம் என்னும் குழுவாக, குடும்பமாக செயல்பட்டு வருகிறது. இயேசுவின் கண்ணீரைத் துடைத்து அவரை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம்.
பிரியமானவர்களே!
தேவன் இவ்வுலகத்திலுள்ள ஒவ்வொருவரையும் எல்லையில்லாத அன்போடு நேசிக்கிறார். அவர் அன்பிற்கு தூரமாயிருக்கும் ஜனங்களை பரிதவிப்போடு தேடிக்கொண்டிருக்கிறார். அவருடைய இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றி அவரை மகிழ்விக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நம்முடைய சாட்சியுள்ள வாழ்க்கையின் மூலமும் பிறருக்கு சுவிசேஷத்தை அறிவித்தும் நாம் இயேசுவை மகிழ்விக்க இவ்வாண்டிலே தீர்மானிப்போம். இதன்மூலம் நிச்சயம் பரலோகம் மகிழும்.
- Bro.K.டேவிட் கணேசன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|