- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
நமக்குரிய நீதியின் கீரிடம்
Tue Jan 10, 2017 8:50 am
“...நீதியின் கீரிடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்;…” - 2தீமோ.4:8
ருமேனியா நாட்டில் ரிச்சர்ட் உம்பிராண்ட் என்ற தேவ ஊழியர் கர்த்தருடைய வேலையை செய்து, கர்த்தருக்காய் வைராக்கியமாய் வாழ்ந்து வந்தார். தேவனுடைய வேலையை செய்ததினிமித்தம் அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு அவரை கைது செய்து சிறையிலடைத்தது. சொல்லிமுடியாத துன்பங்களை சிறையில் அனுபவித்தார். இரும்பு கம்பிகளால் அவருடைய உடலை துளைத்தனர். இருட்டு அறையில் அடைத்து பலவாறாக பேசி அவரை மூளைச்சலவை செய்தனர். சரியான உணவும் கொடுக்காமல் துன்பப்படுத்தினர்.
இச்சூழ்நிலையில் அவரின் மனைவியையும் சிறையிலடைத்தனர். அவருடைய ஒரே மகன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தனித்து விடப்பட்டான். ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய அன்பை விட்டு பின்வாங்கவில்லை.
கிறிஸ்துவின் அன்பு உம்பிராண்ட்டின் இருதயத்தை நிறைத்தது. தேவ ஆவி அவரை முழுவதுமாய் ஆட்கொண்டது. அநேக சித்ரவதைகள், உபத்திரவங்கள், பாடுகள், பசி, பட்டினி, தனிமை எதுவும் அவரை அசைக்கமுடியவில்லை. “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” என்று வைராக்கியமாய் நின்றார். கிறிஸ்துவை மறுதலிக்காமல் ஆண்டவருக்காய் உறுதியாய் இருந்ததைப் பார்த்து அவ்வரசாங்கம் ஒன்றும் செய்யமுடியாமல் அவரை விடுதலை செய்தது.
சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்த அவர் ஆண்டவருக்காய் அநேக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணி, மகிமையாய் தன்னுடைய ஓட்டத்தை முடித்து, என்றென்றுமுள்ள வாடாத ஜீவ கிரீடத்தை பெற்றார். அப்போஸ்தலனாகிய பவுலும் சத்தியத்தினிமித்தம் வைராக்கியமாய் வாழ்ந்து பல பாடுகள், உபத்திரவங்கள், கட்டுகள், நாசமோசங்கள், அடிகள், காவல்களை அனுபவித்தார். எதுவும் அவரை அசைக்க முடியவில்லை. பின் நல்ல போராட்டத்தைப் போராடி ஜெயமாய் ஓட்டத்தை முடித்தார்.
பிரியமானவர்களே!
நாமும் எப்பொழுதும் இயேசுகிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டு தேவ ஆவியால் நிறைந்து விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாகக் காணப்படுவோம். ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. எனவே நாம் இந்த புது வருடத்தில் தேவனுக்காக பாடுகளை அனுபவிக்கவும் அழிந்துபோகிற ஆத்துமாக்களுக்காய் திறப்பில் நின்று ஜெபிக்கவும் தீர்மானம் எடுத்து செயல்படுவோம். இதை கருத்தோடும் கவனத்தோடும் நிறைவேற்றுவோமானால் தேவன் நமக்கு வைத்திருக்கிற ஓட்டத்தில் ஜெயமுடன் ஓடி முடித்து நமக்குரிய கிரீடத்தை பெற்றுக்கொள்வோம்
- Mrs. சாந்தி சுந்தர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|