- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்
Tue Jan 10, 2017 8:47 am
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.” – சங்கீதம் 34:1
டிரிங்..டிரிங் என்ற பெல்சத்தம் கேட்டவுடன் அவரவர் பேக்கை எடுத்துக் கொண்டு சிலர் ஆட்டோவிலும் ஸ்கூல் பஸ்ஸிலும் சென்றார்கள். ஸ்கூல் முடிந்த உடன் எல்லோரும் ஜாலியாக அவரவர் வீட்டிற்கு கிளம்பினார்கள். சாம் மட்டும் நடந்தே போனான்.
“எனக்கும் சைக்கிள் இருந்தால் நல்லா இருக்குமே” என்று ஆசைப்பட்டான். வீட்டிற்கு வந்து கோபத்தோடு பேக்கை தூக்கிப்போட்டான்.
அம்மா கேட்டாங்க, “ என்ன சாம் கோபமா இருக்கியா?” “ஆமாமா, என் கிளாஸ் பசங்க எல்லோரும் சைக்கிள் வைச்சிருக்காங்க. எனக்கு மட்டும் சைக்கிள் இல்ல” என சுருங்கிய கண்களோடு கோபத்தை வெளிப்படுத்தினான்.
“சரிப்பா, நம்ம ஜெபம் பண்ணுவோம். இயேசப்பா கண்டிப்பா தருவார்கள்” என்றார்கள் அம்மா.
சாம் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பமாக இருந்தாலும் பக்தியுள்ள குடும்பம். அவனது பெற்றோர் கொஞ்ச வருமானத்திலும் எப்போதும் தேவனை துதித்துக்கொண்டிருப்பார்கள். இது சாமுக்கு எரிச்சலாக இருந்தது. எல்லா பிள்ளைகளும் Schoolக்கு போகும்போது செருப்பு போட்டு போவார்கள். சாம் மட்டும் வெறுங்காலோடு நடந்து செல்வது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. செருப்பு பிய்ந்து இரண்டு வாரமாகியும் அப்பா இன்னும் வாங்கி கொடுக்கவில்லையே என்ற கோபம் வேறு!
ஒருநாள் பள்ளி முடிந்து திரும்பும்போது, ரோட்டில் இரண்டு சிறுவர்கள் மெதுவாக செல்வதை கவனித்தான். அதில் ஒருவனுக்கு ஒரு கால் முட்டிக்கு கீழ் இல்லாமல் இருந்தது. அவன் சத்தமாக சிரித்துக்கொண்டு ஜோக் அடித்து நொண்டி நொண்டி நடந்து சென்றான். அடுத்தவன் அவன் தோளில் கையை வைத்திருந்தான். அவனுக்கு பார்வை இல்லை என்பதை பார்த்த உடன் தெரிந்து கொள்ள முடிந்தது. கண் தெரியாதவன் அவன் ஜோக்கை கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். சாம் இதைக் கண்டு மலைத்துப்போனான்.
ஒரே காலுடைய இந்த பையன் எவ்வளவு திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறான். கண் தெரியாத பையனிடம் காணப்படும் சந்தோஷம் இரண்டு கால்கள் உடைய என்னிடம் இல்லையே! இரண்டு நல்ல கால்கள் இருந்தும் நான் குறை கூறிக்கொண்டும், கோபப்பட்டுக்கொண்டும் இருக்கிறேனே என வருந்தினான். காலில் செருப்பு இல்லையே என்பதை மறந்து, தன் இரண்டு கால்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்தினான். அவன் முகத்தில் அளவில்லா புன்னகை மலர்ந்தது.
செல்லக்குட்டிகளே!
இல்லாத ஒன்றிற்காக ஆசைப்படுவதை விட்டுவிட்டு இருக்கிற அநேக நன்மைகளை நினைத்து ஆண்டவரை துதிப்பாயானால் இந்த புதுவருடம் உனக்கு ஆசீர்வாதமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சரியா!
- Mrs. ஜீவா விஜய்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|