- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
மோடியின் முகமூடி கிழிந்தது
Sat Dec 03, 2016 8:12 am
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: மோடியின் முகமூடி கிழிந்தது
Sat Dec 03, 2016 8:31 am
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: மோடியின் முகமூடி கிழிந்தது
Sat Dec 03, 2016 8:39 am
[ltr]#மோடிக்கு_உணவு[/ltr]
[ltr]#ஒருகிலோ_30000ரூபாயில்_காளான்[/ltr]
மக்களுக்கு எளிமையைப் போதிக்கும் 10லட்சம் கோட்சூட் மோடி.
செல்லக்காசு பிரச்சனையில் செல்லாக்காசு மோடி 4நாட்களுக்கு முன்பு 5செல்லாக்காசு ஐடியா கொடுத்தார்
கூட்டாக சேர்ந்து போய் பொருட்களை வாங்குங்கள்
மலிவுவிலை உணவகத்தில் உணவருந்துந்துங்கள்.
500க்கு அல்லது குறைந்த செலவில் கல்யாணம் நடத்துங்கள்
கேஷ்லெஸ் பரிவர்த்தனனைக்கு உடனே மாறுங்கள்
மொத்தத்தில் சிக்கனமாக இருங்கள் என ஓதியது சாத்தான்
மக்களுக்கு எளிமை உபதேசம்
மோடிக்கோ ஆடம்பர உல்லாசம்
பேனா,கைக்கடிகாரம், கோட்சூட்டில் ஏற்கெனவே நாறிப்போன மோடி
இப்போது சாப்பாடு விசயத்திலும் நாறிப் போயுள்ளார்.
ஹரியானாவில் மலையோர கிராமங்களில் மே,ஜூன் மாதங்களில் மட்டும் அறுவடை செய்யும் ஒருவகை உயர்தர காளான்தான் மோடியின் விருப்ப உணவு
அதன் விலை கிலோ 30000/ரூபாய்.
இந்த ஊதாரித்தனம் பிரதமரான பிறகு தொடங்கியதில்லை குஜராத்தில் பதவிக்கு வந்ததிலிருந்தே இதே உணவுதானாம்
வங்கியில் நமது உழைத்த சொந்தப் பணத்தில் 2000கூட எடுக்கமுடியவில்லை
24,000உச்சவரம்பு விதித்திருக்கிறார்கள்
இவரோ 30000க்கு காளான் சூப்பு சாப்பிடுகிறார்
[ltr]#ஒருகிலோ_30000ரூபாயில்_காளான்[/ltr]
மக்களுக்கு எளிமையைப் போதிக்கும் 10லட்சம் கோட்சூட் மோடி.
செல்லக்காசு பிரச்சனையில் செல்லாக்காசு மோடி 4நாட்களுக்கு முன்பு 5செல்லாக்காசு ஐடியா கொடுத்தார்
கூட்டாக சேர்ந்து போய் பொருட்களை வாங்குங்கள்
மலிவுவிலை உணவகத்தில் உணவருந்துந்துங்கள்.
500க்கு அல்லது குறைந்த செலவில் கல்யாணம் நடத்துங்கள்
கேஷ்லெஸ் பரிவர்த்தனனைக்கு உடனே மாறுங்கள்
மொத்தத்தில் சிக்கனமாக இருங்கள் என ஓதியது சாத்தான்
மக்களுக்கு எளிமை உபதேசம்
மோடிக்கோ ஆடம்பர உல்லாசம்
பேனா,கைக்கடிகாரம், கோட்சூட்டில் ஏற்கெனவே நாறிப்போன மோடி
இப்போது சாப்பாடு விசயத்திலும் நாறிப் போயுள்ளார்.
ஹரியானாவில் மலையோர கிராமங்களில் மே,ஜூன் மாதங்களில் மட்டும் அறுவடை செய்யும் ஒருவகை உயர்தர காளான்தான் மோடியின் விருப்ப உணவு
அதன் விலை கிலோ 30000/ரூபாய்.
இந்த ஊதாரித்தனம் பிரதமரான பிறகு தொடங்கியதில்லை குஜராத்தில் பதவிக்கு வந்ததிலிருந்தே இதே உணவுதானாம்
வங்கியில் நமது உழைத்த சொந்தப் பணத்தில் 2000கூட எடுக்கமுடியவில்லை
24,000உச்சவரம்பு விதித்திருக்கிறார்கள்
இவரோ 30000க்கு காளான் சூப்பு சாப்பிடுகிறார்
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: மோடியின் முகமூடி கிழிந்தது
Sat Dec 03, 2016 8:40 am
Dhanasekaran Annamalai
15 hrs ·
இதெல்லாம் யார் பணம் மோடி? அப்பன் வீட்டு பணமா?
.
மோசடி மோடி பதவி ஏற்ற பின்..
.
முதல் பயணமாக 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூடான் சென்றார். அந்நாட்டுக்கு ரூ.4500 கோடி கடனுதவி அறிவித்தார்.
.
2014 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் சென்றார்.. அந்நாட்டுக்கு ரூ.6௦௦௦ கோடி கடனுதவி செய்தார்..
.
அதே ஆண்டு நவம்பர் மாதம் பிஜி சென்றார்.. அந்நாட்டுக்கு ரூ.495 கோடி கடனுதவி செய்தார்.
.
2015 ஆண்டு மார்ச் மாதம் செஷல்ஸ் சென்றார்.. ரூ.45௦ கோடி கடனுதவி செய்தார்.. மொரிசியஸ் சென்றார் அந்நாட்டுக்கு ரூ.3௦௦௦ கோடி கடனுதவி செய்தார்..
.
2015 ஆண்டு மே மாதம் மங்கோலியா சென்றார்.. ரூ.63௦௦ கோடி கடனுதவி அறிவித்தார்..
.
2015 அக்டோபர் மாதம் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உச்ச மாநாடில் ஆப்பிரிக்க நாடுகளின் கட்டமைப்புக்கு ரூ.65௦௦௦ கோடி கடனுதவி அறிவித்தார்..
.
இந்த ஆண்டு 2௦16 மே மாதம் ஈரான் சென்றார்.. சபஹர் துறைமுகத்தில் முனையங்கள் மற்றும் சரக்கு கப்பல் நிறுத்துமிடங்கள் கட்டுவதற்காக, இந்தியா ரூ.1,300 கோடி நிதியுதவி வழங்கும்.
.
இரண்டாவது கட்டமாக, சபஹர் மற்றும் ஜஹிதன் இடையே 500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் ரூ.2,000 கோடி வழங்கும் என்று அறிவித்தார்.
.
2௦16 ஜூன் மாதம் பங்களாதேஷ் சென்றார்.. இதுவரை எந்த நாட்டுக்கும் கொடுக்காத அளவிற்கு ரூ.13441 கோடி கடன் கொடுத்தார்..
.
2௦16 ஜூலை மாதம் கென்யா சென்றார்.. ரூ.1௦1 கோடி கடனுதவி செய்தார்.
.
அங்கிருந்து தான்சானியா சென்றார்.. 617 கோடி கடனுதவி செய்தார்..
.
2௦16செப்டம்பர் மாதம் வியட்னாம் சென்றார்.. அந்நாட்டுக்கு 3340 கோடி கடன் கொடுத்தார்..
.
இது போக இலங்கை குடிநீர் திட்டத்திற்கு இந்தியா ரூ.2675 கடனுதவி செய்தது..
.
இலங்கைக்கு டீசலில் இயங்கும் ரயில்கள் தயாரிக்க இந்த மாதம் பல கோடி ரூபாய் கடனுதவி செய்துள்ளது..
.
இதெல்லாம் யார் பணம் மோடி? அப்பன் வீட்டு பணமா?
நாடு இருக்கிற நிலையில் போகிற நாடுகளுக்கெல்லாம் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கோடி கோடியாக கடன் கொடுத்தாகிவிட்டது..
.
தற்பொழுது இருந்த சேமிப்பையும் வலுக்கட்டாயமாக பிடுங்கி வங்கியில் போட வைத்தாகிவிட்டது.
.
அதையும் எடுத்து எந்த எந்த நாட்டுக்கு கடன் கொடுக்க போகிறாரோ தெரியவில்லை.!!
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: மோடியின் முகமூடி கிழிந்தது
Sat Dec 03, 2016 8:49 am
இது பெரியார் தேசம்
Like Page
15 hrs ·
மோடியின் கறுப்புப்பண நடவடிக்கை முழுத் தோல்வி!
இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலப்படுத்துகிறது.
1000, 500 ரூபாய்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பினால் கறுப்புப்பணம் முழுமையாக ஒழிந்துவிடும் என்று மோடியும் ஜால்ராக் கூட்டமும் போலி அறிவு ஜீவிகளும் மக்களை நம்பவைத்தனர்.
எப்படி ஒழியும் என்று கேட்டால் அவர்கள் சொன்ன விளக்கம் இதுதான்.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய்களின் மதிப்பு 15.44 லட்சம் கோடி ரூபாய்கள்.
கண்டெய்னர்களில் கோடிகோடியாகப் பதுக்கிய பணத்தை வங்கியில் செலுத்த முடியாது. அப்படி செலுத்தினால் எண்பது சதவிகிதம் பிடிக்கப்பட்டு 20 சதவிகிதம் தான் அவர்களின் கையில் கிடைக்கும் என்பதுடன் கண்காணிப்பு வளையத்துக்குள் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்பதால் அதற்கு அஞ்சி கண்டெய்னர்கள் கணக்கில் பணம் பதுக்கியவர்கள் பழைய நோட்டை வங்கியில் செலுத்த மாட்டார்கள்.
அந்தப் பணத்துக்கு நிகரான புதிய ரூபாய்களை அரசு எடுத்துக் கொள்ளலாம். 15.44 லட்சம் கோடியில் பத்து லட்சம் கோடியாவது இப்படி மிச்சமாகும் என்று பில்டப் கொடுத்தார்கள்.
பத்து லட்சம் கோடி இல்லாவிட்டாலும் சரிபாதிப் பணம் டெபாசிட் செய்யப்படாவிட்ட்டால் கூட எட்டு லட்சம் கோடியாவது அரசுக்கு லாபமாகும் என்றும் மக்களுக்கு விளக்கம் சொன்னார்கள்.
இல்லாவிட்டால் கோடிகோடியாக பணத்தைச் செலுத்துவார்கள். அதில் எண்பது விழுக்காடு அரசுக்குக் கிடைக்கும். அது பெரிய வருமானமாக அமையும் என்றும் விளக்கம் சொன்னார்கள்.
ஆனால் நடந்தது என்ன?
பொதுமக்கள் பழைய ரூபாய்களுக்கு புதிய ரூபாய்களை மாற்றலாம் என்ற அரசின் முந்தைய அறிவிப்பின் படி வங்கி அதிகாரிகள் பொதுமக்களுக்கு கண் துடைப்புக்காக சிறிய அளவில் மாற்றிக் கொடுத்து விட்டு கறுப்புப் பண முதலைகளுக்கு கோடி கோடியாக புது நோட்டுக்களை 20 சதவிகித கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்தார்கள்.
அதாவது பொதுமக்களுக்கு மாற்றிக் கொடுத்ததாக கணக்கு காட்டி புது நோட்டுக்களாக கறுப்புப் பணம் மாற்றப்பட்டு விட்டன.
அடுத்ததாக கோடிகோடியாகப் பணம் வைத்துள்ளவர்கள் அதற்கு கள்ளச்ச் சந்தையில் தங்கம், வைரம், டாலர்களை வாங்கிக் கொண்டார்கள். தங்க வைர நகைகளின் பெரிய வியாபாரிகள் தங்கம் விற்ற பணம் என்று வங்கியில் டெபாசிட் செய்து டீலர்களுக்கு செக் போட்டு கொடுத்து மாற்றிக் கொண்டார்கள்.
இது தவிர பாஜக முக்கியஸ்தர்களும் வங்கி அதிகாரிகளை மிரட்டி பல கோடிகள் புது ரூபாய்கள் வாங்கி 20 சதவிகித கமிசன் அடிப்படையில் மாற்றிக் கொடுத்தார்கள். அவை மக்களுக்கு 4000 ஆக கொடுத்த கணக்கில் சேர்த்து விட்டார்கள்.
15.44 லட்சம் கோடி செல்லாத நோட்டுக்கள எண்பது சதவிகிதம் அரசுக்கு கிடைக்கும் அளவுக்கு பெரும் தொகை கீழாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படவில்லை.
தற்போதுள்ள நிலவரப்படி 13 லட்சம் கோடி ரூபாய்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. அதாவது பொதுமக்களுக்கு மாற்றிக் கொடுத்ததாக கணக்கு காட்டி இவை டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. அல்லது இரண்டு லட்சம் என்ற அளவில் பிரித்து போடப்பட்டுள்ளன. இதற்கு அரசு ஒன்றும் செய்ய முடியாது.
இன்னும் மக்களிடம் உள்ள செல்லாத நோட்டுக்கள் 2.44 லட்சம் ரூபாய்கள் தான். இது நிச்சயமாக பண முதலைகளின் கைகளில் இல்லை. வங்கியில் கணக்கு இல்லாத காரணத்தால் மாற்ற முடியாத சாதாரணக் குடிமகனின் பணம் தான் இது.
ஒன்னும் ஒருமாதம் உள்ளதால் இவையும் மக்களால் மாற்றப்பட்டு விடும்.
இப்போது புதிய நாட்டின் தேவை குறைந்துள்ளதால் 20 சதவிகித கமிசன் 10 சதமாக ஆகிவிட்டது. பத்தாயிரத்துக்கு ஒன்பதாயிரம் என்ற அளவுக்கு நிலமைமாறியுள்ளது என்றால் எல்லாம் வெள்ளையாக்கி அரசுக்கு அல்வா கொடுத்துள்ளனர்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து மக்கள் பட்ட கஸ்டம் தவிர வேறு எதுவும் அரசுக்கு லாபம் இல்லை.
எல்லாப் பணமும் வெள்ளைப் பணமாகவே வங்கிகளில் செலுத்தப்பட்டு விட்டன.
இதனால் அறிவற்றவர்கள் கற்பனை செய்தது போல் அரசுக்கு பைஸா பிரயோஜனம் இல்லை.
மேலும் அரசு எப்போது எதை செல்லாததாக அறிவிக்குமோ என்ற அச்சம் காரணமாக வங்கிப் பக்கமே தலைவைத்துப் படுக்க மக்கள் அஞ்சுவார்கள்.
பணமாகவோ, அல்லது அமெரிக்க டாலர்களாகவோ, தங்கமாகவோ மாற்றி வைத்துக் கொள்வோம் என்ற மன நிலைக்கு மக்கள் வந்தால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா கதையாக ஆகும். அரசு கடும் இழப்புகளைச் சந்திக்கும்.
இதை நாம் சொல்லவில்லை.
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் ஆதாரத்துடன் வெளியிட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளோம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் உள்ள விஷயம் கீழே:
இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இணையதளம், சற்று முன்பாக, ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆவணங்களை மேற்கோள் காட்டி, செல்லா நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 இலட்சம் கோடி ரூபாய்.
நவம்பர் 27 வரை வங்கியில் மக்களால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 8.5 இலட்சம் கோடி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக மொத்தம் சுமார் 13 இலட்சம் கோடி ரூபாய் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளது.
மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்த தகவலின்படி, 500, 1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15.44 இலட்சம் கோடி.
அப்படியானால், மேற்கொண்டு வர வேண்டியது 2.5 இலட்சம் கோடி மட்டுமே. காலக்கெடு முடிய இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் கோடியாவது வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்துவிட்டால், அரசுக்கு மிஞ்சப்போவது வெறும் 20-50 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே.
கிட்டத்தட்ட எல்லாப் பணமும் வெள்ளைப்பணமாக வந்துவிட்டால் கறுப்புப் பணம் எங்கே போனது?
இந்த சொற்ப தொகைக்காகவா மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் என்ற கேள்விக்கணைகள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் தருணம் வெகு தொலைவில் இல்லை.
பெரும் அதிர்ச்சி ஒன்று அரசுக்கு காத்திருக்கிறது
3 முதல் 5 இலட்சம் கோடி வரை திரும்ப வராது, நாம் ஆதாயம் பார்க்கலாம் என்றிருந்த அரசின் எண்ணத்தில் பெரும் இடி இறங்கியிருப்பதின் பிரதிபலிப்பு தான் மத்திய அரசின் சமீபத்திய தடுமாற்றங்கள்.
நாளைவரை மட்டுமே ஐநூறு ரூபாய் செல்லும் என்று, தாங்கள் முன்னர் அறிவித்ததற்கு முரணாக செயல்படுவதும் இந்த தடுமாற்றத்தின் ஒரு பகுதி தான்.
என்ன நடக்க போகின்றது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
எக்ஸ்ப்ரெஸ்சின் செய்தியை முழுமையாக படிக்க: http://indianexpress.com/…/what-black-money-government-may…/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|