தற்காப்பு - காத்திருப்பு - பலமான எதிர்த்தாக்குதல்
Fri Oct 21, 2016 7:24 am
ஒரு நாட்டின் மீது மற்ற நாடுகள் படையெடுத்து வரும்போது, எந்த நாடாயினும் தன் நாட்டின் வளங்களை காப்பாற்றவே முயற்சி செய்வர்!!
இந்த விஷயத்தில், இரண்டு கண்டங்களில் படர்ந்துள்ள ரஷ்யாவின் போர் யுக்தி மிகவும் ஆச்சரியமானது!
முதலில் தற்காப்பு!
பின் காத்திருப்பு!!
அதன்பின் பலமான எதிர்த் தாக்குதல்!!
நெப்போலியனுக்கு எதிராகவும் சரி, ஹிட்லருக்கு எதிராகவும் சரி, ரஷ்ய அரசாங்கம் தனது முக்கிய நகரத்தின் மக்களையும் அங்கிருக்கும் உணவுப் பொருட்களையும் ஒட்டு மொத்தமாக காலி செய்து வெறும் வெறிச்சோடிய தெருக்களை மட்டுமே விட்டு வைத்திருந்தது!! பலவற்றை தீக்கிரையாக்கியும் இருந்தது!!
ரஷ்ய எல்லையைக் காக்க ராணுவ வீரர்கள் இல்லை என்ற உற்சாகத்தில் நகரைச் சூறையாட ஆர்வத்துடன் முன்னேறிய படைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது!!
கொண்டு வந்த உணவுகள் காலியாகின, பசி ஆரம்பித்தது! குளிர் நடுங்க வைத்தது!!
பிரான்ஸ் படைகள் மிரண்டன! ஜெர்மானியப் படைகள் திணறின!!
நெப்போலியன் படைகள், பசியில் குதிரைகளைக் கொன்று உணவாக உட்கொண்டன!
ஹிட்லரின் ராணுவம், ரஷ்ய குளிரைத் தாங்க முடியாமல், டாங்குகளில் நிரப்பப்பட்ட எரிபொருளை தீமூட்டி குளிர் காய்ந்தது!!
இயற்கையின் முன் படைகள் வலிமை இழந்தன!!
வேடிக்கை மட்டுமே பார்த்த ரஷ்ய ராணுவம் களத்தில் இறங்கியது!!
பிரான்ஸின் சக்கரவர்த்தி நெப்போலியன் வீழ்த்தப்பட்டார்!
துளி ரத்தம் கூட சிந்தாமல் பல ஐரோப்பிய தேசங்களை தன் லாவகமான காய் நகர்த்தலால், மிரட்டியே பணிய வைத்த ஹிட்லரின் சாதுரியமான அரசியல் தந்திரம் ரஷ்ய மண்ணில் எடுபடாது போனது!!
நெப்போலியனையும் ஹிட்லரையும் வீழ்த்தியது ரஷ்ய வீரர்களல்ல ரஷ்ய குளிர் என்று வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறும் அளவுக்கு கோர தாண்டவமாடியது இயற்கை!!
இயற்கையைக் (ரஷ்யக் குளிரை) குறைத்து மதிப்பிட்டு வீழ்ந்தன இருபெரும் சாம்ராஜ்யங்கள்!!
இயற்கையின் துணையோடும் அடிமைத்தனம் என்றால் என்னவென்ற கேள்வியோடும் உலக அரங்கில் ஆகச்சிறந்த வல்லரசாக வலம் வருகிறது ரஷ்யா !!
இயற்கை மதிப்பிட முடியாத பலத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது!!
அதன் பலத்தை உணர மனித இனம் விரும்புகிறது!! அன்றாடம் இயற்கையைச் சீண்டுகிறது!! அதன் வளங்களை சூறையாடுகிறது!!
என்றோ ஒருநாள் மனித இனம் தப்பிக்கவே முடியாத அளவுக்கு இயற்கை கோரமானதாக மாறும்!!
அன்றைக்கு நாம் அழியப் போவதை விஞ்ஞான வளர்ச்சி முன்கூட்டியே அறிவிக்கும்!! அதைத் தவிர விஞ்ஞானத்தால் வேறு எதுவுமே செய்ய முடியாது!!
இயற்கை மனிதனுக்கு மட்டுமானதல்ல! அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானது!!
இயற்கையை நேசிப்போம்....!!
இயற்கையைப் புரிவோம்....!!
இயற்கையைக் காப்போம்...!!
மனித இனம் யுகங்கள் கடந்து வாழட்டும்....!!
வாழ்க இயற்கையுடன்....!!
இந்த விஷயத்தில், இரண்டு கண்டங்களில் படர்ந்துள்ள ரஷ்யாவின் போர் யுக்தி மிகவும் ஆச்சரியமானது!
முதலில் தற்காப்பு!
பின் காத்திருப்பு!!
அதன்பின் பலமான எதிர்த் தாக்குதல்!!
நெப்போலியனுக்கு எதிராகவும் சரி, ஹிட்லருக்கு எதிராகவும் சரி, ரஷ்ய அரசாங்கம் தனது முக்கிய நகரத்தின் மக்களையும் அங்கிருக்கும் உணவுப் பொருட்களையும் ஒட்டு மொத்தமாக காலி செய்து வெறும் வெறிச்சோடிய தெருக்களை மட்டுமே விட்டு வைத்திருந்தது!! பலவற்றை தீக்கிரையாக்கியும் இருந்தது!!
ரஷ்ய எல்லையைக் காக்க ராணுவ வீரர்கள் இல்லை என்ற உற்சாகத்தில் நகரைச் சூறையாட ஆர்வத்துடன் முன்னேறிய படைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது!!
கொண்டு வந்த உணவுகள் காலியாகின, பசி ஆரம்பித்தது! குளிர் நடுங்க வைத்தது!!
பிரான்ஸ் படைகள் மிரண்டன! ஜெர்மானியப் படைகள் திணறின!!
நெப்போலியன் படைகள், பசியில் குதிரைகளைக் கொன்று உணவாக உட்கொண்டன!
ஹிட்லரின் ராணுவம், ரஷ்ய குளிரைத் தாங்க முடியாமல், டாங்குகளில் நிரப்பப்பட்ட எரிபொருளை தீமூட்டி குளிர் காய்ந்தது!!
இயற்கையின் முன் படைகள் வலிமை இழந்தன!!
வேடிக்கை மட்டுமே பார்த்த ரஷ்ய ராணுவம் களத்தில் இறங்கியது!!
பிரான்ஸின் சக்கரவர்த்தி நெப்போலியன் வீழ்த்தப்பட்டார்!
துளி ரத்தம் கூட சிந்தாமல் பல ஐரோப்பிய தேசங்களை தன் லாவகமான காய் நகர்த்தலால், மிரட்டியே பணிய வைத்த ஹிட்லரின் சாதுரியமான அரசியல் தந்திரம் ரஷ்ய மண்ணில் எடுபடாது போனது!!
நெப்போலியனையும் ஹிட்லரையும் வீழ்த்தியது ரஷ்ய வீரர்களல்ல ரஷ்ய குளிர் என்று வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறும் அளவுக்கு கோர தாண்டவமாடியது இயற்கை!!
இயற்கையைக் (ரஷ்யக் குளிரை) குறைத்து மதிப்பிட்டு வீழ்ந்தன இருபெரும் சாம்ராஜ்யங்கள்!!
இயற்கையின் துணையோடும் அடிமைத்தனம் என்றால் என்னவென்ற கேள்வியோடும் உலக அரங்கில் ஆகச்சிறந்த வல்லரசாக வலம் வருகிறது ரஷ்யா !!
இயற்கை மதிப்பிட முடியாத பலத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது!!
அதன் பலத்தை உணர மனித இனம் விரும்புகிறது!! அன்றாடம் இயற்கையைச் சீண்டுகிறது!! அதன் வளங்களை சூறையாடுகிறது!!
என்றோ ஒருநாள் மனித இனம் தப்பிக்கவே முடியாத அளவுக்கு இயற்கை கோரமானதாக மாறும்!!
அன்றைக்கு நாம் அழியப் போவதை விஞ்ஞான வளர்ச்சி முன்கூட்டியே அறிவிக்கும்!! அதைத் தவிர விஞ்ஞானத்தால் வேறு எதுவுமே செய்ய முடியாது!!
இயற்கை மனிதனுக்கு மட்டுமானதல்ல! அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானது!!
இயற்கையை நேசிப்போம்....!!
இயற்கையைப் புரிவோம்....!!
இயற்கையைக் காப்போம்...!!
மனித இனம் யுகங்கள் கடந்து வாழட்டும்....!!
வாழ்க இயற்கையுடன்....!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|