விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்:
Sat Sep 17, 2016 6:51 am
சகோதரர் Ben Ny அவர்களின் சரவெடி பதிவு..
------------
விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்:
---------------
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 . ஆனால், காலந்தோறும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றன விதவிதமான வகைவகையாய் வேதப் புறக்கணிப்புகள். “வேதமே வெளிச்சம்”! ஆனால் அந்த வெளிச்சத்தை விரும்பாதவர்கள், அல்லது வெளிச்சத்த்தை மறைப்பவர்கள் எல்லோரும் இருளை விரும்புபவர்ள்தான். இங்கு எழுதப்பட்டிருப்பவை எல்லாம் சில உதாரணங்களே.
1. பழைய ஏற்பாட்டைப் புறக்கணிப்பது, அதில் தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் புறக்கணிப்பது. சிறு தீர்க்கர்களின் புத்தகங்கள் எதையும் திறந்துகூடப் பார்த்திராதது.
2. புதிய ஏற்பாட்டை மட்டுமே (சைஸ் சிறியதல்லவா) வாங்கி வாசித்தல். அதிலும். பவுலின் கடிதங்களைப் புறக்கணித்தல்.
3. இயேசு பேசிய வார்த்தைகள் மட்டுமே தேவனுடைய வார்த்தைகள்; மற்றவைகளெல்லாம் மனிதர்கள் எழுதியவை என்று போதிப்பது.
4. வேதம் திருத்தப்பட்டுவிட்டது என்று கூறுவது.
5. நம் கையில் இருக்கும் வேதம் முழுமையானதல்ல என்பது..
6. வேண்டுமென்றே சில புத்தகங்களைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள், அவையும் முக்கியம் என்று பிரசங்கிப்பது
7. நான்கு சுவிசேஷங்களும் ஒன்றுகொன்று முரண்பாடு கொண்டவை என்று சொல்வது
8. கிறிஸ்துவின் மகிமையை எப்படியாவது கெடுக்க/மறைக்க முயற்சிசெய்து பிசாசின் வேலையை எளிதாக்குவது
9. யூதா எழுதின நிருபத்துடன் வேதாகமத்தை முடித்துக் கொள்வது, அதாவது வெளிப்படுத்தின சுவிசேஷம் என்ற புத்தகத்தை மனதளவில் தள்ளுபடி செய்துவிடுவது
10. சங்கீதம் நீதிமொழிகளை மட்டும் 60 தரம் 60 வயதுவரை வாசித்துக் கொண்டு காலத்தை ஓட்டுவது
11. ஆவியானரே வேதாகமத்தின் அதிகாரி என்பதை அறியாமல் இருப்பது
12. வேதத்தை எழுதிய மனிதர்களின் சுயவெளிப்பாடுகள் அதில் கலந்திருக்கின்றன என்பது
13. வேத அடிப்படையில் வாழ்வது, அதாவது கிறிஸ்துவைப் போல் மாறுவது என்பதெல்லாம் நடக்காத காரியம் என்று முடிவுசெய்து முடிந்தவரை "நல்லவனாக" வாழ்ந்தால் போதும் வேதாகமத்தின் படி வாழ்வது அவசியமல்ல என்பது.
14. செழிப்பை மட்டும் போதித்துவிட்டு சிலுவையைப் புறக்கணிப்பது
15. வேதத்தில் இன்னும் நிறைவடையவில்லை என்பதும் இன்னும் வேத வசனங்களை தேவன் வெளிப்பாடுகளாக எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று வேதத்துக்குப் புறம்பான கட்டுக்கதைகளை சொல்லிக் கொண்டே இருப்பது
16. பிற மத நூல்களிலில் இருந்து கிறிஸ்து வெளிப்படுகிறார் என்று வேதத்தை விட்டு வெளியே இயேசுவைத் தேடுவது. அதற்கு, “அப்ப, மற்ற மதத்தினரை எப்படி இரட்சிப்புக்குள் வழிநடத்த?” என்று அறிவுஜீவியாய் கேள்வி கேட்பது.
17. சித்தர்கள் பாடினார்கள். எத்தர்கள் பாடினார்கள் எதையெல்லாமோ பிரசங்கித்து வேதத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதையே வேலையாகக் கொண்டிருப்பது
18. வேதத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை "ரொம்பக் கஷ்டம் என்று சாக்குப்போக்குச் சொல்லிவிட்டு குமுதம் விகடனிலேயே மூழ்கிக் கிடப்பது
19. முடிந்தவரை வேதத்தையே திறக்காமல் வாழ்க்கையை ஒப்பேற்றுவது.
20. வேதம் "வெயிட்"ட்டாக இருக்கிறது என்று கையில் தூக்காமல், எங்கும் எடுத்துச் செல்லாமல் இருப்பது.
21. தமிழே முக்கி முனகும் போது சின்னதாக பாக்கட் இலவச ஆங்கில வேதாகமத்தை(உபயம்: கிதியோனியர்) பின்பாக்கட்டில் வைத்துக் கொண்டு செல்வது
22. எங்க பாஸ்டர் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று வேத வார்த்த்தைகளை ஆராய எந்த ஆர்வமும் இல்லாமல் இருப்பது. (ஆராய்ச்சி வேதாகமங்கள் என்று உண்டு தெரியுமா?)
23. ஜெபக்கூட்டம் (இரவில் முடிந்தவுடன் புரோட்டா வழங்கப்படும்), ஆசிர்வாதக்கூட்டம் என்றெல்லாம் அலைந்தாலும் "வேத பாட ஆராய்ச்சிக் கூட்டம், வாருங்கள்" என்று யாராவது அழைத்தால் எப்படியாவது கழன்றுகொள்ளக் பிரயத்தனப்படுவது
24. வேதவசனம் ஒன்றை ஃபேஸ்புக்கில் சேர் செய்தவுடன் ஊழியம் செய்த நிறைவு ஏற்பட்டுவிடுவது
25. மணிக்கணக்கில் ஜெபம் கூடச் செய்யலாம், ஆனால் வேதம்? ஒரு நிமிடம் காலண்டரில் வசனம் வாசித்துவிட்டு திருப்தியாக நாளைத் துவங்கச் சென்றுவிடுவது
26. ஒரு வசனத்தைக் கூடக் காட்ட இயலாமல், சொந்தச் சரக்கில் மணிக்கணக்கில் புல்பிட்டில் பொழிந்துவிட்டு வருவது
27. “வேதப் புரட்டை அறிய வேதத்தை அறிய வேண்டும்” என்ற அறிவே இல்லாமல், டீவி வொர்ஷிப் நடனங்களிலேயே “ஆவிக்குறிய வளர்ச்சி” அடைந்துவிடலாம் என்று மகிழ்ந்திருப்பது..
28. காய்ச்சல் வந்தால், கனவு வந்தால் வேதத்தைத் தேடுவது. தலைமாட்டில் வைத்து பிசாசைத் துரத்துவது (!)
29. பொருத்தமில்லாத வசனங்களை சம்பந்தமில்லாத இடத்தில் சொல்வது
30. ஒரே வசனத்தை உலுக்கி, அதனுடன் தொடர்பான காரியங்கள் எதையும் அறியாமல், தன் வசதிக்கு மாற்றுவது ….
31. ஜெபி…ஜெபி, முழங்காலில் யுத்தம் செய் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு, வேதத்தின் பக்கமே சபையினைரைத் திருப்பாமல் இருப்பது. ( வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. நீதிமொழிகள் 28:9)
32. எல்லோரும் வேதம் வாசித்துவிட்டால், எல்லாவற்றையும் அறிந்து வேத பண்டிதர்களாகிவிட்டல், நான் எதைப் பிரசங்கம் பண்ணுவது என்று அரண்டுவிடுவது.
33. வேதத்தை அறிந்து தேர்ந்திருந்தாலும், அதன் மேல் நம்பிக்கை கொள்ளாமல் (இப்படியேல்லாம் நடந்திருக்குமா?, வாய்ப்பேயில்லை) இருப்பது.
.. இன்னும் பல (உங்களுக்குத் தெரிந்ததை கமண்ட்டில் இடுங்கள்)
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். (ஓசியா 8:12 )
------------
விதவித..வினோத.. விபரீத.. வேதப் புறக்கணிப்புகள்:
---------------
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 . ஆனால், காலந்தோறும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றன விதவிதமான வகைவகையாய் வேதப் புறக்கணிப்புகள். “வேதமே வெளிச்சம்”! ஆனால் அந்த வெளிச்சத்தை விரும்பாதவர்கள், அல்லது வெளிச்சத்த்தை மறைப்பவர்கள் எல்லோரும் இருளை விரும்புபவர்ள்தான். இங்கு எழுதப்பட்டிருப்பவை எல்லாம் சில உதாரணங்களே.
1. பழைய ஏற்பாட்டைப் புறக்கணிப்பது, அதில் தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் புறக்கணிப்பது. சிறு தீர்க்கர்களின் புத்தகங்கள் எதையும் திறந்துகூடப் பார்த்திராதது.
2. புதிய ஏற்பாட்டை மட்டுமே (சைஸ் சிறியதல்லவா) வாங்கி வாசித்தல். அதிலும். பவுலின் கடிதங்களைப் புறக்கணித்தல்.
3. இயேசு பேசிய வார்த்தைகள் மட்டுமே தேவனுடைய வார்த்தைகள்; மற்றவைகளெல்லாம் மனிதர்கள் எழுதியவை என்று போதிப்பது.
4. வேதம் திருத்தப்பட்டுவிட்டது என்று கூறுவது.
5. நம் கையில் இருக்கும் வேதம் முழுமையானதல்ல என்பது..
6. வேண்டுமென்றே சில புத்தகங்களைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள், அவையும் முக்கியம் என்று பிரசங்கிப்பது
7. நான்கு சுவிசேஷங்களும் ஒன்றுகொன்று முரண்பாடு கொண்டவை என்று சொல்வது
8. கிறிஸ்துவின் மகிமையை எப்படியாவது கெடுக்க/மறைக்க முயற்சிசெய்து பிசாசின் வேலையை எளிதாக்குவது
9. யூதா எழுதின நிருபத்துடன் வேதாகமத்தை முடித்துக் கொள்வது, அதாவது வெளிப்படுத்தின சுவிசேஷம் என்ற புத்தகத்தை மனதளவில் தள்ளுபடி செய்துவிடுவது
10. சங்கீதம் நீதிமொழிகளை மட்டும் 60 தரம் 60 வயதுவரை வாசித்துக் கொண்டு காலத்தை ஓட்டுவது
11. ஆவியானரே வேதாகமத்தின் அதிகாரி என்பதை அறியாமல் இருப்பது
12. வேதத்தை எழுதிய மனிதர்களின் சுயவெளிப்பாடுகள் அதில் கலந்திருக்கின்றன என்பது
13. வேத அடிப்படையில் வாழ்வது, அதாவது கிறிஸ்துவைப் போல் மாறுவது என்பதெல்லாம் நடக்காத காரியம் என்று முடிவுசெய்து முடிந்தவரை "நல்லவனாக" வாழ்ந்தால் போதும் வேதாகமத்தின் படி வாழ்வது அவசியமல்ல என்பது.
14. செழிப்பை மட்டும் போதித்துவிட்டு சிலுவையைப் புறக்கணிப்பது
15. வேதத்தில் இன்னும் நிறைவடையவில்லை என்பதும் இன்னும் வேத வசனங்களை தேவன் வெளிப்பாடுகளாக எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று வேதத்துக்குப் புறம்பான கட்டுக்கதைகளை சொல்லிக் கொண்டே இருப்பது
16. பிற மத நூல்களிலில் இருந்து கிறிஸ்து வெளிப்படுகிறார் என்று வேதத்தை விட்டு வெளியே இயேசுவைத் தேடுவது. அதற்கு, “அப்ப, மற்ற மதத்தினரை எப்படி இரட்சிப்புக்குள் வழிநடத்த?” என்று அறிவுஜீவியாய் கேள்வி கேட்பது.
17. சித்தர்கள் பாடினார்கள். எத்தர்கள் பாடினார்கள் எதையெல்லாமோ பிரசங்கித்து வேதத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதையே வேலையாகக் கொண்டிருப்பது
18. வேதத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை "ரொம்பக் கஷ்டம் என்று சாக்குப்போக்குச் சொல்லிவிட்டு குமுதம் விகடனிலேயே மூழ்கிக் கிடப்பது
19. முடிந்தவரை வேதத்தையே திறக்காமல் வாழ்க்கையை ஒப்பேற்றுவது.
20. வேதம் "வெயிட்"ட்டாக இருக்கிறது என்று கையில் தூக்காமல், எங்கும் எடுத்துச் செல்லாமல் இருப்பது.
21. தமிழே முக்கி முனகும் போது சின்னதாக பாக்கட் இலவச ஆங்கில வேதாகமத்தை(உபயம்: கிதியோனியர்) பின்பாக்கட்டில் வைத்துக் கொண்டு செல்வது
22. எங்க பாஸ்டர் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று வேத வார்த்த்தைகளை ஆராய எந்த ஆர்வமும் இல்லாமல் இருப்பது. (ஆராய்ச்சி வேதாகமங்கள் என்று உண்டு தெரியுமா?)
23. ஜெபக்கூட்டம் (இரவில் முடிந்தவுடன் புரோட்டா வழங்கப்படும்), ஆசிர்வாதக்கூட்டம் என்றெல்லாம் அலைந்தாலும் "வேத பாட ஆராய்ச்சிக் கூட்டம், வாருங்கள்" என்று யாராவது அழைத்தால் எப்படியாவது கழன்றுகொள்ளக் பிரயத்தனப்படுவது
24. வேதவசனம் ஒன்றை ஃபேஸ்புக்கில் சேர் செய்தவுடன் ஊழியம் செய்த நிறைவு ஏற்பட்டுவிடுவது
25. மணிக்கணக்கில் ஜெபம் கூடச் செய்யலாம், ஆனால் வேதம்? ஒரு நிமிடம் காலண்டரில் வசனம் வாசித்துவிட்டு திருப்தியாக நாளைத் துவங்கச் சென்றுவிடுவது
26. ஒரு வசனத்தைக் கூடக் காட்ட இயலாமல், சொந்தச் சரக்கில் மணிக்கணக்கில் புல்பிட்டில் பொழிந்துவிட்டு வருவது
27. “வேதப் புரட்டை அறிய வேதத்தை அறிய வேண்டும்” என்ற அறிவே இல்லாமல், டீவி வொர்ஷிப் நடனங்களிலேயே “ஆவிக்குறிய வளர்ச்சி” அடைந்துவிடலாம் என்று மகிழ்ந்திருப்பது..
28. காய்ச்சல் வந்தால், கனவு வந்தால் வேதத்தைத் தேடுவது. தலைமாட்டில் வைத்து பிசாசைத் துரத்துவது (!)
29. பொருத்தமில்லாத வசனங்களை சம்பந்தமில்லாத இடத்தில் சொல்வது
30. ஒரே வசனத்தை உலுக்கி, அதனுடன் தொடர்பான காரியங்கள் எதையும் அறியாமல், தன் வசதிக்கு மாற்றுவது ….
31. ஜெபி…ஜெபி, முழங்காலில் யுத்தம் செய் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு, வேதத்தின் பக்கமே சபையினைரைத் திருப்பாமல் இருப்பது. ( வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. நீதிமொழிகள் 28:9)
32. எல்லோரும் வேதம் வாசித்துவிட்டால், எல்லாவற்றையும் அறிந்து வேத பண்டிதர்களாகிவிட்டல், நான் எதைப் பிரசங்கம் பண்ணுவது என்று அரண்டுவிடுவது.
33. வேதத்தை அறிந்து தேர்ந்திருந்தாலும், அதன் மேல் நம்பிக்கை கொள்ளாமல் (இப்படியேல்லாம் நடந்திருக்குமா?, வாய்ப்பேயில்லை) இருப்பது.
.. இன்னும் பல (உங்களுக்குத் தெரிந்ததை கமண்ட்டில் இடுங்கள்)
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். (ஓசியா 8:12 )
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|