தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
யெகோவாவின் சாட்சிகள் யார்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யெகோவாவின் சாட்சிகள் யார்? Empty யெகோவாவின் சாட்சிகள் யார்?

Wed Sep 07, 2016 4:14 pm
யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நீங்கள் அவசியம் எழுத வேண்டும், அவர்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை என்று பலர் கேட்டிருந்தனர். இக்கூட்டத்தைக் குறித்து இப்பகுதியில் விளக்கமாகப் பார்ப்போம். 
முதலில் இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். 


சார்ள்ஸ் டேஸ் ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளையே இக்கூட்டம் சத்தியமாகப் பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார். 


இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்த ரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை. அவரது மனைவி, ரசல் ஆணவம் பி‍டித்த மனிதன் என்றும் எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றம் சாட்டி அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள் சொத்துக்களை தனக்குக் கொடுத்து விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின் பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரசல் நீதி மன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார். 


ரசல் இறந்த பின் ஜோசப் பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin Rutherford) இந்நிறுவனத்தின் தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன் ‍ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்கு “யெகோவாவின் சாட்சிகள்” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின் “புதிய உலக மொழி பெயர்ப்பு” வெளியிடப்பட்டது. இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றது.

இவர்கள் போதிப்பதென்ன?


யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம் கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.


1. காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும் உருவாக்கினார் என்று போதிக்கும் இக்கூட்டம் வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது. திரித்துவப் ‍போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனை.


2. கிறிஸ்து கடவுளால் ஆரம்பத்தில் படைக்கப்பட்டவர். இயேசு கிறிஸ்து நித்தியத்திலிருந்து கடவுளின் குமாரன் அல்ல என்று இக்கூட்டம் விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும், அவரே மைக்கல் என்ற தலைமைத் தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். கிறிஸ்து ஒருவிதத்தில் கடவுள்தான் ஆனால், யெகோவா போன்ற கடவுள் இல்லை என்பது இவர்களின் விசுவாசம். கிறிஸ்து தேவ குமாரனே‍யொழிய கடவுள் இல்லை. கிறிஸ்து மனிதனாக உலகில் தோன்றியபோது அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இருக்கவில்லை என்றும் ஆனால் முழு மனிதனாக மட்டும் இருந்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனிதனின் பாவ நிவாரணத்திற்காக கொடூரமான மரணத்தை சந்தித்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.


இதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து, கடவுள் என்பதை மறுக்கும் எவரும் வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியாகமம் முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து நித்தியத்திலிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was eternally the Son of God) என்று வேதம் தெளிவாகப் ‍போதிக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு தனது ‍தெய்வீகத் தன்மையில் எதையும் இழக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் கூற்றுப்படி கிறிஸ்து கடவுளல்ல.


3. பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்ல‍மையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத் தன்மை பொருந்தியவரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.


இது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவராக, ஓர் நபராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள் என்றும் வேதம் போதிக்கின்றது.


4.மனிதனுக்கு அழிவற்ற நித்திய ஆத்துமா (Immortal soul) இல்லை. ஆகவே அவன் இறந்தபின் காற்றோடு கலந்து இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. ஆனால் மனிதன் அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான் என்று வேதம் போதிக்கின்றது.


5. நித்திய நரகம் என்று ஒன்றில்லை என்றும், நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான் என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு மாறாக பாவியான மனிதன் இறந்தபின் நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான் என்று தெளிவாகப் போதிக்கின்றது.


6. கிறிஸ்துவின் மரணத்தின்போது அவரது சரீரம் அழிக்கப்பட்டதால் அது மீண்டும் உயிர்த்தெழ முடியாதென்றும், கிறிஸ்து ஆவியாக மட்டுமே உயிர்த்தெழுந்தார் என்றும் இக்கூட்டம் போதிக்கின்றது. இதுவும் கிறிஸ்துவின் உயிர்தெழுதல் பற்றிய வேத போதனைகளுக்கு முரணானது.


7. மனிதனுடைய நற்கிரியைகளின் மூலமே இரட்சிப்பு என்று இக்கூட்டம் நம்புகிறது. யெகோவாவிற்கு விசுவாசமாக இருந்து கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் யெகோவாவின் இராஜ்யத்தை அடைவார்கள் என்று இவர்கள் போதிக்கிறார்கள். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு என்பதெல்லாம் இவர்களுடைய அகராதியில் கிடையாது.


இது ஒரு போலிப்போதனை


கிறிஸ்தவ வேதத்திற்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதை மேலே நாம் பார்த்த யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு போலிப்போதனை. இதன் போதனைகள் வேதத்திற்கு முரணானது மட்டுமல்லாது இக்கூட்டத்தாரின் வழிமுறைகளும் மனித சுதந்திரத்திற்கு முரணானது. தமது கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அடிமைப்படுத்தும் வழிமுறைகளையும் இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.


தமது கூட்டத்தில் சேரும் தனி மனிதர்களும், குடும்பங்களும் அநேக விதிகளைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்திக் குடும்பங்களில் இருக்கும் சமாதானத்தைக் குலைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலும் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இக்கூட்டத்தில் சேர்ந்து இதன் அடிமைத்தனத்திற்கு தம்மைப் பலி கொடுத்தவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. இதில் சேர்ந்து தமது வாழ்வைப் பலி கொடுத்தவர்கள் அநேகர்.


தமது கூட்டத்துடன் சேர்ந்து விடுபவர்களுக்கு வேத போதனை என்ற பெயரில் மனதைக் குழப்பும் வேதத்திற்கு முரணான போதனைகளைக் கொடுத்து தமது கூட்டத்திலிருந்து போக முடியாத ஒரு மனநிலையை இவர்கள் உருவாக்கிவிடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் இணைந்தவர்களால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்கள் தமது இயக்கத்திற்கு மாறாக எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அதன் போதனைக்கு எதிராக சிந்திக்கக் கூடாது, செயல்படக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதற்கான Brain washing பணியை இக்கூட்டம் நடத்துகின்றது.


இவர்களைத் தவிர்ப்பதெப்படி?


வேத ஞானமில்லாதவர்கள் யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வரும்போது அவர்களை வெளியிலேயே வைத்து திருப்பி அனுப்பிவிடுவது நல்லது. அவர்களோடு பேச்சுக் கொடுத்து அவர்கள் போதனைக்கு இரையாகாமல் இருக்க இது உதவும். இவர்கள் நம் வீட்டிற்கு வரும்போது நேரடியாக விஷயத்திற்கு வராமல் உலக நடப்புகளைப் பற்றிப் பேசி நமது அபிப்பிராயத்தை அறிய முற்படுவது போல் நடித்து தமது போதனைகளை நம்மில் திணிக்கப் பார்ப்பார்கள். ஆகவே இவர்களுடன் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.


இக்கூட்டத்திற்குத் தம்மைப் பலி கொடுத்தவர்களை எப்படிக் காப்பது?


யெகோவாவின் சாட்சிகள் சிந்திக்க முடியாத ஒரு மனநிலையை வளர்த்துக் கொண்டுள்ளதால் அவர்களுடன் பேசும்போது நாம் கிறிஸ்துவைப் பற்றியும், உயிர்த்தெழுதல் பற்றியும், திரித்துவத்தைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் தெளிவாக வேதத்தைத் திறந்து வைத்துப் பேச வேண்டும். இப்போதனைகளுக்கு ஆதாரமான வேத வசனங்களை எடுத்துக் காட்டி விளக்க வேண்டும். அவர்கள் இவ்வசனங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்க வேண்டும். அவர்கள் ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றிற்குத் தாவ முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் மீண்டும் அவர்களை நாம் பேசும் ‍பொருளைக் குறித்து சிந்திக்கும்படிச் செய்ய வேண்டும். முதல் நாளிலேயே அவர்கள் நாம் கூறுவதைக் கேட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. இக்கூட்டத்தில் சேர்ந்து சிந்தித்து ஆராயும் பக்குவத்தை இழந்து மற்றவர்களை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் மன நிலையை இவர்கள் பெற்றுக் கொண்டிருப்பதால் நாம் தொடர்ந்து அவர்களுடன் பேசி வேத போதனைகளைக் குறித்து சிந்திக்கும்படிச் செய்யவேண்டும். இவர்களுடன் பேச முயல்பவர்களுக்கு நல்ல வேத அறிவு இருப்பதோடு சுருக்கமாகவும், தெளிவாகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லக் கூடிய பக்குவமும் இருக்க வேண்டும்.


இவற்றோடு நமது ஞானத்திலும், வல்லமையிலும், திறமையிலும் தங்கியிருக்காமல் நாம் கூறும் வேத வசனங்களைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவியானவர் இவர்கள் மனந்திரும்பும்படிச் செய்யுமாறு நாம் ‍‍ஜெபத்துடன் இப்பணியில் ஈடுபட வேண்டும். கர்த்தர் மட்டுமே இக்கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கும் விடுதலை கொடுக்க முடியும். கிறிஸ்துவை விசுவாசிக்கும்படிச் செய்ய முடியும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum