சர்க்கரை அளவு குறைய
Thu Aug 18, 2016 7:29 am
என் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. என் அம்மாவிற்க்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.
எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை எனது தாயார் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. என் அம்மாவிற்க்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள்.
சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது
எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை எனது தாயார் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. என் அம்மாவிற்க்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள்.
சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது
Re: சர்க்கரை அளவு குறைய
Fri Aug 19, 2016 10:58 pm
சர்க்கரை நோய்: நம்பிக்கைகள் Vs உண்மைகள்
"இனிப்பு அதிகமா சாப்பிடறவங்களுக்குத்தான் சர்க்கரை நோய் வரும்" என்று சிலர் சொல்வதுண்டு... "அதெல்லாம் பணக்கார வியாதி. நமக்கு எல்லாம் வராது. நமக்குத்தான் ரேஷன்லயே சர்க்கரை இல்லையே?!" - இது சிலரின் நம்பிக்கை. "சர்க்கரை நோய் வந்தா காப்பாற்றவே முடியாது, ஆளே அவ்வளவுதான்!" - இப்படி பயமுறுத்துகிறவர்களும் உண்டு.
பொதுவாகவே நோய்கள் குறித்த தவறான நம்பிக்கைகள் நம்மிடம் அதிகம்; அதிலும், சர்க்கரைநோய் குறித்த தவறான நம்பிக்கைகள் இன்னும் அதிகம். சர்க்கரை நோய் குறித்த மூன்று நம்பிக்கைகளும், உண்மையும் என்னென்ன என்று பார்ப்போம்.
நம்பிக்கை: என் தாய், தந்தை இருவருக்குமே சர்க்கரை நோய் இல்லை. எனவே, எனக்கும் வராது.
உண்மை: சர்க்கரை நோய் வருவற்கு மரபியல் காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். நம் வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், சர்க்கரை நோய் வந்தவர்கள் எல்லோருமே மரபியல் காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. வாழ்வியல்முறையில் உள்ள கோளாறுகள்தான் சர்க்கரை நோயைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல்பருமன், முறையற்ற தூக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்வதன்மூலம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்க முடியும்.
நம்பிக்கை: நான் ஸ்லிம்மாக இருக்கிறேன். எனவே, எனக்குச் சர்க்கரை நோய் வராது.
உண்மை: எடை அதிமாக இருப்பதும், ஒபிஸிட்டி என்பதும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அளவான எடையுடன் ஒல்லியாக இருப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான். ஆனால், பொதுவாக மேற்கத்தியர்களோடு ஒப்பிடும்போது இந்தியர்கள் எடை குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் உள்ள உடல் வாகைப் பெற்றிருக்கிறார்கள். அதாவது, சராசரியாக 65 கிலோ உடல் எடை உள்ள மேற்கத்தியரின் உடலில் தசை அதிகமாக இருக்கும். அதே எடை கொண்ட இந்தியரின் உடலிலோ தேவையற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும். நம் உள்ளுறுப்புகளில் படியும் தேவையற்ற கொழுப்பு இன்சுலின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதுதவிர, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, சராசரி எடையுடன் ஒல்லியாக இருந்தாலும்கூட சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
நம்பிக்கை: எனக்கு ப்ரீ டயாபடீஸ் உள்ளது. ஆகவே, எனக்கு சர்க்கரை நோய் வரக்கூடும்.
உண்மை: ப்ரீ டயாபடீஸ் நிலையை மதில்மேல் பூனை என்று சொல்லலாம். இவர்கள் மருத்துவர் ஆலோசனையை பின்பற்றி வாழ்க்கைமுறை மாற்றம், ஆரோக்கியவாழ்வு வாழ்ந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைத் தள்ளிப்போட முடியும். அல்லது வராமல் தடுக்கக்கூட முடியும். எனவே, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, சீரான எடை பராமரிப்பு போன்ற மாற்றங்களால் ப்ரீ டயாபடீஸ்காரர்கள் சர்க்கரை நோயை வெல்ல முடியும்.
- இளங்கோ கிருஷ்ணன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|