பொது அறிவு தகவல்கள்
Wed Jan 06, 2016 9:19 pm
1-முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணி நேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்.
(அம்மாடியோவ்)
2-வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
(Try பண்ணிப் பாருங்களேன்)
3-உங்களுடைய உதட்டின் நீளமும் ஆள்காட்டி விரலின் நீளமும் கிட்டதட்ட ஒரே அளவு தான்.
(அளந்து பாருங்கள்)
4-ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர். #லேரி!!
ட்விட்டரின் டிபால்ட் புரோபைல் பிக்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்.
நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு.!!!
( Check பண்ணி பாருங்க)
5-அமெரிக்காவில் வெளியாகும் கோகோ கோலாவின் சுவையும் சர்வதேச சந்தையில் வெளியாகும் கோகோ கோலாவின் சுவையும் வேறு..வேறு..!!!
(Taste பண்ணியிருக்கீங்களோ?)
6- பின்லாந்தில் நம்ம ஊரில் இருப்பது போல் மலிவு விலை இட்லிகடைகள் இல்லை.மாறாக
மலிவு விலை காலேஜ்கள் உண்டு.
கல்விகளுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
(அங்கேயே போய் படிக்கலாம்)
7-அடிக்கடி லைப்ரரி புத்தகங்கள் திருடு போவது வழக்கமான ஒன்று தான்.
அப்படி திருடு போன புத்தகங்களில் அதிகமாக திருடப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்த புத்தகம்..
கின்னஸ் புத்தகம் தானாம்.
( அடப் பாவமே)
8- ஆண்களுக்கான சட்டையை கண்டுபிடித்த நாடு எகிப்து.
(அட...!!)
9-நோக்கியா கம்பெனி ஆரம்பகாலத்தில்.. 1865- ல் மரவேலை செய்யும் நிறுவனமாக செயல்பட்டது.
(மாத்தி யோசிச்சிருக்காங்க)
10-நத்தை அதன் கண்ணை இழந்து விட்டால் கொஞ்ச நாளில் புது கண் உருவாகிவிடும்
(அம்மாடியோவ்)
2-வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
(Try பண்ணிப் பாருங்களேன்)
3-உங்களுடைய உதட்டின் நீளமும் ஆள்காட்டி விரலின் நீளமும் கிட்டதட்ட ஒரே அளவு தான்.
(அளந்து பாருங்கள்)
4-ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர். #லேரி!!
ட்விட்டரின் டிபால்ட் புரோபைல் பிக்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்.
நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு.!!!
( Check பண்ணி பாருங்க)
5-அமெரிக்காவில் வெளியாகும் கோகோ கோலாவின் சுவையும் சர்வதேச சந்தையில் வெளியாகும் கோகோ கோலாவின் சுவையும் வேறு..வேறு..!!!
(Taste பண்ணியிருக்கீங்களோ?)
6- பின்லாந்தில் நம்ம ஊரில் இருப்பது போல் மலிவு விலை இட்லிகடைகள் இல்லை.மாறாக
மலிவு விலை காலேஜ்கள் உண்டு.
கல்விகளுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
(அங்கேயே போய் படிக்கலாம்)
7-அடிக்கடி லைப்ரரி புத்தகங்கள் திருடு போவது வழக்கமான ஒன்று தான்.
அப்படி திருடு போன புத்தகங்களில் அதிகமாக திருடப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்த புத்தகம்..
கின்னஸ் புத்தகம் தானாம்.
( அடப் பாவமே)
8- ஆண்களுக்கான சட்டையை கண்டுபிடித்த நாடு எகிப்து.
(அட...!!)
9-நோக்கியா கம்பெனி ஆரம்பகாலத்தில்.. 1865- ல் மரவேலை செய்யும் நிறுவனமாக செயல்பட்டது.
(மாத்தி யோசிச்சிருக்காங்க)
10-நத்தை அதன் கண்ணை இழந்து விட்டால் கொஞ்ச நாளில் புது கண் உருவாகிவிடும்
Re: பொது அறிவு தகவல்கள்
Sun Aug 28, 2016 7:06 am
தெரிந்து கொள்வோம் !!
கடலில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும்
வேகமாக நீந்தும் ஆற்றல் பெற்றவை மர்லின்
என்னும் மீனும்; ஸ்வார்ட் என்னும் மீனும் ஆகும்.
இந்த மீன்கள் ஒரு மணி நேரத்தில் 75 மைல்
தூரத்தைச் சுலபமாக நீந்தும் ஆற்றல் பெற்றவை
குரங்குகளிலேயே மிக அதிகமாக வாழக்கூடியது உராங்குட்டான் தான்.
இக்குரங்கு 57 வயது வரை வாழ்ந்த வரலாறும் உண்டு.
ஜெர்மனியின் பிரான்க்பார்ட் பூங்காவில் சார்லி என்ற
58 வயது உராங்குட்டான் குரங்கு தான் தற்போது உலகிலேயே அதிக வயதுடைய குரங்கு.
பாக்கெட் மணி என்றால் ஆண்களுக்கு கைச்செலவுக்கு கொடுக்கப்படும் பணம்.
அது போல பெண்களுக்கு கைச்செலவுக்கு கொடுக்கப்படும் பணத்திற்கு 'பின்மணி' என்று பெயர்.
மின்சார பேட்டரி தயாரிக்க எடிசன் முயற்சி செய்த போது
8,000 மாதிரிகளைத் தயாரித்தும் வெற்றிக் கிடைக்கவில்லை.
'உங்கள் முயற்சி தோல்வியா?' என்று அவரிடம் கேட்டபோது
'இல்லை எனக்குப் பின் ஆராய்ச்சி செய்கிறவர்கள்
இந்த 8,000 மாதிரிகளை உருவாக்க வேண்டியதில்லை அல்லவா ?'
என்று பதில் சொன்னார் .கடைசியில் 10,000 மாதிரிகள்
செய்த பின் அவர் வெற்றி பெற்றார் .
விமானப் பணிப்பெண்கள் முதன் முதலாக 1930 முதல் தான் இடம் பெற்றார்கள்
இதற்கு முன் மருத்துவமனை நர்ஸுகளையே விமானப் பணிப்பெண்களாக நியமனம் செய்திருந்தார்கள்
உலகிலேயே மிக அதிக அளவில் உற்பத்தியாகும் காய்கறிகளில்
முதலிடம் வகிப்பது உருளைக்கிழங்கு
இரண்டாம் இடம் வகிப்பது தக்காளி.
அன்னாசிப்பழம் உண்மையில் பலம் அல்ல.
பல மலர்கள் சேர்ந்த செண்டுதான் அது.
இச்செடி பூக்கிறதே தவிர பலம் தருவதில்லை.இதற்கு விதையுமில்லை.
இதன் தலைப்பகுதியில் காணப்படும் சிறு இலைக்கொத்தை
வெட்டி நட்டுத்தான் அன்னாசிச் செடிகள் பயிரிடப்படுகின்றன.
மெக்சிகோ நாட்டில் வளரும் ‘சாபோடில்லா’ என்ற ஒரு வகை
சப்போட்டா பழ மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வித பால்
போன்ற பசையைத்தான், பப்புள்கம் தயாரிக்க
மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்
தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா மட்டும்தான்
மற்ற பறவைகள் அனைத்தும் தலையை
அண்ணாந்து தான் தண்ணீரை விழுங்கும்
தேனீக்கள் ஒரு பவுண்டு எடையுள்ள தேனைச் சேகரிக்க
1,40,000 ஆயிரம் மைல்கள் பறக்கின்றன. குறைந்தபட்சம் 5,000
மலர்களிலாவது அவை மொய்த்தால்தான் ஒரு டீஸ்பூன் தேனை சேகரிக்க முடியும்.
அதிகமான நாடுகளின் எல்லையைத் தொடும் நாடு,சீனாதான்.
இந்தியா, பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான்,கிர்கிஸ்தான்,
கசகஸ்தான், வடகொரியா, லாவோஸ், மங்கோலியா, வியட்நாம்,
மியான்மர், பூடான், ரஷ்யா மற்றும் நேபாளம் என
மொத்தம் 14 நாடுகளின் எல்லையைத் தொடுகிறது.
கடலில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும்
வேகமாக நீந்தும் ஆற்றல் பெற்றவை மர்லின்
என்னும் மீனும்; ஸ்வார்ட் என்னும் மீனும் ஆகும்.
இந்த மீன்கள் ஒரு மணி நேரத்தில் 75 மைல்
தூரத்தைச் சுலபமாக நீந்தும் ஆற்றல் பெற்றவை
குரங்குகளிலேயே மிக அதிகமாக வாழக்கூடியது உராங்குட்டான் தான்.
இக்குரங்கு 57 வயது வரை வாழ்ந்த வரலாறும் உண்டு.
ஜெர்மனியின் பிரான்க்பார்ட் பூங்காவில் சார்லி என்ற
58 வயது உராங்குட்டான் குரங்கு தான் தற்போது உலகிலேயே அதிக வயதுடைய குரங்கு.
பாக்கெட் மணி என்றால் ஆண்களுக்கு கைச்செலவுக்கு கொடுக்கப்படும் பணம்.
அது போல பெண்களுக்கு கைச்செலவுக்கு கொடுக்கப்படும் பணத்திற்கு 'பின்மணி' என்று பெயர்.
மின்சார பேட்டரி தயாரிக்க எடிசன் முயற்சி செய்த போது
8,000 மாதிரிகளைத் தயாரித்தும் வெற்றிக் கிடைக்கவில்லை.
'உங்கள் முயற்சி தோல்வியா?' என்று அவரிடம் கேட்டபோது
'இல்லை எனக்குப் பின் ஆராய்ச்சி செய்கிறவர்கள்
இந்த 8,000 மாதிரிகளை உருவாக்க வேண்டியதில்லை அல்லவா ?'
என்று பதில் சொன்னார் .கடைசியில் 10,000 மாதிரிகள்
செய்த பின் அவர் வெற்றி பெற்றார் .
விமானப் பணிப்பெண்கள் முதன் முதலாக 1930 முதல் தான் இடம் பெற்றார்கள்
இதற்கு முன் மருத்துவமனை நர்ஸுகளையே விமானப் பணிப்பெண்களாக நியமனம் செய்திருந்தார்கள்
உலகிலேயே மிக அதிக அளவில் உற்பத்தியாகும் காய்கறிகளில்
முதலிடம் வகிப்பது உருளைக்கிழங்கு
இரண்டாம் இடம் வகிப்பது தக்காளி.
அன்னாசிப்பழம் உண்மையில் பலம் அல்ல.
பல மலர்கள் சேர்ந்த செண்டுதான் அது.
இச்செடி பூக்கிறதே தவிர பலம் தருவதில்லை.இதற்கு விதையுமில்லை.
இதன் தலைப்பகுதியில் காணப்படும் சிறு இலைக்கொத்தை
வெட்டி நட்டுத்தான் அன்னாசிச் செடிகள் பயிரிடப்படுகின்றன.
மெக்சிகோ நாட்டில் வளரும் ‘சாபோடில்லா’ என்ற ஒரு வகை
சப்போட்டா பழ மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வித பால்
போன்ற பசையைத்தான், பப்புள்கம் தயாரிக்க
மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்
தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா மட்டும்தான்
மற்ற பறவைகள் அனைத்தும் தலையை
அண்ணாந்து தான் தண்ணீரை விழுங்கும்
தேனீக்கள் ஒரு பவுண்டு எடையுள்ள தேனைச் சேகரிக்க
1,40,000 ஆயிரம் மைல்கள் பறக்கின்றன. குறைந்தபட்சம் 5,000
மலர்களிலாவது அவை மொய்த்தால்தான் ஒரு டீஸ்பூன் தேனை சேகரிக்க முடியும்.
அதிகமான நாடுகளின் எல்லையைத் தொடும் நாடு,சீனாதான்.
இந்தியா, பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான்,கிர்கிஸ்தான்,
கசகஸ்தான், வடகொரியா, லாவோஸ், மங்கோலியா, வியட்நாம்,
மியான்மர், பூடான், ரஷ்யா மற்றும் நேபாளம் என
மொத்தம் 14 நாடுகளின் எல்லையைத் தொடுகிறது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|