உங்களுக்கு பயன் தேவையா ??? பிறருக்கு உதவுங்கள்....
Fri Aug 12, 2016 2:56 pm
+ ராமுவும் மாரியும் நண்பர்கள்.
+ அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது.
+ இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது.
+ அதேபோல் மாரியால் நடக்க முடியாது.
+ அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
+ ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது.
+ இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை.
+ அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும்.
+ மாரி சலிப்புடன் சொன்னான் என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது.
+ இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?
+ ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்:
+ நண்பா... யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது.
-ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும்.
-என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும்.
-நீ என் தோள் மேல் ஏறிக் கொள்.
-எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா.
-நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்
+ ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!
+ நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம்.
+ அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்.
+ ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட,
+ எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.
+ அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால்,
+ அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது
+ முயன்றால் முடியாதது எதுவுமில்லை
+ உங்களுக்கு பயன் தேவையா ???
பிறருக்கு உதவுங்கள்....
+ அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது.
+ இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது.
+ அதேபோல் மாரியால் நடக்க முடியாது.
+ அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
+ ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது.
+ இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை.
+ அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும்.
+ மாரி சலிப்புடன் சொன்னான் என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது.
+ இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?
+ ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்:
+ நண்பா... யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது.
-ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும்.
-என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும்.
-நீ என் தோள் மேல் ஏறிக் கொள்.
-எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா.
-நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்
+ ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!
+ நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம்.
+ அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்.
+ ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட,
+ எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.
+ அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால்,
+ அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது
+ முயன்றால் முடியாதது எதுவுமில்லை
+ உங்களுக்கு பயன் தேவையா ???
பிறருக்கு உதவுங்கள்....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|