தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
திராவிட இயக்கமும் ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய இயக்கமும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

திராவிட இயக்கமும் ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய இயக்கமும் Empty திராவிட இயக்கமும் ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய இயக்கமும்

Fri Jul 01, 2016 6:41 pm
கேள்வி : திராவிட இயக்கம் தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை கையாள்கிறதா? பிராமணர்களுக்கு அச்சுறுத்தலாக அது விளங்குகிறதா?


இதற்கு பதில் சொல்லும் முன்பாக சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன்.


ஆர்எஸ்எஸ் மற்றும் திராவிட இயக்கம் ஆகிய இரண்டுமே 1920களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டவை. ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய ஹிந்துத்வா சித்தாந்தத்தை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டது. திராவிட இயக்கம் சமூகநீதி, மேட்டிமை இனவாத எதிர்ப்பு, பகுத்தறிவு கொள்கைகளை மையமாக வைத்து தொடங்கப்பட்டது.
ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே இந்த இரண்டு இயக்கங்களுமே மிகத்தீவிரமாக வளர ஆரம்பித்தன. இந்திய அரசியலில் இவை இரண்டுமே முக்கியப்பங்காற்றின. ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னுடைய வரலாற்றில் சிலபல தடவை அதனுடைய தீவிரவாத செயல்களுக்காக தடை செய்யப்பட்டது. மகாத்மா காந்தி கொலையைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் கூட ஒருமுறை ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார். திராவிட இயக்க வரலாற்றில் வன்முறைச் செயல்களுக்காக ஒருமுறை கூட அது தடைசெய்யப்பட்டது கிடையாது. இந்த இரண்டு இயக்கங்களுமே மாநில ஆட்சியை கைப்பற்றின. ஆர்எஸ்எஸ் வடமாநிலங்களிலும் திராவிட கட்சிகள் தமிழகத்திலும் ஆட்சியை கைப்பற்றின. திராவிட கட்சிகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஐம்பது வருடங்களாக ஆட்சி செய்துவருகின்றன.


திராவிட இயக்கம் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை கையாண்டிருந்தால் , ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் வலுவாகவுள்ள குஜராத்தில் 3000 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டதைப் போல இங்கே தமிழகத்திலும் நடந்திருக்கும் அல்லவா? ஏன் அதுபோல நடக்கவில்லை? ஏனென்றால் திராவிட இயக்கம் மதவாத, சாதியவாத, இனவாத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதல்ல. மாறாக பகுத்தறிவும் சமூகநீதியுமே அதன் அடிப்படை . அதனால் தான் ஒரு பிராமணப் பெண்மணியின் தலைமையைக் கூட ஒரு திராவிடக் கட்சியால் ஏற்று செயல்பட முடிகிறது. அதுவே ஆர்எஸ்எஸ் தலைமைப் பதவிக்கு ஒரு பிராமணரைத் தவிர மற்றவர்களால் ஏன் வரமுடியவில்லை என்ற கேள்வியை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.


ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வா வலதுசாரிகள் இடப்பங்கீட்டுக்கு எதிரானவர்கள். ஆனால் திராவிட இயக்கம் பிராமணர்கள் உள்பட அனைவருக்குமான இட ஒதுக்கீட்டைத்தான் இன்றளவும் வலியுறுத்துகிறது. உங்கள் மனசாட்சிப்படி பதில் சொல்லுங்கள் : நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதைக்கூட முடிவு செய்து அதிகாரம் செய்ய நினைப்பவர்கள் யார்? திராவிட இயக்கமா ஆர்எஸ்எஸ் இந்துத்துவர்களா??


ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வ தலைவர்கள் தினந்தோறும் முஸ்லீம்களுக்கும் தலித்களுக்கும் எதிரான பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்கள். அதுபோல திராவிட கட்சிகளின் தலைவர்கள் யாராவது பிராமணர்களுக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுப்பதை நீங்கள் கேட்டதுண்டா? தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு பற்றி நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அப்படியிருந்தும் எஸ் வீ சேகர் என்ற பிராமணர் "ஈ வெ ராமசாமி ஒருநாளும் குளிக்கமாட்டார் " என்ற வசனத்தை திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நாடகம் ஒன்றிலேயே பயன்படுத்தினார். தமிழகத்தின் ஒரு திராவிட கட்சித்தலைவரை பார்த்து எச். ராஜா என்கிற பார்ப்பனர் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். திராவிட இயக்கத்தின் பிதாமகரான பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றார். ஐம்பதாண்டுகாலமாக இந்த மண்ணை ஆள்கிற சர்வ வல்லமை படைத்த திராவிட கட்சிகள் அவருக்கெதிராக எந்த வன்முறையாவது கையிலெடுத்தனவா? திராவிட இயக்கமோ கட்சிகளோ ஒருநாளும் வன்முறையை கையிலெடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் எஸ் வீ சேகர் அதிமுகவிலிருந்து வெளியேறிய போது கருணாநிதியிடம் நெருக்கம் காட்டினார். அப்போது அவரே தான் திமுகவில் பிராமணர்களுக்கும் முக்கிய பதவிகள் கிடைக்கும் என்று பேட்டி தந்தார் .


இதெல்லாம் பிராமணர்களுக்கு எதிரான மிரட்டலாக படுகிறதா? ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகவே படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுபோல எப்போதாவது பிராமணர் என்ற சாதிக்காக ஒருத்தர் கொலை செய்யப்பட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அக்லக் என்ற முதியவர் தனக்கு விருப்பமான உணவை சாப்பிட்டார் என்ற காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டாரே அதுபோல எந்த பிராமணராவது அவருக்கு பிடித்த உணவை உண்டார் என்ற காரணத்துக்காக கொலை செய்யப்பட்டதுண்டா சொல்லுங்கள்?


ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வ அமைப்புகள் கோயில் கருவறையில் பிராமணர்களைத் தவிர வேறு எவரும் நுழையக்கூடாது என்பதில் இன்றளவும் உறுதியாக உள்ளது . திராவிட இயக்கம் என்ன சொல்கிறது? அனைத்து சாதியினரும் கருவறைக்குள் நுழையவேண்டும் என்று தானே பாடுபடுகிறது?


இதெல்லாம் தெரிந்தும் நீங்கள் இல்லை திராவிட இயக்கம் பார்ப்பனர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சொல்வீர்களேயானால், திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய கொடையான உங்கள் சாதிப்பெயரை பேருக்கு பின்னால் போட்டுக்கொள்ள முடியாத கோபம் உங்களுக்கு இருக்கிறது என்றே அர்த்தம் . அடுத்த சாதியை சேர்ந்தவன் உங்களைப்போல படித்து முன்னுக்கு வருவதையும் உங்களுக்கு சரிசமமாக அமர்வதையும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றே அர்த்தம்.


நீங்கள் ஒருவேளை மோடி ஆதரவாளராக கூட இருக்கக்கூடும் . ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் , மோடி யால் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கார், பண்டித நேரு . யார் வேண்டுமானாலும் பிரதமராக முடியும் என்ற அவர் தந்த அரசியலமைப்பு சட்டம். நேரு வார்த்தெடுத்த ஜனநாயகம். ஆனால் இந்திய நாட்டுக்கே பிரதமராக முடிந்த மோடியால் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியாது . ஏனென்றால் மோடி நாட்டுக்கு வேண்டுமானால் தலைவராக இருக்கமுடியுமே தவிர மனு தர்ம வர்ணாசிரம அடுக்குப்படி அவர் பிராமணருக்குக் கீழே தான்!


இதன்பிறகும் பிராமணர்களுக்கு திராவிட இயக்கத்தால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா??


© Thameem Tantra
தமிழில் சுருக்கமாக Sivasankaran Saravanan
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum