தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தேவையற்ற விஷயங்களை உன் அடையாளமாகக் காட்டாதே Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேவையற்ற விஷயங்களை உன் அடையாளமாகக் காட்டாதே Empty தேவையற்ற விஷயங்களை உன் அடையாளமாகக் காட்டாதே

Thu Jun 16, 2016 11:12 pm
வயதான குரு ஒருவர் இருந்தார். எத்தனையோ ராஜாக்களும், மந்திரிகளும் அவரிடம் பயிற்சி பெற்றிருந்தாலும் அவர் பெரிய அளவில் ஆஸ்தி எதுவும் சேர்த்து வைத்துவிடவில்லை. அவருக்கு ஒரே ஒரு மகன். தன் ஒரே மகனுக்காகத் தான் எதையுமே சேர்த்து வைக்கவில்லை என்ற கவலை அவரது இறுதி நாட்களில் அவர் மனதை வேதனைப் படுத்தியது. ஒரு முடிவுக்கு வந்தார். 


அண்டை நாட்டின் அரசன் அவரது மாணவன்தான். அவனிடம் மகனை அனுப்பினால் ஏதாவது ஒரு அரசாங்க வேலை போட்டுத் தருவான். அப்புறம் அவன் வாழ்க்கை வறுமையில்லாமல் நகரும். மறுநாளே மகனை அழைத்து தனது எண்ணத்தைக் கூறினார். அவன் கையில் ஒரு சிறிய மூட்டையையும் கொடுத்து," மகனே! இதை அரசனிடம் காட்டு. அவன் உன்னை அடையாளம் கண்டு கொள்வான். உனக்கு வேண்டியதெல்லாம் செய்வான் " என்றார். மகனுக்கு அவரது யோசனை பிடித்திருந்தது. 


மறுநாள் அவரிடம் ஆசி பெற்றுக் கிளம்பினான். போகும் வழியில் , தந்தை கொடுத்த மூட்டையில் என்ன இருக்கும் என்று பார்க்க ஆசைப் பட்டான். " நிச்சயமாக ஏதேனும் விலை உயர்ந்த பொருளைத்தான் அப்பா ராஜாவுக்குப் பரிசாக அனுப்பி இருப்பார் " . ஆர்வமாய்ப் பிரித்தவன் அதிர்ந்து போனான். 

விலை உயர்ந்த எதுவும் அதில் இல்லை. அதற்குள் இருந்தவை எல்லாம் ஒரு சிவப்பு வர்ணம் பூசப்பட்ட பிரம்பும் , அங்கங்கே பெயர்ந்து போயிருந்த ஒரு மரத்தால் ஆன ஒரு வாளும், காவி நிறத்தில் இருக்கும் நைந்து போன ஒரு பழைய வஸ்திரமும்தான். மகனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. " சே! இதைப் போய் அப்பா ராஜாவுக்குப் பரிசாக அனுப்பியிருக்கிறாரே! இது எப்படி எனக்குப் பெருமை சேர்க்கும்? ராஜா மதிப்பாரா ? என்று குழம்பினான். 



அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவனுக்கும் ஏராளமான திறமைகள் இருந்தன. அவற்றைக் கொண்டு ராஜாவின் நன்மதிப்பைப் பெற முடியும் என்று நம்பினான். அவன் ஒரு நல்ல ஓவியன். சிற்பியும் கூட. வழியில் கிடைத்த ஒரு சிறிய மரத்துண்டில் அந்த நாட்டின் சின்னமான புறாவைத் தத்ரூபமாக செதுக்கி எடுத்துக் கொண்டான். காட்டில் கிடைத்த சருகுகளைக் கொண்டே ஒரு அழகான வீட்டின் உருவத்தை உருவாக்கினான். ஒரே கூழாங்கல்லைக் குடைந்து ஒரு சங்கிலியை உருவாக்கினான். அரண்மனை வாசலை அடைந்தான் . அந்த ராஜா எந்தக் கலைஞனையும் எடுத்த எடுப்பிலேயே அனுமதிப்பதில்லை. அவர்களின் திறமைக்கு சான்றான பொருட்களை முதலில் பார்த்து விட்டு , அவருக்கு விருப்பமானால் மட்டும் அனுமதிப்பார். 

" ராஜா நிச்சயம் என் திறமையில் மயங்கிப் போவார் " . சந்தோஷமாய் மரத்தில் செய்த புறாவை அனுப்பினான். அது திருப்பி அனுப்பப் பட்டது. கொஞ்சம் சோர்வுடன் சருகாலான வீட்டை அனுப்பினான். அது சுக்கு நூறாகப் பிய்க்கப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டது. 



கடைசியாய்க் கல்லில் செய்த சங்கிலியை அனுப்பினான். இம்முறை கொஞ்சம் பணம் மட்டும் பரிசாக அனுப்பப்பட்டது. இனி என்ன செய்ய? எப்படி அவரை சந்திக்க முடியும்? இனி வேறு வழியே இல்லை. கவலையோடு இருந்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தந்தை கொடுத்த மூட்டையைக் காவலனிடம் கொடுத்தான். 


சற்று நேரம் எதுவும் வரவில்லை. ஆனால் ராஜாவே விரைந்து வந்து அவனை அணைத்துக் கொண்டார். உள்ளே அழைத்துச் சென்றார். ராஜா கேட்டார்," இதை முதலில் கொடுக்காமல் ஏன் எதையோ அனுப்பினாய்" . அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. கண்களில் நீர் வழிய மொளனமாய் நின்றான். 


ராஜா சொன்னார், " இதோ இந்த பிரம்பு இருக்கிறதே ! இதை என் குரு என்னை அடிக்க மட்டுமே பயன்படுத்துவார். இதன் அடிக்கு பயந்தே பல நல்ல விஷயங்களை விரைவாய்க் கற்றேன். இந்த மரவாளைப் பார். எதிரியின் தலைகளை பந்தாடும் என் கரங்கள் இந்த வாளில்தான் பயிற்சி பெற்றன. இந்தக் காவி வஸ்திரம் நான் ஒரு முறை புதை குழியில் சிக்கியபோது என் குரு இதை வீசித்தான் என்னைக் காப்பாற்றினார். எனவே இம்மூன்றுமே எனக்கு விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள். இதை முதலிலேயே கொடுத்து அனுப்பி இருந்தால் நீ எப்போதோ உள்ளே வந்திருக்கலாமே ! தேவையற்ற விஷயங்களை உன் அடையாளமாகக் காட்டி உன் நேரமல்லவா வீணாகிப் போனது? " என்று கடிந்து கொண்டார்.


 செல்லமே! 


கிறிஸ்துவையே நம் அடையாளமாக நாம் காண்பிக்க வேண்டும். எத்தனையோ பேர் தமது அழியப்போகும் படிப்பையும், காரையும், வசதி வாய்ப்புகளையுமே தமது அடையாளமாகக் காட்டிக் கொண்டு இயேசப்பாவை மறைத்து விடுகின்றனர். ஆனால் அவரை ஒளித்து வைக்கின்றவர்களுக்கும் , மறுதலிக்கின்றவர்களுக்கும் என்ன நேருமென்று அறிவாயா?
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum