தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
டீ, காபி தவிர்ப்பது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

டீ, காபி தவிர்ப்பது எப்படி? Empty டீ, காபி தவிர்ப்பது எப்படி?

Thu Jun 09, 2016 9:23 am
ராஜமுருகன், படங்கள்: தி.விஜய், சி.சுரேஷ் பாபு

இரு சக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாகப் பிரித்து மெருகேற்றுவதைப்போல, மனித உடலின் எலும்புகளையும் தசைகளையும் தனித்தனியே பிரித்து விற்பனைப் பண்டமாக்கியிருக்கிறது நவீன மருத்துவ உலகம். டி.வி-யை ஒரு மணி நேரம் பார்த்தால், உயரமாக வளர்வதற்கு ஒரு பானம், ஊட்டச்சத்துக்கு ஒரு பானம், ஞாபகசக்திக்கு ஒரு பவுடர், எலும்புகளின் உறுதிக்கு இன்னொரு பவுடர் என ஆர்ப்பரிக்கின்றன விளம்பரங்கள். ஆனால், நம் அம்மா - அப்பாக்களும், அதற்கு முந்தைய தலைமுறையினரும் உடம்பின் ஒவ்வோர் உறுப்புக்கும் இப்படியா தனித்தனியாக போஷாக்கு புகட்டினார்கள்? இல்லையே! அவர்கள், அந்தந்த வட்டாரத்தில் விளைந்த சத்து மிகுந்த உணவுகளை உண்டார்கள்; இப்போதுபோல, வளர்வதற்கு 21 ஊட்டச் சத்துக்கள் அடங்கிய சத்து மாவு எதையும் தேடி ஓடவில்லை; வயதுவாரியாக உணவுகளைப் பிரிக்கவும் இல்லை. 
உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாடுபவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்பவர்கள், எடை குறைக்க/அதிகரிக்க விரும்புவோர் என, சகல தரப்பினருக்கும் விதவிதமான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஷிuஜீஜீறீமீனீமீஸீt திஷீஷீபீs எனப்படும் இந்த வகையான துணை உணவுகள், விளம்பர தம்பட்டம் அடிக்கின்றன. ஆனால், உண்மை நிலவரம் என்ன?
குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்கு மேல், தாய்ப்பால் மட்டுமே போதாது; மற்ற உணவும் கொடுக்கப்பட வேண்டும். குழந்தை என்பதால், அதன் செரிமான உறுப்புகளுக்கு ஏற்ற உணவு தர வேண்டும். அப்படி எந்த உணவு தர வேண்டும் என்பது, நமது குடும்பங்களில் காலங்காலமாக பழக்கத்தில் இருந்துவருவதுதான். ஆனால் நவீன காலமானது, நம்மிடம் இருந்து நேரத்தைப் பறித்துக்கொண்டுவிட்டது. குழந்தையைக் கொஞ்சுவதற்கே நேரம் ஒதுக்கவேண்டிய சூழ்நிலையில், குழந்தைகளுக்கான உணவுத் தயாரிப்புக்கு எங்கு இருந்து நேரம் ஒதுக்க? இதனால்தான், ஒருவித குற்றவுணர்வில் இருக்கும் பெற்றோர்களின் மனம், இயல்பாகவே விளம்பரங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படும் கவர்ச்சிகர வாக்கியங்களால் ஈர்க்கப்படுகிறது. டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் துணை உணவுகளை வாங்குகிறார்கள்.
டீ, காபி தவிர்ப்பது எப்படி? P48a
அதுபோன்ற டப்பா உணவுகளில், பெரும்பாலும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கிறது; மற்ற சத்துக்கள், மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் இந்தத் துணை உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகள் கொழுக்மொழுக் என இருப்பார்கள். ஆனால், அது புறத்தோற்றத்தில் மட்டும்தான். உடம்பின் உள்ளுறுப்புகளுக்கு அந்த உணவுகளால் எந்தப் பயனும் இல்லை.
கண்ணுக்குத் தெரியாத உள்ளுறுப்புகள் உறுதியாக வளர்வதுதான் ஒரு குழந்தையின் ஆயுளுக்கு ஆரோக்கியம் சேர்க்கும். துணை உணவுகள் அதற்கு உதவுவது இல்லை என்பதுடன், எதிர்மறை விளைவையும் உண்டாக்குகின்றன. பெண் குழந்தைகளுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. இதுவே கேழ்வரகை ஊறவைத்து, முளைகட்டிய பிறகு, அரைத்து, பால் எடுத்து, நீர் சேர்த்து, காய்ச்சிக் கொடுத்துப் பாருங்கள்... அது எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாமல், குழந்தையின் புற மற்றும் அக ஆரோக்கியத்தை உறுதிசெய்யும். இது சமச்சீரான உணவாக இருப்பதுடன், குழந்தைப் பருவத்தில் அவசியம் தேவைப்படும் சுண்ணாம்புச்சத்தையும் நிறைவாக அளிக்கும். அதோடு எலும்பு வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான ரத்த அணுக்கள் உற்பத்திக்கும் உதவிசெய்கிறது. மாதங்கள் செல்லச் செல்ல, நெல்லரிசிக் கஞ்சி, சாமைக் கஞ்சி, ஆவியில் வேகவைத்த வாழைப்பழம் என, குழந்தையின் வளர்ச்சியைத் தூண்டும் உணவு வகைகளைக் கொடுக்கலாம்.
கருவுற்ற தாய்க்கு வழக்கத்தைவிட அதிக ஊட்டச்சத்து தேவைப்படும். இதற்காக துணை உணவுகளை நாடாமல், இரும்புச்சத்துக்காக சிவப்பு முளைக்கீரை,                      சிவப்புக்கொடி பசலை, பச்சைக்கொடி பசலை, குத்துப்பசலை, பாலக்கீரை, வாரம் இருமுறை ஒரு துண்டு பழுத்த பப்பாளி, மாதுளை, சிவப்பு கொய்யா எனச் சாப்பிடலாம். இது, வயிற்றில் வளரும் குழந்தையின் ரத்த நாளங்களை வலுவாக்குகிறது. ஃபோலிக் ஆசிட் உள்ள உணவுகளான ஆரஞ்சு, முட்டை, முழு தானியங்கள், சுண்டல், நிலக்கடலை போன்றவற்றை உண்ணும்போது இந்த வகையான அமிலக் குறைபாட்டினால் வரும் ழிஜிஞி (ழிமீuக்ஷீணீறீ ஜிuதீமீ ஞிமீயீமீநீts) எனப்படும் நரம்புக் குறைபாடு, குறைப் பிரசவம், கருச்சிதைவு போன்றவை தவிர்க்கப்படும்.
குழந்தை பிறந்ததும் 'தாய்ப்பால் அதிகமாகும்’ எனக் கொடுக்கப்படும் துணை உணவுகளிலும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. தாய்ப்பால் அதிகமாக ஊறினாலும், உடம்பில் வேறு கெட்ட விளைவுகளை அது உருவாக்கலாம். இதைத் தவிர்த்து பாலூட்டும் தாய்மார்கள் கசப்பான உணவுகளை எடுத்துக்கொண்டாலே, போதுமான பால் குழந்தைக்குக் கிடைக்கும்.
துணை உணவுகளைப் பற்றி ஏன் இவ்வளவு தீவிரமாக விவாதிக்கவேண்டியிருக்கிறது என்றால், அவை எதுவும் செடியில் இயற்கையாகப் பூத்து, காய்த்து, கனிவது அல்ல. பல்வேறு வேதிப்பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு, நிறமிகள், மணமூட்டிகள் சேர்த்து, அவை உருவாக்கப்படுகின்றன. காய்கனிகளில் இருந்து தேவையான சத்துக்கள் கிடைக்கும்போது, அதில் 'பைட்டோ கெமிக்கல்’ எனும் கண்ணுக்குத் தெரியாத சத்தும் இருக்கிறது. அது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்து, சத்துக்களைக் கிரகிக்க உதவும். ஆனால், டப்பா உணவுகளில் பைட்டோ கெமிக்கல்கள் இல்லை. 'போஷாக்கு’ என்ற பெயரில் அந்த டப்பா உணவுகள் வெறும் கழிவுகளாக நம் உடலைவிட்டு வெளியேறுகின்றன.
இன்னொரு பக்கம், 'மூன்றே வாரங்களில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்; கூட்டலாம்... வாருங்கள்’ என, தொலைபேசியில் அழைக்கிறார்கள். 10, 20 ஆண்டுகளாக நம் வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்பட்ட உடல் பருமனை, மூன்றே வாரங்களில் குறைப்பது எப்படிச் சாத்தியம்? இப்படிப்பட்ட எடை குறைக்கும் டப்பா உணவுகளில் நார்ச்சத்து மிக அதிக அளவில் இருக்கும். அதிகமான நார்ச்சத்து, குடல் புண்ணை உருவாக்கி ரத்தக்கசிவை உண்டாக்கும். இது மலச்சிக்கல், ரத்தம் கலந்த மலம்... எனப் பல பிரச்னைகளை உண்டாக்கும். இயற்கையாகவே ஈரலில் நல்ல கொழுப்பு உற்பத்தியாகும். இது ஜீரணத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் பயன்படும். துணை உணவுகள் இந்த நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்துகின்றன. பசி உணர்வை மட்டுப்படுத்தி, உணவின் மீதான ஆர்வத்தைக் குறைக்கின்றன. இதனால் இரைப்பையும் ஜீரண உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, ஈரல் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு இருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பருமனான சுமோ வீரர்கள், குட்டிக்கரணம் போடுகின்றனர். மல்லர்கள் எனும் மல்யுத்த வீரர்களும் குண்டாகத்தான் இருக்கிறார்கள். இங்கு நாம் கவனிக்கவேண்டியது 'குண்டாக இருப்பது, தொந்தரவாக இருக்கிறதா... இல்லையா?’ என்பதைத்தான். பார்ப்பவர்கள் குண்டாக இருப்பதாகக் கூறுவதால் எடையைக் குறைக்க வேண்டும் என முடிவு எடுப்பது சரியல்ல. இப்படி அவசியம் இல்லாமல் எடையைக் குறைப்பது, எலும்புகளைப் பலவீனமாக்கும்.
அப்படியே வேறு காரணங்களுக்காக நீங்கள் எடையைக் குறைக்க விரும்பினாலும், அதற்குத் துணை உணவுகள் தீர்வு அல்ல. உணவுக் கட்டுபாடு மற்றும் உரிய உடற்பயிற்சிகளின் மூலம்தான் அதைச் செய்ய முடியும். நாம் உண்ணும் உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, செல்களில் படிந்துகொண்டே இருக்கும். செல்கள் பெருகும்போது கொழுப்பும் பெருகும். துணை உணவுகளைப் பயன்படுத்தும்போது, செல்களின் மீதுள்ள கொழுப்பைச் சுருங்கச்செய்கிறது. துணை உணவுகளைச் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டால், செல்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.
சிறு வயது முதல் வளர்வதற்கு, ஞாபக சக்திக்கு... என வெவ்வேறு காரணங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் துணை உணவுகள், குழந்தைகளின் வளர்ச்சி மாற்றத்தில் கடுமையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. வழக்கத்துக்கு மாறான உடல் வளர்ச்சி, சிறு வயதிலேயே பருவமடைதல், பார்வைக் குறைபாடு, மலட்டுத்தன்மை... என, கணக்கில் அடங்காத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நம் வளர்ச்சிக்குத் துணை செய்யவேண்டிய துணை உணவுகள், நம் உடலுக்கு வினை வைக்கின்றன. இதைத் தவிர்க்க பெரிய சாகசம் எதுவும் செய்யவேண்டியது இல்லை. நமது முந்தைய தலைமுறையினர் என்ன செய்தார்கள் என்பதை அறிந்துகொண்டு, சமச்சீர் உணவுக்குத் திரும்பினாலே போதுமானது!
 


கம்பு வடை
டீ, காபி தவிர்ப்பது எப்படி? P48b
தேவையான பொருட்கள்:
கம்பு - 1 குவளை
சின்ன வெங்காயம் - 1/4 குவளை (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கைப்பிடி (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கைப்பிடி (நறுக்கியது)
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
மிளகாய் - 3
உப்பு - தேவையான ஆளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
கம்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து, இஞ்சி, சோம்பு, பட்டை, மிளகாய், உப்பு சேர்த்து, குறைந்த நீரில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, நன்கு கலந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். விரும்பினால், கற்பூரவள்ளி இலையையும் சேர்த்துக்கொள்ளலாம். 


டீ, காபி தவிர்ப்பது எப்படி?
டீ, காபி தவிர்ப்பது எப்படி? P48cபசுமைப் பள்ளத்தாக்கு மலைகளின் மரங்களை வெட்டியும், வளங்களைச் சுரண்டியும், வன விலங்குகளை விரட்டியும் பயிர் செய்யப்படும் டீக்கும் காபிக்கும் நாம் அடிமையாக இருப்பது நல்லது அல்ல என, நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்கு என்ன மாற்று இருக்கிறது?
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலக்காய், பட்டை ஆகியவற்றை தலா 10 கிராம், 10 கிராம்பு, மல்லி 50 கிராம், ஆவாரம்பூ 100 கிராம், பூலப்பூ 10 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நிழலில் காயவைத்து, அரைத்தோ இடித்தோ பொடியாக்கினால், சுமார் 200 கிராம் வரும். இதில் அரைத் தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்துக் குடித்தால், ஜீரணம் சீராகும்; சர்க்கரை நோய் கட்டுப்படும்; ரத்த அழுத்தம் சீராகும். இந்தப் பொடியைச் செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளிக்கலாம்! 


மில்லட் பால் ஃப்ரை
டீ, காபி தவிர்ப்பது எப்படி? P48d
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி மாவு - 1/2 கோப்பை
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - சிறிது
சீரகம் - சிறிது
சின்ன வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை:
சாமை அரிசி மாவில் சிறிது அளவு உப்புடன் சூடான நீரை ஊற்றி, கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டையாக உருட்டி, ஆவியில் வேகவைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய், உப்புடன் தாளித்து, வேகவைத்த உருண்டைகளைக் கலந்து, சிறிதளவு நீர் தெளித்து வதக்கி இறக்கும்போது, எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும். இதில் நார்ச்சத்தும் விட்டமின் சி-யும் தேவையான அளவு இருக்கின்றன. அதனால், மலச்சிக்கலை நீக்கும்!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum