தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இணைய மானபங்கம் :அதிரவைக்கும் உண்மைகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இணைய மானபங்கம் :அதிரவைக்கும் உண்மைகள் Empty இணைய மானபங்கம் :அதிரவைக்கும் உண்மைகள்

Sun May 29, 2016 6:11 pm
விஞ்ஞானம் வளரும்போதெல்லாம் அது பெண்களை ஏதாவது ஒருவகையில் பாதிக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் பெண்களை அவமானப்படுத்த வேண்டும் என்றால், பொதுமக்கள் புழங்கும் கழிப்பறையில் எழுதிவைப்பார்கள். கண்ட இடங்களில் படம் வரைந்து வைப்பார்கள். இப்போது விஞ்ஞானத்தின் துணைகொண்டு பெண்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்டர்நெட் உபயோகிக்கும் பெண்கள், அதன் மூலமாக அனுபவிக்கும் புதிய அவமான நெருக்கடிகளுக்கு ‘இன்டர்நெட் மானபங்கம்’ என்று பெயர். பொது கழிப்பறைகளில் படம் வரைந்தவர்களும், பொது இடங்களில் பெண்களை இடித்து, உரசி கேலி கிண்டல் செய்தவர்களும் இப்போது இன்டர்நெட் வழியாக பெண்களுக்கு எதிரான ஆபாச அச்சுறுத்துதலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆபாசமும், வன்மமும் கலந்த வாசகங்களை வெளியிடுவது,  செக்ஸ் ‘போஸ்ட்டுகளை’ ‘டாக்’ செய்தல், பெண்களின் போட்டோக்களுடன் அவர்களது போட்டோக்களையும் இணைத்து, விலைமாதுகளாக சித்தரித்தல்.. இப்படிப்பட்ட பல லீலாவினோதங்களை நடத்தி வருகிறார்கள். அதனால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  சிலர், ‘போடா புண்ணாக்கு’ என்று புறந்தள்ளி        விடுகிறார்கள்.

விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவி ஒருவர் தனது கல்விக்காக சில காட்சிகளை படம்பிடித்துவைத்திருந்தார். அந்த வீடியோவில் இருந்து சில ‘ஸ்டில்’களை எடுத்து காதலனே அவளது அக்கவுண்டில் போஸ்ட் செய்தார். லைக்குகளும், ஷேரிங்குகளும் நடந்தன. கடைசியில் அந்த பெண்ணின் போட்டோவை அப்படியே எடுத்து, ‘வெளியூரில் அந்த பெண் விலைமாதுவாக இருக்கிறார்’ என்று கூறி, சொந்த ஊரை சேர்ந்த சிலர் சித்தரித்துவிட்டார்கள். அந்த பெண் அதில் இருந்து தன்னம்பிக்கையோடு போராடி வெளியே வர சில காலம் பிடித்தது.

இன்டர்நெட் மானபங்க பேர்வழிகள் தங்களுக்கான இரைகளை பலவிதங்களில் தேடிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ட்டிராக்கிங் சாப்ட்வேர் மூலம் பெண்களை மானிட்டர் செய்து, அதை அவ்வப்போது மானிட்டர் செய்து கொண்டிருப்பது சிலரது தலையாய வேலை. பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பெண் சாப்ட்வேர் என்ஜினீயருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பார்ப்போம். வேலை தொடர்பாக பல்வேறு நகரங்களுக்கு சுற்றிக்கொண்டிருக்கும் அவளது பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்டுகள் தொடங்கப்பட்டு, அது அப்டேட் செய்யப்பட்டுக்கொண்டே இருந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் அவளது கணவர் சொன்ன பிறகுதான், அந்த விஷயமே அவளுக்கு தெரியவந்தது. அந்த பேஸ்புக் கணக்கு போலி என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும், எப்படி போகும் இடத்தை எல்லாம் கண்டறிந்து அப்டேட் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டறியவேண்டியதிருந்தது. செல்போன் ஜி.பி.எஸ். வழியாக ட்டிராக் செய்து, யாரோ அப்டேட் செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

உடனே அந்த பெண், தனது செல்போனை பெங்களூருவில் இருக்கும் தோழியிடம் கொடுத்துவிட்டு, வெளிநாட்டுக்கு கணவரைத் தேடிப்போனாள். அவள் அங்கிருக்கும்போது, அவளது செல்போனை தோழி ஷாப்பிங்மால் ஒன்றுக்கு கொண்டு செல்ல, ‘அவள் ஷாப்பிங் மாலில் இருக்கிறாள்’ என்று அப்டேட் செய்யப்பட்டது. அப்போதுதான் தனது செல்போன் ட்டிராக்கிங் செய்யப்படுவதை அவள் தெரிந்துகொண்டாள். சைபர் கிரைமில் புகார் செய்தபோது அவளது பழைய நண்பர் ஒருவர் அதில் சிக்கினார்.

‘சைபர் ரேப்’ எனப்படும் இன்டர்நெட் மானபங்கத்தில் பாதிக்கப்படும் பெண்களின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘ஒரு வருடம், 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 9 கோடி பேர் சைபர் ரேப்பால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று, ஐ.நா.வின் ‘சைபர் வயலன்ஸ் எகைன்ஸ்ட் உமன் அன்ட் சில்ரன்’ என்ற ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

இன்டர்நெட்டில் பெண்கள் ஆபாசமாக சித்தரிக்கப்படுவது, ஆண்களைவிட 27 மடங்கு அதிகமாக இருக்கிறதாம். 18 முதல் 24 வயது வரை உள்ள பெண்களே இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இன்டர் நெட் பயன்படுத்துவோரில் ஐந்தில் ஒருவர் ஆபாச அதிர்ச்சி தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடு கிறது. பெண்களுக்கு ஆபாச தொந்தரவு தரும் மனிதர்கள், பெண்களின் பெயரில் இருக்கும் ‘யூசர் நேம்’களையே குறிவைத்து தாக்குகிறார்கள்.

சென்னையை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு நடுராத்திரியில் தொடர்ந்து செல்போன் அழைப்புகள் வந்தன. எதையோ எதிர்பார்த்து பேசும் ஆபாச வார்த்தைகளோடு அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். அவள் பதிலுக்கு கண்டபடி திட்டிவிட்டு தொடர்பை துண்டித்தாள். ஆனாலும் தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. கடைசியில் அவள், ‘உங்களுக்கு எனது நம்பர் எப்படி கிடைத்தது?’ என்று கேட்டாள்.

‘டேட்டிங் சைட்’டில் சூடான செக்ஸ் உரையாடலுக்கு உங்களை அணுகும்படி கூறி, உங்கள் நம்பர் போடப்பட்டிருக்கிறது என்றார்கள்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சைபர் கிரைமில் புகார் செய்தார். நெட் கபே நடத்தும் ஒருவர் பிடிபட்டார். அந்த பெண் தனக்கு வரன் தேடுவதற்காக, திருமண தகவல் நிலையம் ஒன்றில் கொடுத்த தகவல்களை அப்படியே போட்டோவுடன் காப்பி எடுத்து, நெட்டில் இணைத்து ஆபாச விளையாட்டை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இந்தியாவில் சைபர் ரேப் மூலம் பாதிக்கப்படும் பெண்களில் 18 சதவீதம் பேருக்கு, இன்டர் நெட் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வே இல்லை என்பது பரிதாபகரமான உண்மை. தான் பாதிக்கப்படுவது தெரிந்தாலும் அதை பெற்றோரிடம் கூறி நடவடிக்கை எடுக்க தயங்குபவர்களாக 46  சதவீதம் பேர் இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர்தான் எதிர்தாக்குதல் நடத்தவும், புகார் கொடுக்கவும் முன்வருகிறார்கள்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum