தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமிற்கும் என்ன தொடர்பு  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமிற்கும் என்ன தொடர்பு  Empty கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமிற்கும் என்ன தொடர்பு

Tue Feb 02, 2016 5:03 am
இந்த பதிவை படிக்கும் மக்களிடம் கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமிற்கும் என்ன தொடர்பு என்பதை பற்றி கூற விரும்புகிறோம். இந்த இரண்டு மார்க்கங்களும், யூதம் என்ற மார்க்கத்தில் இருந்து பிரிந்து வந்தவை. யூதம் ஒரு பழமை வாய்ந்த மார்க்கம். அதனை பற்றி கீழே காணவும்.

அண்டத்தை படைத்த இறைவனை விட்டு மனிதர்கள் காலப்போக்கில் பிரிகின்றனர், அப்பொழுது இறைவன் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் தனக்காக தெரிந்து கொள்கின்றார். அந்த மக்கள் தான் இஸ்ரேல் நாட்டினர். ஆரம்ப காலங்களில் இறைவன் அவர்களுக்கு மட்டும் தன்னை வெளிப்படுத்துகிறார். அவர்கள் மூலமாய் முழு உலகத்து மக்களையும் தன்பால் மீண்டும் ஈர்த்து கொள்ள முடிவு செய்கிறார். இதுவே யூத நம்பிக்கை. யூதர்களின் இறைவேதம் ஒரு மீட்பருக்காக ஏங்கி தவிப்பது போல எழுதப்பட்டிருக்கும். அந்த மீட்பரை யூதர்கள் 'மேசியா' என்றனர். மேசியாவை இறைவன் பூமிக்கு அனுப்புவார், அப்பொழுது பூமியில் உள்ள அத்தனை மக்களையும் அந்த மீட்பர் இறைவனிடம் கூட்டி சேர்ப்பார், அவர் மூலமாய் உலக மக்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று யூதர்களின் வேதத்தில் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கும். அந்த மேசியா யார் என்பதை கண்டுபிடிக்க பல அடையாளங்கள் எழுதப்பட்டிருக்கும். அந்த மேசியாவிற்காக யூதர்கள் பல நூற்றாண்டுகளாக காத்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது இயேசு பிறக்கிறார். அவர் பிறந்தது முதல் யூதர்களின் வேதத்தில் மேசியாவிற்கென கொடுக்கப்பட்ட ஒவ்வொரு அடையாளங்களும் நிறைவேறுகின்றன. தன் 30ஆம்  வயது வரை தன்னை வெளிக்காட்டி கொள்ளாமல் சாதாரண மனிதராக வாழ்ந்த இயேசு, பின்னர் வெளியரங்கமாக 'தானே மேசியா' என்று கூற ஆரம்பிக்கின்றார். அவருக்கு 12 சீடர்கள் உண்டாகுகின்றனர். தன் சீடர்களோடு  பல ஊர்களுக்கு சென்று போதனைகள் வழங்கி, அற்புத செயல்கள் புரிகின்றார். அவரது புகழ் அந்த பகுதியில் பரவ ஆரம்பிக்கின்றது. ஆனால், யூதர்கள் அவரை மேசியா என்று ஏற்கவில்லை. அவரை ஒரு பொய்யனாகவே பாவித்தனர். எனவே, இயேசுவை அவரது சீடரான யூதாஸ் என்பவரின் துணைகொண்டு கைது செய்கின்றனர். அவரை விசாரிக்கும் படி, யூத குருமார்களிடம் இழுத்து சென்றனர்.

"அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்" - மத்தேயு 26:62-66

எனவே, இயேசுவை குற்றபடுத்தி, அரசாங்க அனுமதி பெற்று அவரை சிலுவையில் அறைந்தனர். இயேசு சித்திரவதைகளுக்கு ஆளாகி சிலுவையில் உயிரை விட்டார். மேசியாவிற்கென 700 ஆண்டுகளுக்கு முன்னுரைக்கப்பட்ட ஒரு அடையாளம் இயேசு சிலுவையில் இறந்ததால் நிறைவேறியது.

"அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப் பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப் பண்ணினார்" - ஏசாயா 53: 3-6 (இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம்)

இதன் பின்பு, இயேசுவின் உடலை ஒரு புதிய கல்லறையில் வைத்தனர். இயேசு தான் இறந்து 3 நாட்களில் உயிர் பெற்று எழுவேன் என்று கூறியிருந்தார். எனவே யூதர்கள் அவரது கல்லறையை சுற்றி காவல் வைத்தனர். இருந்தாலும் மூன்றாவது நாளின் அதிகாலையில் வானில் இருந்து தேவதூதன் இறங்கி கல்லை நகர்த்தினான். அவனை கண்ட காவலர்களில் சிலர் பயந்து ஓடிவிட்டனர், சிலர் மயங்கிவிட்டனர். அவ்வேளையில் கல்லறையை காண சில பெண்கள் அங்கு வந்தனர், கல் புரட்டப்பட்டு இருப்பதை கண்டு வியந்தனர். அங்கிருந்த தூதன், அவர்களிடம் இயேசு உயிர்தெழுந்து விட்டார் என்று அறிவிக்கிறான். அவர்கள் ஓடி சென்று இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தனர். அவர்கள் நம்ப மறுக்கும் போது, அவர்கள் மத்தியில் இயேசு தோன்றினார். அவரை கண்டு அவர்கள் நம்பிக்கை பெற்றனர். கிட்டத்தட்ட 40 நாள் வரை இயேசு அவர்களிடம் காட்சி தருவதும் மறைவதுமாக இருந்தார். அதன் பின், தன் போதனைகளை உலகம் எங்கும் சென்று கூறும்படி தன் சீடர்களிடம் கூறினார், தான் மீண்டும் உலகத்திற்கு வருவேன் என்றும் அன்று உலக அழிவு நேரிடும் என்றும் நல்லவர்களை மட்டும் தான் பரலோகத்திற்கு அழைத்து செல்வேன் என்றும் கூறினார். இவைகளை கூறிமுடித்த பின்பு அவர் வானத்திற்கு எழுந்தருளி மறைந்துவிட்டார். அவரது சீடர்கள் அவரது போதனைகளை ஊர் ஊராக சென்று அறிவிக்க தொடங்கினர்.

அவர்கள் அவ்வாறு அறிவிக்க தொடங்கியதால், யூதம் பிளவுண்டது. யூதர்களில் ஒரு சாரார் இயேசுவை மேசியா என்று ஏற்றுக்கொள்ளவில்லை, அவரது உடலை இயேசுவின் சீடர்கள் திருடிவிட்டு இயேசு உயிர்பெற்றுவிட்டதாக கூறிவிட்டனர் என்று போதிக்க துவங்கினர். யூதர்களில் மற்றொரு சாரார் இயேசு உயிர்தெழுந்தார் என்றும் அவரே மேசியா என்றும் போதிக்க துவங்கினர். இந்த சாரார் தான் காலப்போக்கில் 'கிறிஸ்தவர்கள்' என்ற பெயர் பெற்றனர். மேசியாவிற்கென யூதர்களின் வேதத்தில் கொடுக்கப்பட்ட அடையாளங்களில் கிட்டத்தட்ட 300 அடையாளங்களை இயேசு நிறைவேற்றியுள்ளார். நிறைவேறாத சில அடையாளங்கள் அவர் இரண்டாம் முறை பூமிக்கு வரும்போது நிறைவேறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கிறிஸ்தவம் யூதத்தில் இருந்து பிரிந்து தனி மார்க்கமானது.

இயேசு வான் எழுந்து செல்வதற்கு முன்பு, தான் வான் எழுந்து சென்றபின், பூமிக்கு ஒரு தேற்றரவாளனை அனுப்புவேன் என்றும், அந்த தேற்றரவாளன் மக்களுக்கு தன் போதனைகளை நினைவுபடுத்தி தான் மீண்டும் பூமிக்கு வருமளவும் அவர்களை நல்வழியில் நடுத்துவார் என்றும் கூறினார். அது மட்டும் அன்றி, தான் சென்ற பின் சில கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றி மக்களுக்கு தன் பெயரிலும் இறைவனின் பெயரிலும் மாறுபாடான பொய்யான போதனைகளை வழங்குவர் என்றும் கூறினார். அவர்களை அந்திகிறிஸ்து என்று இயேசு கூறினார். எனவே தேற்றரவாளனை ஏற்று கொண்டு, அந்திகிறிஸ்துவை விட்டு விலகுமாறும் இயேசு கூறினார்.

கிறிஸ்தவர்கள் இறைவனின் உருவமற்ற நிலையையே தேற்றரவாளன் என்று நம்புகின்றனர். இறைவன் உருவமற்று நமக்குள் சஞ்சரித்து, தவறு செய்யும் போது, இயேசு கூறின நற்போதனைகளை நமக்கு நினைவுபடுத்தி, உள்ளுணர்வை ஏற்படுத்தி, தவறு செய்யாமல் காத்து வழிநடத்துகிறார் என்று நம்புகின்றனர். உருவமற்று விளங்குவதால் தேற்றரவாளனை 'பரிசுத்த ஆவியானவர்' என்கின்றனர். அண்டத்தை படைத்த இறைவனை பிதா என்றும், பிதா அனுப்பிய மேசியாவாகிய இயேசு குமாரன் என்றும், தேற்றரவாளனை பரிசுத்த ஆவி என்றும் கூறுகின்றனர். இவர்கள் மூவரும் தனி நபர்களாக விளங்கினாலும், இவர்கள் மூவருக்கும் இருப்பது ஒரே ஜீவன் தான் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.

இப்பொழுது முகமது வருகிறார். இயேசு கூறின தேற்றரவாளன் தானே என்கின்றார், தானே உலகிற்கு இறைவன் அனுப்பிய கடைசி தூதர் என்கிறார். தான் பிதாவாகிய இறைவனிடம் இருந்து திருக்குர்ஆன் என்ற வேதத்தை பெற்றுள்ளதாக கூறுகிறார். அந்த திருக்குரானே இறைவனை பற்றிய உண்மையையும் இயேசுவை பற்றிய உண்மையையும் கூறுவதாக கூறுகிறார். திருக்குர்ஆன் படி, இறைவன் ஒருவரே. இயேசு இறைவனின் குமாரன் அல்ல, இறைவனால் இஸ்ரேலுக்கு நற்போதனைகள் சொல்ல அனுப்பப்பட்ட இறைதூதர். யூதர்களின் பழைய ஆகமங்களில் கூறப்பட்டுள்ள மேசியா இயேசு என்பதை குரான் ஏற்றுகொள்கிறது. ஆனால் மக்கள் அவருக்கு ஆராதனை செய்யாமல், அவரை இறைவனின் அம்சமாக கருதாமல், பிதாவாகிய இறைவனுக்கு மட்டும் ஆராதனை செய்யுமாறு கூறுகிறது. ஏசுவும் அப்படி தான் கூறினதாக குரான் கூறுகிறது. அது மட்டுமன்றி, இயேசு சிலுவையில் அறையப்படவுமில்லை, அவர் இறக்கவும் இல்லை, உயிர்த்தெலவும் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவரை போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபரை இயேசு என்று எண்ணி சிலுவையில் அறைந்துவிட்டனர் என்றும், அதனை கண்டு மக்கள் இயேசு மரித்துவிட்டார் என்று நம்பிவிட்டனர் என்றும், இயேசு மீண்டும் வந்த போது அவர் உயிர்த்தெலுந்துவிட்டார் என்று நம்பிவிட்டதாகவும் குரான் கூறுகிறது. அவர் தன் வேலை முடிந்தவுடன், வானத்திற்கு எழுந்தருளி பரலோகத்திற்கு சென்றுவிட்டார் என்றும், மீண்டும் உலகிற்கு வருவார் என்றும், அன்று உலகில் உள்ள அந்தி கிறிஸ்துகளை வீழ்த்தி பூமியில் நீதியையும் நியாயத்தையும் நிறைவேற்றுவார் என்றும், அன்று பரலோகத்திற்கு இஸ்லாமியர்கள் மட்டும் அழைத்து செல்லப்படுவர் என்றும் குரான் கூறுகிறது. 

எனவே யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்று கொள்ளவேண்டும் என்றும், கிறிஸ்துவர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டதோடு நிறுத்திக் கொண்டு வழிபடாமல் இருக்கவும் கூறுகிறது. இந்த கொள்கையை கொண்ட மார்க்கமே இஸ்லாம் என்றும், இதனை தவிர வேறெந்த மார்கத்தையும் இறைவன் ஏற்று கொள்ள மாட்டார் என்றும் கூறுகிறது.  அனைத்து மக்களையும் இஸ்லாம் மார்க்கத்தை நோக்கி வருமாறு அழைப்புமணி கொடுக்கிறது திருக்குர்ஆன்.

இஸ்லாமியர்கள், இயேசு கூறின தேற்றரவாளன் முகமது தான் என்று நம்புகின்றனர். இயேசுவை இறைவன் என்றும், இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றும், உயிர்த்தெழுந்தார் என்றும் பைபிளில் உள்ள புத்தகங்களை எழுதிய ஆதிகால கிறிஸ்தவர்களான பவுலடியார், லூக்கா போன்ற நபர்களே இயேசு கூறின அந்திகிறிஸ்துகள் என்று நம்புகின்றனர். எனவே கிறிஸ்தவர்கள் அந்திகிறிஸ்துகளின் வார்த்தையை கேட்டு வழித்தப்பிவிட்டனர் என்றும் நம்புகின்றனர்.

இஸ்லாம் இயேசுவை பற்றி மாறுபாடான போதனைகளை கூறுவதால், கிறிஸ்துவர்கள் முகமது அவர்களை இயேசு கூறின அந்திகிறிஸ்து என்று நம்புகின்றனர். இயேசுவை பற்றி பைபிளில் கூறப்பட்டுள்ள செய்திகளே உண்மையானவை என்றும், அதில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் எழுதப்பட்ட உண்மையான செய்திகள் என்றும் நம்புகின்றனர். இஸ்லாமியர்கள் அந்திகிறிஸ்துவான முகமது அவர்களின் சொற்களை கேட்டு வழித்தவறிவிட்டனர் என்று நம்புகின்றனர்.

http://ivaryaar.blogspot.in/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum