கற்றுக்கொள்ளுங்கள்
Thu Dec 17, 2015 9:34 am
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்!!! யாக்கோபு 4:10...
என்ற வேத வசனத்தின் படி இறை பணியை செய்து கொண்டிருக்கும் இந்த தேவமனிதனை பார்க்கும் போது மனதிற்குள் இவ்வளவு சந்தோஷம் வருகிறது என்றால்??? நம் இயேசு கிறிஸ்து பரலோகத்தில் இவரை குறித்து எவ்வளவு சந்தோசமும்,பெருமையும் அடைவார் என்று மட்டும் தான் சிந்திக்க தோன்றுகிறது!!!
மகாத்மா காந்தி கிறிஸ்துவர்களை பார்த்து சொன்ன வார்த்தைகள் "கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்காளாய் வாழ்ந்திருந்தால்??? கிறிஸ்துவை பற்றி பிரசங்கம் செய்ய தேவை இல்லை - நான் கிறிஸ்துவத்தை நேசிக்கிறேன் கிறிஸ்தவர்களை நேசிக்கவில்லை" என்றார்!!!
அப்படிஎன்றால்??? கிறிஸ்துவர்களின் வாழ்க்கை எவ்வளவு அருவருப்பாய் இருந்திருக்க வேண்டும்????
இந்த உலகத்தையே படைத்தவர் மனிதகுமாரனாய் "மாட்டு கொட்டிலில்" தானே பிறந்தார்!!!
இன்றோ, அனேக தேவாலயங்களில் காணும் அருவெறுப்பான காரியம் "மனிதன் மனிதனையே போற்றுகிறான், தேவ நாமத்தை மறந்து புகழ்ச்சியை நாடியே ஓடுகிறான்,
சமுதாயத்தில் ஓரளவு செல்வாக்கு இருந்தால் போதும் ஊழியர்கள் நம்மையே மிரட்டும் காலம் வந்துவிட்டது -
ஆத்துமா ஆதாயம் - என்ற வார்த்தை அழிந்து வருகிறதோ!!!
இதற்க்கு மத்தியில் இந்த தேவ மனிதரை பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள்,
"மார்தோமா சிரியன் ஆலயங்களின் பிரதம பேராயர், இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் நேரடியாக சென்று பேசக்கூடியவர்! எந்த வித ஆடம்பரம்,ஆர்பாட்டம் இல்லாமல் ரயில் நிலையத்தில் பிரயாணத்திற்காக காத்துகொண்டு இருக்கிறார்!!! -உயர்ந்த பதவி, அதிகாரமிக்க தொடர்பு இருந்த போதும் ஆர்பாட்டம் இல்லாத பயணத்திற்கு காத்திருக்கும் இறைவனின் முதல் பணியாளர்...
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
மீகா 6:8..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|