யார் நமது காரியமாய்ப் போவான்
Thu Dec 17, 2015 8:05 am
கணினி துறையிலே நான் பில் கேட்ஸ் சை போல பெரிய ஆளாய் வரவேண்டும், விளையாட்டு துறையில் இருக்கும் சச்சின் போல நானும் பெரிய கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும், அர்னால்ட் போல உலக திரைப்பட கதாநாயகனாக வேண்டும் என்கிற லட்சிய பதில் தந்த வாலிப சகோதரர்கள்!!!
சானியா மிர்சா போல நானும் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும், கல்பனா சாவ்லா போல விண்வெளி ஆராயிச்சி படிக்க வேணும் என்கிற வாலிப சகோதிரிகள், எங்கள் பிள்ளைகளை நங்கள் மருத்துவராக்க வேண்டும், வக்கீல், அரசாங்க அதிகாரி போல உயர்ந்த மதிப்பு, அதிக வருமானம், கிடைக்கும் தொழிலில் அமர்த்தவே ஆசை என்கிற பெற்றோர்கள்!!!!
கறுப்பின மக்களும்,நாய்களும் உள்ளே வர அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை ஆங்கில தேசத்தில் உள்ள தேவாலயங்களில் இருந்தது!!! இதனை கண்ட மருத்துவர் "டேவிட்" தேவ சமூகத்தில் பிரார்த்தனை செய்தார், இயேசு கிறிஸ்து அந்த மருத்துவரை மிஷ்னரியாக கறுப்பின தேசத்திற்கு செல்ல கட்டளையிடுகிறார், மருத்துவரான டேவிட் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்து தன் மருத்துவ தொழிலை தூக்கி வீசியவராய் சென்றார் கறுப்பின மக்கள் வாழும் தேசத்திற்கு, அங்கு பல ஆண்டுகள் சுவிஷேசத்தை போதித்தார், இயேசு கிறிஸ்துவிற்கு பிரியமான மகனாய் ஊழியராய் வாழ்ந்து மரித்தார்...
தெரியுமா??? எந்த ஆங்கில தேசம் கறுப்பின மக்களை நாய்களோடு ஒப்பிட்டதோ??? இன்று அந்த வல்லமை பொருந்திய வல்லரசு தேசத்தின் அதிபராக ஒரு கறுப்பின மகனை தான் இயேசு தேர்ந்தெடுத்தார்!!!
அன்று தன் மருத்துவ படிப்பை இயேசுவிற்காக தூக்கி எறிந்த அந்த மிஷனரி டேவிட் இன்று கறுப்பின தேசத்தை முழுவதும் இயேசுவின் நாடாக மாற்றினார்..... ஆனால்? இன்று!!!! நான் "இயேசுவின் ஊழியன்" என்று சொல்லும்போது அனேக கிறிஸ்தவர்கள் ஏளனமாக பார்ப்பதும், கிண்டல் செய்வதுமாக மாறிவிட்டது கிறிஸ்துவ சமுதாயம்!!!!!
- பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன்.ஏசாயா 6:8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|