தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஹென்றி நாட் - தென் பசிபிக் தீவு மிஷனரி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஹென்றி நாட் - தென் பசிபிக் தீவு மிஷனரி Empty ஹென்றி நாட் - தென் பசிபிக் தீவு மிஷனரி

Mon Mar 11, 2013 12:08 pm
ஹென்றி நாட் - தென் பசிபிக் தீவு மிஷனரி 548602_431933056862796_1281365969_n

ஹென்றி நாட் - தென் பசிபிக் தீவு மிஷனரி

Henry Nott (1774–1844) was a British Protestant Christian missionary to Tahiti, Society Islands, Polynesia.

1774 இல் ஹென்றி நாட், இங்கிலாந்திலுள்ள பிராம்ஸ்குரோவில் பிறந்தார்.
புதிதாக உதித்திருந்த லண்டன் மிஷனரி சங்கம் அனுப்பிய முதல் மிஷனரிகளில்
இவரும் வில்லியம் கேரியும் இடம்பெற்றனர்.
இச்சங்கம் உருவாகும் முன்பாக பின்தங்கிய நாடுகளுக்கு இங்கிலாந்து மிஷனரிகளை அனுப்பவில்லை,
ஆனால் இச்சங்கம் தோன்றியபின் பலர் மிஷனரிகளாக இணைந்தனர். செப்டெம்பர்
1796இல் 22 வயதான நாட் மற்ற மிஷனரிகளோடுகூட தென் பசிபிக் தீவுகளுக்கு
நற்செய்தியைச் சுமந்து செல்லும்படியாக கப்பல் பயணத்தை மேற்கொண்டார். 1797
மார்ச் 5இல் தாஹித்தியை அடைந்தனர்.
இன்று தாஹித்தி என்றாலே அழகிய
கடற்கரைகளும் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகளும் கொண்ட விடுமுறை சுற்றுலாத்
தலம் என்றுதான் நினைக்கிறோம். நாட்டின் நாட்களிலும் அப்படித்தான். ஆனால்
மக்களின் கேடுகெட்ட வாழ்க்கைத் தரம் அவ்வழகை அழுக்காக்கிற்று. அறியாமை
மற்றும் மூடநம்பிக்கையாகிய வேர்களிலிருந்து முளைத்த விநோதமான தீயச்
சடங்குகளில் மக்கள் ஊறியிருந்தனர். அத்தீவிலேயே மிக சக்திசாலியான
பொமாரேஅவர்களது அரசனாயிருந்தார்.

மிஷனரிகள் தீவை அடைந்தவுடன்
அரசரை சந்தித்தனர்; அவரும் விருப்பமாக அவர்களை வரவேற்றார். அவருக்கு
மிஷனரிகளின் நோக்கங்கள், வாஞ்சைகளில் கரிசனையில்லை; மாறாக அவர்கள் கொண்டு
வந்திருந்த மேற்கத்திய கருவிகள், மற்றும் பொருட்களிலேயே அவரது கவனம்
இருந்தது. பொமாரே அவர்களுக்குப் பெரியதொரு வீட்டைக் கொடுத்திருந்தார்.
மிஷனரிகளும் ஆர்வத்துடன் பணியைத் துவங்கினர். இரட்சிக்கப்படாத உள்ளூர்
மொழிபெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன், ஞாயிறு, 19 மார்ச் 1797 இல் நாட் தனது
முதல் கிறிஸ்தவ ஆராதனையை நடத்தினார். பொமாரே மிஷனரிகளுடன் மிக சிநேகமாகப்
பழகி அடிக்கடி அவர்களைச் சந்தித்தாலும் விருந்துகளையும் கருவிகள்,
பொருட்கள் போன்ற ஈவுகளையும் வற்புறுத்தி வாங்கினார். தீவு வாசிகளும்
மிஷனரிகளிடம் பரிசுப் பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்கினதால்
பொருள்தட்டுப்பாடு ஆனது. கொடுக்க ஒன்றுமில்லாதபோது இருந்த சிலவற்றையும்
திருடிச் சென்றனர். திருட்டு ஒரு சாதாரணப்பழக்கமாகவும் அவர்களது மதத்தில்
ஒத்துக்கொள்ளப்பட்டதாகவும் இருந்தது.
""""திருடரின் காவலன்"" என்ற ஒரு தெய்வத்தையும் பலி செலுத்தி வழிபட்டு வந்தனர்.

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியும் தேவனது அன்பும் தாஹித்தி மக்களைக்
கவர்ந்ததால் அவர்கள் மிஷனரிகளைக் கேட்க வந்தாலும் அவர்களது மனதும் இதயமும்
இருளினால் ஆக்கிரமிக்கப்பட்டு உலகப் பொருட்களால் மயக்கப்பட்டிருந்தது.

இவர்கள் யுத்தங்களுக்கும் கொலைகளுக்கும் பெயர்போன கொடூரர்கள். யுத்தம்
சாதாரண மாகவும், சமாதானம் அபூர்வமாகவும் எண்ணப்பட்டன. பழிக்குப் பழியாக
ஒருவரைக் கொன்றாலும் அவ்வுடலை வெயிலில் காயவிட்டு நடுவில் பெரியதொரு ஓட்டை
செய்து அதை ஆடைபோல், கைகள் முன்னாலும் கால்கள் பின்னாலும் தொங்கும்படியாக
அணிந்து செல்வர்.
நரபலி, முக்கியமாகப் பிள்ளைகள், சர்வ சாதாரணம்.
பிறக்கும் பிள்ளைகளில் மூன்றில் இரு பங்கு பெற்றோரால் அல்லது """"குழந்தைக்
கொலையாளிகள்"" என்பவர்களால் பிறப்பிலேயே கொல்லப்பட்டன. சில சமயம்
பிள்ளைகளை பலியாக கடலிலோ கொதிக்கும் எரிமலையிலோ எறிவர். செய்த
குற்றங்களுக்காகவும் பலி செலுத்துவர்; அது கடுமையான குற்றமாயிருக்குமானால்
நரபலி செலுத்துவர். குடிப் பழக்கம் அவர்களை பேய்த்தனமாய் நடந்துகொள்ளச்
செய்தது. பிறருக்கு பாரமில்லாதிருக்க நோய் வாய்ப்பட்டவர்களை உயிரோடு
புதைத்து விடுவர். """"இம்மக்கள் கற்பனை செய்யக் கூடாத அளவிற்கு எந்தவொரு
தேசத்திற்கும் தெரியாமல் அதலபாதாளத்தில் மூழ்கிவிட்டனர்"" என்று

ஆய்வுப் பயணியான கேப்டன் குக், தாஹித்தியர்களைக் குறித்து கூறியுள்ளார்.
நாட் வந்தபோது தாஹித்தியரின் நிலை இப்படியாக இருந்ததால் வேலை மலைப்பாக
இருந்தது.
இன்னும் மோசம் என்னவென்றால் சில மாதங்களில் மிஷனரிகளின்
எண்ணிக்கை குறையத் துவங்கியது. பலர் ஊழியத்திலிருந்து விலகி புறவினப்
பெண்களை மணந்தனர். இன்னும் சிலர் தேவப் பணியை நிராகரித்து துறைமுக
வணிகத்தில் பொருளீட்டினர். ஒரு மிஷனரி கொல்லப்பட்டார்.

வேலை
கடினமாயிருந்ததாலும் பாடுகளின் கனிகளைக் காணக்கூடாதிருந்ததாலும் பலர்
உற்சாகமிழந்தனர். ஹென்றி நாட்டோ தேவன் தன்னை அழைத்ததாக நிச்சயித்திருந்த
சேவையில் விடாப்பிடியாய்த் தொடர்ந்தார். இங்கிலாந்தில் அவர் ஒரு
மேஸ்திரியாயிருந்தாலும் மறைந்து கிடந்த அவரது மொழித்திறன்கள் தாஹித்தியில்
பிரகாசிக்கத் துவங்கின. 10 ஆகஸ்டு 1801 இல் உள்ளூர் மொழியைக் கற்றபின்
மக்களுக்கு அவர்களது மொழியிலேயே பிரசங்கித்த முதல் மிஷனரியானார்
நாட். வெற்றியின் திருவிழாவானது அன்றைய தினம்!
நெப்போலியனது போரினால் நாட்டும் சக மிஷனரிகளும் நான்கு ஆண்டுகள்
இங்கிலாந்திலிருந்து கடிதங்களோ பொருட்களோ வந்து சேராமல் கஷ்டப்பட்டனர்.
அடுத்த ஏழு ஆண்டுகளில் இருமுறை மட்டுமே தேவைகள் வந்து சேர்ந்தன.

அதிலும் ஒருமுறை உப்பு நீரினால் பொருட்கள் சேதமடைந்து கெட்டுப்போய வந்து
சேர்ந்தன. உணவு பற்றாக் குறையினால் மிஷனரிகள் மலைகளில் திரிந்து காட்டுப்
பழங்களினால் வயிற்றை நிரப்பும் நிலையும் ஏற்பட்டது.
1803 இல் பொமாரே
இரட்சிக்கப்படாமலே மரித்தார்! அவரது மகன் பொமாரே II அரசரானார். பொமாரே
அரசராயிருந்த 30 ஆண்டுகளில் 2000 பேரை தனது விக்கிரகங்களுக்குப்
பலியிட்டதாகக் கணக்கிடப்பட்டது. அடிதடிகளும் கஷ்டங்களும் தீவில்
தொடர்ந்ததால் 1805 இல் இன்னும் ஆறு மிஷனரிகள் தாஹித்தியை விட்டுச் செல்லத்
தீர்மானித்தனர். 1808 இல் மிஷனரிகள் வாழ்ந்த வீடு அழிக்கப்பட்டு ஏறத்தாழ
எல்லாமே திருட்டுப் போயின. இன்னும் சிலமிஷனரிகள் விட்டுச் சென்றனர்;
எஞ்சியவர் அடுத்த ஆண்டு இடத்தைக் காலி செய்தனர்.
1810 இல் ஹென்றி நாட்
மட்டுமே தாஹித்தி தீவில் மிஞ்சி இருந்தார். இருப்பினும் நாட் நம்பிக்கை
இழந்து விடவில்லை. தொடர்ந்து கிறிஸ்துவின் அன்பை பிரசங்கித்தும் பகிர்ந்து
கொண்டும் வந்தார். தாஹித்தி மொழியில் தேவ வார்த்தையை மொழி
பெயர்க்கும்படியாக எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளைப் பயின்றார். இறுதியாக
வேதாகமத்தை தாஹித்திய மொழியில் அச்சடித்து மக்கள் வாசிக்க விநியோகித்தார்.
நாட் நற்செய்தியை பொமாரே II விற்கு விளக்க அதிக நேரம் செலவழித்ததன் பயனாக
அவர் கூட்டங்களில் பங்குகொள்ள ஆரம்பித்தார். 1813 ஜூலை, ஆராதனைகளை
நடத்தும்படியாக கட்டவிருந்த கோவிலுக்கு பொமாரே II உதவி செய்தார்.
அதே
மாதத்தில் விக்கிரக வணக்கத்தை விட்டுவிட்டு ஜீவனுள்ள தேவனுக்கு தமது வாழ்வை
அர்ப்பணிக்க விரும்புவோருக்காக நாட் ஒரு கூட்டம் நடத்தினார். முதலில்
31பேரும் பின்பு சிலருமாக 800 வரை மக்கள் தம்மை ஒப்புவித்தனர். நவம்பர்
1815இல் பொமாரே தான் அறிந்த எல்லா விக்கிரகக் கோவில்களையும்
அகற்றிவிட்டார். தீவு முழுவதும் நடந்து கொண்டிருந்த அருவருப்புகள் அறவே
அகன்று போயின.
ஆயிரக்கணக்கானோர் நாட் பிரசங்கிப்பதைக் கேட்கக் கூடினதோடு திரும்பிச் சென்ற மிஷனரிகள் பலர் மறுபடியும் தீவிற்கு வந்து சேர்ந்தனர்.
11 மே 1819, செவ்வாய்க்கிழமை, ராயல் மிஷன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஒரே நேரத்தில் மூன்று கூட்டங்கள் நடத்தக்கூடிய அளவு பெரிய அறை அது.

இதைக் கட்ட பொமாரே II உதவி செய்ததோடல்லாமல் பிரதிஷ்டைக்கு மறுநாள் மக்களின்
நடத்தையை நிர்வகிக்கும்படியான கிறிஸ்தவ சட்டங்களையும் அறிவித்தார். அது
ஹென்றி நாட்டினால் எழுதப்பட்டு பின்நாட்களில் மற்ற தென் பசிபிக்
தீவுகளிலும் பயன்படுத்தப்பட்டன.
இறுதியில் 16 மே 1819 அன்று 22
ஆண்டுகள் பாடுபட்டு பாடனுபவித்து கடினமாய் உழைத்த பின் ஹென்றி நாட் தனது
முதல் கனிக்கு திருமுழுக்கு அளித்தார்- அது வேறு யாருமல்ல, அரசன் பொமாரே II
தான். இந்தப் பொன்னான நாளை 5000 பேர் கண்டு களித்தனர். பலர் தாஹித்தி
ஊழியத்தை விட்டுச் சென்றாலும், நாட் இறுதிவரை உத்தமமாயிருந்து தனது
ஆண்டாண்டு சேவையின் கனிகளைக் கண்டார். தொடர்ந்த ஆண்டுகளில்
நூற்றுக்கணக்கானோர் திருமுழுக்குப் பெற்று பலர் மிஷனரிகளாக கிறிஸ்துவின்
அன்பின் நற்செய்தியை அண்டை தீவுகளுக்குச் சுமந்து சென்றனர்.
ஹென்றி
நாட் 47 ஆண்டுகள் தாஹித்தி தீவில் ஆண்டவரைச் சேவித்தார். அந்த நாட்களில்
இங்கிலாந்திற்கு இரண்டு முறை மட்டுமே விஜயம் செடீநுதார். 1 மே 1844 இல்
ஆண்டவர் அவரைத் தமது நித்திய வீட்டிற்கு அழைத்துக் கொண்டார்.

— நன்றி, பில்கிரிம்ஸ் ஜர்னல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum