தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஐஆர்டிஏ அதிரடி! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஐஆர்டிஏ அதிரடி! Empty இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஐஆர்டிஏ அதிரடி!

Thu Nov 19, 2015 3:37 pm
மு.சா.கெளதமன்

ன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கட்டாய மாக க்ளெய்ம் வழங்க வேண்டும் என இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) அறிவித்துள்ளது.  இன்ஷூரன்ஸ் திருத்தச் சட்டம் 2015- பிரிவு 45-ன் கீழ் இந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தில்  கடந்த மார்ச் 20 அன்று இந்திய  குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு இருக்கிறார். கடந்த 2014, டிசம்பர் 26 முதல் இந்த திருத்தம் அமலுக்கு வருவ தாக இந்திய அரசு இதழில் (The Gazette of India) தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐஆர்டிஏ-வின் இந்தத்  திருத்தம் என்ன சொல்கிறது என்பதை முதலில் விளக்கினார் ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் நிபுணர் எஸ்.ஸ்ரீதரன். 
இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஐஆர்டிஏ அதிரடி! P52a(1)
ஐந்து வகை பாலிசிகள்!
‘‘லைஃப் இன்ஷூரன்ஸில் ஐந்து வகையான பாலிசிகள் இருக்கின்றன. அவை, 1. டேர்ம் இன்ஷூரன்ஸ், 2. மணி பேக் பாலிசி, 3. எண்டோவ்மென்ட் பாலிசி, 4. ஹோல்லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி, 5. யூனிட் லிங்க்ட் பாலிசி.
ஒருவர் மேற்கூறிய பாலிசிகளில் எந்த வகையான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியையாவது எடுத்து மூன்று வருடங்களுக்கு பிரீமியத் தொகையைச் செலுத்திவிட்டு, அவருக்கு ஏற்பட்ட விபத்துகளுக்கு க்ளெய்ம் கோரினால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் மறுக்காமல் க்ளெய்ம் தரவேண்டும். இதில் எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் விலக்கு கிடையாது என ஐஆர்டிஏ சொல்லி இருக்கிறது. புதிதாக வந்திருக்கும் மாற்றங்களை இனி பார்ப்போம்.
என்னென்ன மாற்றம்? 
1. பாலிசியை எடுத்து முதல் மூன்று ஆண்டுகளில் பாலிசிதாரர் க்ளெய்ம் கோரி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  இருந்தால், மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட ஒரே காரணத்துக்காக   கட்டாயம் க்ளெய்ம் வழங்க வேண்டும்.
2. பாலிசிதாரர் பாலிசி எடுத்த நாளிலிருந்து (பிரீமியம் செலுத்திய நாள் அல்ல, இன்ஷூரன்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்ட தினத்திலிருந்து) 3 ஆண்டு களுக்குள் இறந்துவிட்டார். அவர் வங்கிக் கணக்கிலிருந்து பிரீமியத் தொகை இசிஎஸ் முறை மூலம் செலுத்தப் படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குடும்பத்தினர் பாலிசி சான்றிதழை கண்டுபிடித்து க்ளெய்ம் கோரினாலும், க்ளெய்ம் தொகையை வழங்க வேண்டும். அதேபோல் பாலிசி தாரர், பாலிசி எடுத்து மூன்று ஆண்டு களுக்குள் இறந்துவிட்டார். பாலிசி தாரரின் குடும்பத்தினர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தாமதமாக தெரியப் படுத்தினாலும், இன்ஷூரன்ஸ் நிறுவனம் அந்தக் கோரிக்கையை நிராகரிக்காமல் க்ளெய்ம் வழங்க வேண்டும்.
இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஐஆர்டிஏ அதிரடி! P53a
3. பாலிசிதாரர் தன்னைப் பற்றிய தகவல்களை தவறாக வழங்கியது, நோய் பாதிப்பு, புகை, மதுப்பழக்கம் போன்ற வற்றைக் குறிப்பிடாமல் இருந்தது (Suppression of material fact, Misstatement, Non disclosure) போன்றவற்றை இன்ஷூரன்ஸ் நிறுவனம் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் கண்டுபிடித்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளெய்ம் தொகையை மறுக்க லாம். ஆனால், பாலிசிதாரர் செலுத்திய முழு பிரீமியத்தை பாலிசிதாரரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும்.
4. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் தொகையைப் பெற வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் பெயர் முதற்கொண்டு தனக்கு தெரிந்த தகவல்களை மறைத்து, திரித்து (Fraud) பாலிசி எடுத்திருக்கிறார் அல்லது இறந்தவரின் பெயரில் பாலிசி எடுப்பது போன்ற தவறுகளை பாலிசிதாரர் செய்திருக்கிறார் என்பதை முதல் மூன்று ஆண்டுகளுக்குள் கண்டுபிடித்தால்,   க்ளெய்ம் மற்றும் கட்டிய பிரீமியம் இரண்டையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கத் தேவையில்லை.
இது ரிவைவல் (திரும்ப உயிர்பிக்கப்படும்) பாலிசிகளுக்கும் பொருந்தும். ஒரு பாலிசியை பாலிசிதாரர் ரிவைவல் காலத்தில் பிரீமியம் செலுத்தி மீண்டும் அதை தொடரும்பட்சத்தில், ரிவைவல் காலத்தில் பிரீமியம் தொகை செலுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் பாலிசிதாரர் கோரும் க்ளெய்ம்களை வழங்க வேண்டும்.
5. முதல்முறை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மற்றும் ரிவைவல் பாலிசி களுக்கு ஹெல்த் டிக்ளரேஷன் இல்லாமல் பாலிசி வழங்கப் பட்டு இருந்தால், பாலிசிதாரர் முதல் மூன்று ஆண்டுகளில் கோரும் க்ளெய்மைகூட மறுக்கக்கூடாது.
6. யூலிப் பாலிசிகளில் பாலிசி எடுத்து முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பாலிசிதாரர் தவறான தகவல்களைத் தந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பிரீமியத்தை திருப்பி தரவேண்டும். இதுவே யூலிப் பாலிசி ரிவைவல் காலத்தில் பிரீமியம் செலுத்தப்பட்டு இருந்தால், 3 ஆண்டுகளுக்குள் தவறான தகவல்கள் தந்தது கண்டுபிடிக்கப் பட்டால், பாலிசிதாரர் செலுத்திய மொத்த பிரீமியத் தொகை மற்றும் ஃபண்ட் வேல்யூவை (இறுதியாக பிரீமியம் செலுத்திய அன்று உள்ள மதிப்பு) முழுமையாக தரவேண்டும்.
இப்படி பல சட்டத் திருத்தங்களை ஐஆர்டிஏ புதிதாகக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத் தினால் பாலிசிதாரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்’’ என்றார் ஸ்ரீதரன்.
ஐஆர்டிஏ-வின் புதிய சட்ட திருத்தத்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து கவர்ஃபாக்ஸ் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வி.ஸ்ரீநிவாசன் விளக்கிச் சொன்னார்.
இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... ஐஆர்டிஏ அதிரடி! P55a
‘‘இந்த சட்டத்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இனி பாலிசி வழங்கும் போது பாலிசி தாரரை நேரில் சந்தித்து ஆட்களை சரிபார்த்துக் கொள்வது, ஹெல்த் டிக்ளரேஷனை இனி இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே டாக்டர்களை நியமித்து செய்வது, அவரைப் பற்றி தேவையான அனைத்து விவரங்களையும் ஒன்றுக்கு இரண்டு முறை நிறுவனங்களே விசாரித்து பாலிசிகளை வழங்க வேண்டி இருக்கும். இதனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் செலவும், க்ளெய்ம் தொகையும் அதிகரிக்கும். இந்த செலவு அதிகரிப்பு சாதாரண மக்களின் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் பிரதிபலிக்கும்.
ஒவ்வொரு பாலிசியையும் ஆண்டுக்கு ஒருமுறையாவது, முதல்முறை பாலிசி எடுக்கும்போது கவனிப்பதுபோல முழுமையாக பரிசோதிக்க வேண்டி இருக்கும். இந்தியாவில் 30 சதவிகிதத்துக்கு மேற்பட்ட பாலிசிகள் பல காரணங் களால் ரத்து செய்யப்படுகின்றன. இந்த பாலிசிதாரர்களை மீண்டும் விசாரித்து பாலிசி தொடருவதை உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது.
புதிய சட்டத் திருத்தத்தின்படி, ஒரு பாலிசிதாரர் தவறான விவரங்களைக் கொடுத்து பாலிசி எடுத்திருந்தால், அதை முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதிக க்ளெய்ம் தர வேண்டியிருக்கும். சரியாக பிரீமியம் செலுத்தும் பாலிசிதாரர்களுக்கு, நோ க்ளெய்ம் போனஸ் வழங்குவது, பிரீமியத்தில் தள்ளுபடி தருவது போன்ற சலுகைகள் வழங்குவது குறையும்.
பாலிசிதாரர் தவறான விவரங்களை வழங்கி பாலிசி எடுத்திருப்பது முதல் மூன்று ஆண்டுகளில் கண்டுபிடிக்கப் பட்டு, பிரீமியம் திருப்பிக் கொடுத்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்படும். இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏமாற்றும் பாலிசிதாரர்களை அடையாளம் கண்டு, போலி க்ளெய்ம் கோருவதை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்” என்றார் ஸ்ரீநிவாசன்.
இந்த சட்டத் திருத்தத்தால்  மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இன்ஷூரன்ஸ் மீதுள்ள நம்பிக்கை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


வரவேற்புக்குரியதுதான்!
சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர்.
‘‘வரவேற்புக்குரியதுதான். முன்பு இருந்த இன்ஷூரன்ஸ் சட்டப் பிரிவு 45-ன்படி “இரண்டு வருடங்களுக்குபின் க்ளெய்ம் கோரப்படும் அனைத்து லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் க்ளெய்ம் வழங்கப்பட வேண்டும். ஆனால், பாலிசிதாரர் ஏமாற்றி இருக்கிறார் (Fraud) என்று கண்டுபிடிக்கப்பட்டால், க்ளெய்ம் நிராகரிக்கலாம் என்று ஏற்கெனவே இருக்கிறது. புதிதாக வந்திருக்கும் சட்டத்தில் 3 வருடத்துக்குப்பின் கோரப்படும் க்ளெய்ம் எதையும் நிராகரிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் மக்களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது உள்ள பயம் நீங்க அதிக வாய்ப்புள்ளது. அதோடு இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்கள்கூட இந்த சட்டத்தை பார்த்து இன்ஷூரன்ஸ் எடுக்க வாய்ப்பு இருக்கிறது”.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum