திறமையான மேனேஜர் பொய் எதுவும் கூறவில்லை
Wed Oct 14, 2015 8:32 pm
ஒரு மேனேஜர் தன் கம்பெனியின் முதலாளி ரூம்வாசலில் அவர் உத்தரவிற்க்காக காத்திருக்கிறார்....
சிறிது நேத்தில் அவர் அழைக்க கேபினிற்குள் சென்றவர், அலுவலக விஷயங்களை பத்து நிமிடங்களுக்குள்பேசி முடித்துவிட்டு, தயங்கி நிற்கிறார்.
முதலாளி இன்னும்ஏன் நிற்கிறாய் என்பது போல் பார்க்க மேனேஜர் சொல்ல ஆரம்பிக்கிறார், அவர்களின் உரையாடல் உங்களுக்காக.....
மேனேஜர்: சார் நான் நமது கம்பெனிக்காக நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக கடந்த பத்தாண்டுகளாக உழைக்கிறேன்....
முதலாளி: இது எல்லோருக்கும் தெரிந்தது தானே....
மேனேஜர்: எனக்கு சம்பள உயர்வு வேண்டும் சார்...
முதலாளி: கம்பெனியின் மேனேஜர் நீங்கள், நம் கம்பெனி இருக்கும் நிலை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா....?
மேனேஜர்: எனக்கு தெரியாதது ஏதும் இல்லை சார்.... மார்க்கெட்டில் ஏகப்பட்ட காம்படிசன், புதிதாய் வேறு ஆடர்களும் அதிகமாக வரவில்லை, வேறு மெஷின்கள் வாங்கி புதிதாய் சில பொருள்கள் தயாரிக்கலாம் என்றால் பேங்க் லோனும் கிடைக்க தாமதமாகிறது.......
முதலாளி: அப்படி இருந்தும் நம் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை நிறுத்தாமல் இந்த வருடம் ஐந்து சதவீதம் அதிகரித்துக் கொடுத்துள்ளேன். எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி கேட்டால் நான்என்ன செய்வது....?
மேனேஜர்: நீங்கள் என் நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும் சார், சமூகத்தில்என் நிலைமையை நன்கு புரிந்த நான்கு கம்பெனிகள் எப்போதும் என் பின்னால் நின்று கொண்டிருக்கிறதுசார்...! நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்....
முதலாளி: (மனசுக்குள் பல கணக்குகளை போட்டுப் பார்த்து, மேனைஜரின் திறமையும் நன்கு புரிந்து கொண்டு ஒரு முடிவிற்க்கு வந்து) சரி மேனேஜர், அடுத்த மாதத்திலிருந்துஉங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக இன்னும் பதினைந்து சதவீதம் உயர்த்திக் கொடுக்கிறேன், ஆனால், நீங்கள் வேறு கம்பெனி பற்றி என் முன்னால் இனி பேசக்கூடாது என்று சொல்லி தனி உதவியாளரை அழைத்து இதை டைப் அடித்து பிரிண்ட் பண்ணி எடுத்து வரச் சொல்கிறார்.
மேனேஜர்: நீங்கள் இந்த ஊதிய உயர்வைக் கொடுத்த பின், நான் ஏன் சார் இனி அந்த கம்பெனிகளைப் பற்றி பேசப் போகிறேன், இனி எந்த கம்பெனியும் என் பின்னால் வராது சார் என்னு நன்றியுடன் விடை பெறுகிறார்.
வெளியில் வந்த மேனேஜரிடம் அவர் உதவியாளர் என்ன விஷயம் என கேட்க நடந்தவற்றை விளக்கி கூறுகிறார்.
உதவியாளர் மிகவும் ஆச்சர்யத்துடன் அப்படி எந்த நான்கு கம்பெனி உங்கள் பின்னால் நிற்கிறது எனக் கேட்டார்..
மேனேஜர் அமைதியாக சொன்னார்.
செல்போன் கம்பெனி,
வீட்டு பைனான்ஸ் கம்பெனி,
கார் லோன் கம்பெனி,
கிரிடிட் கார்டு கம்பெனி...!
இந்த நாலு கம்பெனிகள் தான் எப்ப பார்த்தாலும் என் பின்னாடியே நிற்கிது...!
நான் மாத தவணைகள் சரியாக கட்டலைன்னு .......!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இப்ப மறுபடியும் மேனேஜர் முதளாளிகிட்ட பேசினதை படிச்சு பாருங்க....!!
உங்களுக்கே புரியும் திறமையான மேனேஜர் பொய் எதுவும் கூறவில்லை என்று...!!!!
சிறிது நேத்தில் அவர் அழைக்க கேபினிற்குள் சென்றவர், அலுவலக விஷயங்களை பத்து நிமிடங்களுக்குள்பேசி முடித்துவிட்டு, தயங்கி நிற்கிறார்.
முதலாளி இன்னும்ஏன் நிற்கிறாய் என்பது போல் பார்க்க மேனேஜர் சொல்ல ஆரம்பிக்கிறார், அவர்களின் உரையாடல் உங்களுக்காக.....
மேனேஜர்: சார் நான் நமது கம்பெனிக்காக நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக கடந்த பத்தாண்டுகளாக உழைக்கிறேன்....
முதலாளி: இது எல்லோருக்கும் தெரிந்தது தானே....
மேனேஜர்: எனக்கு சம்பள உயர்வு வேண்டும் சார்...
முதலாளி: கம்பெனியின் மேனேஜர் நீங்கள், நம் கம்பெனி இருக்கும் நிலை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா....?
மேனேஜர்: எனக்கு தெரியாதது ஏதும் இல்லை சார்.... மார்க்கெட்டில் ஏகப்பட்ட காம்படிசன், புதிதாய் வேறு ஆடர்களும் அதிகமாக வரவில்லை, வேறு மெஷின்கள் வாங்கி புதிதாய் சில பொருள்கள் தயாரிக்கலாம் என்றால் பேங்க் லோனும் கிடைக்க தாமதமாகிறது.......
முதலாளி: அப்படி இருந்தும் நம் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை நிறுத்தாமல் இந்த வருடம் ஐந்து சதவீதம் அதிகரித்துக் கொடுத்துள்ளேன். எல்லாம் தெரிந்த நீங்களே இப்படி கேட்டால் நான்என்ன செய்வது....?
மேனேஜர்: நீங்கள் என் நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும் சார், சமூகத்தில்என் நிலைமையை நன்கு புரிந்த நான்கு கம்பெனிகள் எப்போதும் என் பின்னால் நின்று கொண்டிருக்கிறதுசார்...! நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்....
முதலாளி: (மனசுக்குள் பல கணக்குகளை போட்டுப் பார்த்து, மேனைஜரின் திறமையும் நன்கு புரிந்து கொண்டு ஒரு முடிவிற்க்கு வந்து) சரி மேனேஜர், அடுத்த மாதத்திலிருந்துஉங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக இன்னும் பதினைந்து சதவீதம் உயர்த்திக் கொடுக்கிறேன், ஆனால், நீங்கள் வேறு கம்பெனி பற்றி என் முன்னால் இனி பேசக்கூடாது என்று சொல்லி தனி உதவியாளரை அழைத்து இதை டைப் அடித்து பிரிண்ட் பண்ணி எடுத்து வரச் சொல்கிறார்.
மேனேஜர்: நீங்கள் இந்த ஊதிய உயர்வைக் கொடுத்த பின், நான் ஏன் சார் இனி அந்த கம்பெனிகளைப் பற்றி பேசப் போகிறேன், இனி எந்த கம்பெனியும் என் பின்னால் வராது சார் என்னு நன்றியுடன் விடை பெறுகிறார்.
வெளியில் வந்த மேனேஜரிடம் அவர் உதவியாளர் என்ன விஷயம் என கேட்க நடந்தவற்றை விளக்கி கூறுகிறார்.
உதவியாளர் மிகவும் ஆச்சர்யத்துடன் அப்படி எந்த நான்கு கம்பெனி உங்கள் பின்னால் நிற்கிறது எனக் கேட்டார்..
மேனேஜர் அமைதியாக சொன்னார்.
செல்போன் கம்பெனி,
வீட்டு பைனான்ஸ் கம்பெனி,
கார் லோன் கம்பெனி,
கிரிடிட் கார்டு கம்பெனி...!
இந்த நாலு கம்பெனிகள் தான் எப்ப பார்த்தாலும் என் பின்னாடியே நிற்கிது...!
நான் மாத தவணைகள் சரியாக கட்டலைன்னு .......!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இப்ப மறுபடியும் மேனேஜர் முதளாளிகிட்ட பேசினதை படிச்சு பாருங்க....!!
உங்களுக்கே புரியும் திறமையான மேனேஜர் பொய் எதுவும் கூறவில்லை என்று...!!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|