அப்படிப்பட்ட தேசபக்தனாக இருக்க விரும்பவே இல்லை .
Fri Oct 09, 2015 7:45 pm
Su Po Agathiyalingam·
ஒவ்வொரு நொடியும் சாதிவெறியும் மதவெறியும் தன் கோரமுகத்தை ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு சம்பவத்தில் காட்டிக்கொண்டே இருக்கிறது .
கண்டித்து கண்டித்து வார்த்தைகள்கூட மனமுடைந்து விட்டது .
நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் அளவு சம்பவங்கள் நிகழந்து கொண்டே இருக்கும் போதில் எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுவோரும் ; காயத்தில் உப்பையும் மிளகாயையும் தடவுவோரும் இங்கே அதிகார பீடங்களில் வெறியோடு கொக்கரிக்கிறார்கள் .
நீதிமன்றங்களும் ஊடகங்களும் நடுநிலை போக்கிரிகளும் வக்கணை பேசிக்கொண்டிருக்கிறார்கள் .
இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு அநீதிக்கு துணைவோவதுதான் தேசபக்தி எனில் நான் அப்படிப்பட்ட தேசபக்தனாக இருக்க விரும்பவே இல்லை
.
எனக்கு இறை நம்பிக்கை இல்லை எனினும் இப்போது நான் இறவனிடம் பிரார்த்திக்க நேரின் என்ன கேட்பது ?
“ இறைவா ! அருள் கூர்ந்து என்னை 16 வயது இளைஞனாக்கு ! சக இளைஞர்களை ஆயுதபாணியாக்கி எதிரிகளை நீர்மூலம் செய்யும் சக்தியை எனக்கு அருளிச் செய் !”
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|