ஒரு வெற்றியாளன் எல்லாச் சிக்கல்களிலும் வாய்ப்பை கண்டடைகின்றான்..
Sat Jul 04, 2015 9:31 pm
ஒரு அரசனின் மகனுக்கு ஒரு கண்ணும் ஒரு காலும் குறைபாடுடன் இருந்தது. ஒருநாள் அரசன், நாட்டின் மிகச்சிறந்த கலைஞர்களை வரவழைத்து, தன் மகனை ஒரு அழகான சித்திரத்தில் வரையச் சொன்னார். ஒருவரும் முன் வரவில்லை. குறைபாடுடன் இருக்கும் ஒருவனை எப்படி அழகாக காட்ட முடியும் என்று கலைஞர்கள் தயங்கினார்கள்.
ஆனால் ஒரு கலைஞன் மட்டும் முன்வந்து, தான் வரைவதாக கூறி ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அரசனின் மகனை தத்ரூபமாக வரைந்துக் காட்டினார்.
அரசன் ஆச்சரியமடைந்தார். கலைஞன் வரைந்ததை பார்த்தபோது, ஒரு வேட்டைக்கான இலக்கை நோக்கி, ஒரு கண்ணை மூடிக்கொண்டும், ஒரு காலை மடித்துக் கொண்டும் இருப்பது போல் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது. கலைஞனுக்கு பாராட்டும் பரிசும் அளித்து கெளரவித்தார் அரசன்..
ஒரு வெற்றியாளன் எல்லாச் சிக்கல்களிலும் வாய்ப்பை கண்டடைகின்றான்..
ஆனால் ஒரு கலைஞன் மட்டும் முன்வந்து, தான் வரைவதாக கூறி ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அரசனின் மகனை தத்ரூபமாக வரைந்துக் காட்டினார்.
அரசன் ஆச்சரியமடைந்தார். கலைஞன் வரைந்ததை பார்த்தபோது, ஒரு வேட்டைக்கான இலக்கை நோக்கி, ஒரு கண்ணை மூடிக்கொண்டும், ஒரு காலை மடித்துக் கொண்டும் இருப்பது போல் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது. கலைஞனுக்கு பாராட்டும் பரிசும் அளித்து கெளரவித்தார் அரசன்..
ஒரு வெற்றியாளன் எல்லாச் சிக்கல்களிலும் வாய்ப்பை கண்டடைகின்றான்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|