Re: புதிய தத்துவங்கள் - 3
Fri Jul 03, 2015 9:21 pm
எதிரிகளை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுங்கள், ஆனால் நண்பர்களை எதிரிகளாக மாறவிடாதிர்கள்,,,, ஏனென்றால் பலம் மட்டும் தான் தெரியும் , ஆனால் உங்களின் நண்பர்களுக்கு உங்களின் பலவீனமும் தெரியும் ,,,,,,
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:10 pm
ஒரு பெருங்கூட்டத்துக்குள் இருந்தும் நாம் தனிமையை உணர்ந்தோமேயானால், அது நமக்கான இடமில்லை..
தோல்வியை அவமானமாக பாராமல், பாடமாக பார்ப்பவனே வெற்றி பெறுகிறான்..
தூக்கி எறியப்படும் தருணங்களில்தான், சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது
தோல்வியை அவமானமாக பாராமல், பாடமாக பார்ப்பவனே வெற்றி பெறுகிறான்..
தூக்கி எறியப்படும் தருணங்களில்தான், சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:11 pm
ஃபெயிலியர் ஆன பிராஜெக்ட்டை நினைத்து அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில், ஆகாயத்தில் கூடு திரும்பும் பறவைகளை கவனித்தேன்.. வயிறு நிறைந்ததோ வலி நிறைந்ததோ, அடுத்த நாள் தேடலுக்கான நம்பிக்கையை சுமந்துக்கொண்டு கவலையின்றி திரும்பிக் கொண்டிருக்கின்றன..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:11 pm
வாழ்க்கைல எதுவுமே சாதிக்கலயேனு ஃபீல் பண்றத விட, கண்டிப்பா என்னிக்காவது ஒருநாள் சாதிப்போம்னு நம்பிக்கையோட இருங்க.. நிச்சயம் சாதிக்கலாம்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:13 pm
நாம் இல்லாவிட்டால் யாரும் வருந்துவதில்லை. நம் இடத்திற்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:18 pm
இழந்ததற்காக வருந்தாதீர்கள். எதை இழந்தாலும் அது இன்னொரு வடிவில் வந்தே தீரும்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:18 pm
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டுமே தெரியும்.. 'தேவை எங்கு' என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:18 pm
பொது இடத்தில் குழந்தையின் பசிக்கு தாயானவள் மார் திறக்கையில் வேறு பக்கம் திரும்பும் ஆண்களின் கண்களுக்கு தாய்மை என்று பெயர்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:20 pm
எந்த சொற்களாலும் தர முடியாத ஆறுதலை ஓர் அழுத்தமான கை கோர்த்தல் தந்துவிடுகிறது..
ஒரு ஆணின் அதிகபட்ச பொறுப்புணர்வும் நிதானமும் வெளிப்படும் தருணம், அவன் தன் மனைவி குழந்தையுடன் டூவீலரில் பயணிக்கும் போதே..
தோல்வி என்பது நாம் செய்யத் தவறிய ஒரு காரியத்தை இன்னும் சிறப்பாகவும் இன்னும் கவனத்துடனும் செய்யக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம்..
குழந்தையாய் இருந்த வரை அழுகையை மறைக்க அவசியம் இல்லாமலேயே இருந்தது..
கஷ்ட காலங்களின் போது, பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டும் என்று வேண்டுவதை விட, எது நடந்தாலும் அது நல்லதாய் நடக்கட்டும் என்று வேண்டுங்கள்.. எல்லாம் நல்லபடியாக முடியும்..
ஒரு ஆணின் அதிகபட்ச பொறுப்புணர்வும் நிதானமும் வெளிப்படும் தருணம், அவன் தன் மனைவி குழந்தையுடன் டூவீலரில் பயணிக்கும் போதே..
தோல்வி என்பது நாம் செய்யத் தவறிய ஒரு காரியத்தை இன்னும் சிறப்பாகவும் இன்னும் கவனத்துடனும் செய்யக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம்..
குழந்தையாய் இருந்த வரை அழுகையை மறைக்க அவசியம் இல்லாமலேயே இருந்தது..
கஷ்ட காலங்களின் போது, பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டும் என்று வேண்டுவதை விட, எது நடந்தாலும் அது நல்லதாய் நடக்கட்டும் என்று வேண்டுங்கள்.. எல்லாம் நல்லபடியாக முடியும்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:22 pm
உணவுப் பொருட்களை முடிந்தளவு வீணாக்காதீர்கள். அது வெறும் பணம் சார்ந்ததல்ல. பட்டினியோடு வியர்வை சிந்திய விவசாயிகளின் உழைப்பு..
நகரத்து போக்குவரத்து நெரிசலில் சலிப்புற்று பயணிக்கையில், கடந்துசெல்லும் ஒரு குழந்தையுடனான நேருக்குநேர் பார்வை, அத்தனை அழுத்தங்களையும் போக்கிவிடுகின்றது..
நகரத்து போக்குவரத்து நெரிசலில் சலிப்புற்று பயணிக்கையில், கடந்துசெல்லும் ஒரு குழந்தையுடனான நேருக்குநேர் பார்வை, அத்தனை அழுத்தங்களையும் போக்கிவிடுகின்றது..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:24 pm
எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்பவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள்..
மனைவி மகிழ்ச்சியாக இல்லாத குடும்பமும், விவசாயி மகிழ்ச்சியாக இல்லாத தேசமும் நிச்சயம் முன்னேற முடியாது..
மனைவி மகிழ்ச்சியாக இல்லாத குடும்பமும், விவசாயி மகிழ்ச்சியாக இல்லாத தேசமும் நிச்சயம் முன்னேற முடியாது..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:30 pm
சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய வாய்ப்புகள் தேடி வரும்..
நமக்கு துணையாக யாரும் நிரந்தரமா இருக்கமாட்டார்கள்
என்பதை நினைவுறுத்தவே சில நேரங்களில் தனிமைப்படுத்தப்படுகிறோம்..
பணக்காரன் வசதியாய் தூங்குகிறான்.. ஏழை நிம்மதியாய் தூங்குகிறான்..
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு நாலாபக்கமும் வாசல்கள் திறந்தே இருக்கின்றன..
நமக்கு துணையாக யாரும் நிரந்தரமா இருக்கமாட்டார்கள்
என்பதை நினைவுறுத்தவே சில நேரங்களில் தனிமைப்படுத்தப்படுகிறோம்..
பணக்காரன் வசதியாய் தூங்குகிறான்.. ஏழை நிம்மதியாய் தூங்குகிறான்..
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு நாலாபக்கமும் வாசல்கள் திறந்தே இருக்கின்றன..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:36 pm
மகிழ்ச்சி வரும்போது 'ஆஹா' என்று ஆடாதீர்கள்.. துன்பம் வரும்போது 'அய்யோ' என்று தளராதீர்கள்.. எது வந்தாலும் 'ஆமென்' என்று கடந்து செல்லுங்கள்..
பேசிக்கொண்டே இருந்தால் நமது பலவீனமும், மெளனமாக இருந்தால் அடுத்தவர் பலவீனமும் தெரியவரும்..
நிலத்தில் விளைந்ததை விற்று காசாக்கியது அந்தக்காலம்.. நிலத்தையே விற்று காசாக்குவது இந்தக்காலம்..
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதெல்லாம் ஒரு வரம்யா..
பேசிக்கொண்டே இருந்தால் நமது பலவீனமும், மெளனமாக இருந்தால் அடுத்தவர் பலவீனமும் தெரியவரும்..
நிலத்தில் விளைந்ததை விற்று காசாக்கியது அந்தக்காலம்.. நிலத்தையே விற்று காசாக்குவது இந்தக்காலம்..
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதெல்லாம் ஒரு வரம்யா..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:39 pm
முடியும் வரை முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியும் வரை அல்ல. நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை..
'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள்.. வெற்றி நிச்சியம்..
உச்சியை அடைந்த பின்புதான் கவனமாய் இருக்க வேண்டும். சுற்றிலும் எல்லாப் பக்கமும் சரிவாக இருக்கக்கூடும்..
நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள்.. நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்..
'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள்.. வெற்றி நிச்சியம்..
உச்சியை அடைந்த பின்புதான் கவனமாய் இருக்க வேண்டும். சுற்றிலும் எல்லாப் பக்கமும் சரிவாக இருக்கக்கூடும்..
நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள்.. நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:44 pm
கடவுளை வேண்டினேன், ஆண் குழந்தை பிறந்தது.. அந்த கடவுளே வேண்டும் என்று வேண்டினேன், பெண் குழந்தை பிறந்தது..
தவறை ஒத்துக்கொள்பவன் மனிதன் ஆகின்றான்; தவறை திருத்திக்கொள்பவன் சாதனை படைக்கின்றான்..
பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தி.. உன்னை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்வாயா என்று..
தவறை ஒத்துக்கொள்பவன் மனிதன் ஆகின்றான்; தவறை திருத்திக்கொள்பவன் சாதனை படைக்கின்றான்..
பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தி.. உன்னை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்வாயா என்று..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:50 pm
வாழ்க்கையில் இடையிடையே தோல்விகளை சந்திப்பவன் தான், பெரும் வெற்றி பெறுகின்றான்..
ஆண் குழந்தைகள் வீராப்பாக இருந்துக்கொண்டு காரியத்தை இழந்துவிடுகிறார்கள்.. பெண் குழந்தைகள், 'அப்பா ப்ளீஸ்'பா என காரியத்தை சாதித்துவிடுகிறார்கள்..
என் வாழ்க்கையில் நடந்த நம்பமுடியாத ஆச்சரியம் என்னவென்றால், இதுவரையில் நான் ஆசைபட்ட எதுவுமே கிடைத்ததில்லை.. ஆனால் எனக்கு தேவையானதெல்லாம் கிடைத்து வருகிறது..
ஆண் குழந்தைகள் வீராப்பாக இருந்துக்கொண்டு காரியத்தை இழந்துவிடுகிறார்கள்.. பெண் குழந்தைகள், 'அப்பா ப்ளீஸ்'பா என காரியத்தை சாதித்துவிடுகிறார்கள்..
என் வாழ்க்கையில் நடந்த நம்பமுடியாத ஆச்சரியம் என்னவென்றால், இதுவரையில் நான் ஆசைபட்ட எதுவுமே கிடைத்ததில்லை.. ஆனால் எனக்கு தேவையானதெல்லாம் கிடைத்து வருகிறது..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:54 pm
உன்னைச் சுற்றியுள்ளவர்களை நீ மாற்றியமைக்க முடியாது. ஆனால் உன்னைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றியமைக்கலாம்..
ஒரு பெண் உங்களை தொட்டுப் பேசினாலோ, நெருங்கி நின்றாலோ, அருகில் உட்கார்ந்திருந்தாலோ, அதை காதல் என்றோ காமம் என்றோ எண்ணி விடாதீர்கள்.. அது உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை..
குழந்தைகளை வறுமை தெரியாம நீங்க வளர்க்க நினைக்கறது நல்ல விஷயம்தான்.. அதுக்காக உங்கள் உழைப்பை தெரியாமல் வளர்த்துடாதீங்க..
ஒரு பெண் உங்களை தொட்டுப் பேசினாலோ, நெருங்கி நின்றாலோ, அருகில் உட்கார்ந்திருந்தாலோ, அதை காதல் என்றோ காமம் என்றோ எண்ணி விடாதீர்கள்.. அது உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை..
குழந்தைகளை வறுமை தெரியாம நீங்க வளர்க்க நினைக்கறது நல்ல விஷயம்தான்.. அதுக்காக உங்கள் உழைப்பை தெரியாமல் வளர்த்துடாதீங்க..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:57 pm
படிப்பறிவு இல்லாத அம்மா அப்பாவை பெற்ற கடைசி தலைமுறை நாம்தான்..
எவ்வளவு தான் ஏமாற்றினாலும் மீண்டும் தன்னிடமே வரவழைக்க இருவரால் மட்டுமே முடியும்.. ஒன்று கடவுள், இன்னொன்று பெண்..
வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன..
எவ்வளவு தான் ஏமாற்றினாலும் மீண்டும் தன்னிடமே வரவழைக்க இருவரால் மட்டுமே முடியும்.. ஒன்று கடவுள், இன்னொன்று பெண்..
வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 10:00 pm
பணக்கார தந்தைக்கு மகளாகப் பிறந்திருந்தால் நிறைய இன்பங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் அனுபவங்கள் குறைவாகத்தான் கிடைத்திருக்கும்..
நிஜ உலகில் உறவுகளின் துரோகத்தை அனுபவிக்கிறதுக்கு பதிலா, பேஸ்புக்ல முகமே காட்டாம ஜாலியா இருந்துட்டு போயிறலாம்னு தோணுது..
பணக்காரன் வாங்குனா 'கைமாத்து'.. ஏழை வாங்குனா 'கடன்'..
முதலில் விலகுவது நாமாக இருப்பின் பிரிவின் வலி குறைவே!
பொருட்களை பயன்படுத்துங்கள், நேசிக்காதீர்கள்.. மனிதனை நேசியுங்கள், பயன்படுத்தாதீர்கள்..
குழந்தைகளிடம் 'பணத்தின் அவசியத்தை' எடுத்துச் சொல்லுங்கள்.. 'பணம் அவசியம்' என்று சொல்லி விடாதீர்கள்..
எதையும் தாங்கும் இதயம் வேண்டாம். இதயம் தாங்கும் எதையும் கொடு..
நிஜ உலகில் உறவுகளின் துரோகத்தை அனுபவிக்கிறதுக்கு பதிலா, பேஸ்புக்ல முகமே காட்டாம ஜாலியா இருந்துட்டு போயிறலாம்னு தோணுது..
பணக்காரன் வாங்குனா 'கைமாத்து'.. ஏழை வாங்குனா 'கடன்'..
முதலில் விலகுவது நாமாக இருப்பின் பிரிவின் வலி குறைவே!
பொருட்களை பயன்படுத்துங்கள், நேசிக்காதீர்கள்.. மனிதனை நேசியுங்கள், பயன்படுத்தாதீர்கள்..
குழந்தைகளிடம் 'பணத்தின் அவசியத்தை' எடுத்துச் சொல்லுங்கள்.. 'பணம் அவசியம்' என்று சொல்லி விடாதீர்கள்..
எதையும் தாங்கும் இதயம் வேண்டாம். இதயம் தாங்கும் எதையும் கொடு..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 10:05 pm
அப்பாக்களை இழந்த மகள்களுக்கு மட்டுமே தெரியும், உலகம் பாதுகாப்பற்றது என்று..
யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத ஏதோவொரு துயரம் எல்லோரது வாழ்க்கையிலும் உள்ளது..
வெற்றியடைய இவர் தேவையில்லை. தோல்வியடையாமல் இருக்க இவர் கண்டிப்பாக தேவை.
ஒரு பெண் கண்ணீர் விட்டால் அவள் தைரியப்படுத்திக் கொள்கிறாள் என அர்த்தம்.. அதே ஒரு ஆண் கண்ணீர் விட்டால் தைரியத்தை இழந்துவிட்டான் என அர்த்தம்..
இங்க யாரு சார் அவனவன் வாழ்க்கைய வாழ்றான். அடுத்தவன் வாழ்க்கைய பாத்துட்டு அதே மாதிரி வாழணும்னு தான் ஆசைப்படுறான்..
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் என் வாழ்க்கையும்.. வறுமையை வென்று முடித்தபோது இளமைக்காலம் முடிந்துவிட்டது..
ஒரு பொண்ணுக்கு நம்மால் தொந்தரவு வரக்கூடாது என விலகிப்போகும் ஆண்களின் அந்த குணத்துக்குப் பேர்தான் ஆண்மை..
யாருக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ,
அவர்களாலேயே சீக்கிரம் வலிகளை பெறுகிறோம்..
எந்தப் பொய் சொல்லியும் அம்மாவை ஏமாற்றி விடமுடியும்.
'சாப்பிட்டு விட்டேன்' என்கிற அந்த ஒரு பொய்யைத் தவிர..
யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத ஏதோவொரு துயரம் எல்லோரது வாழ்க்கையிலும் உள்ளது..
வெற்றியடைய இவர் தேவையில்லை. தோல்வியடையாமல் இருக்க இவர் கண்டிப்பாக தேவை.
ஒரு பெண் கண்ணீர் விட்டால் அவள் தைரியப்படுத்திக் கொள்கிறாள் என அர்த்தம்.. அதே ஒரு ஆண் கண்ணீர் விட்டால் தைரியத்தை இழந்துவிட்டான் என அர்த்தம்..
இங்க யாரு சார் அவனவன் வாழ்க்கைய வாழ்றான். அடுத்தவன் வாழ்க்கைய பாத்துட்டு அதே மாதிரி வாழணும்னு தான் ஆசைப்படுறான்..
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் என் வாழ்க்கையும்.. வறுமையை வென்று முடித்தபோது இளமைக்காலம் முடிந்துவிட்டது..
ஒரு பொண்ணுக்கு நம்மால் தொந்தரவு வரக்கூடாது என விலகிப்போகும் ஆண்களின் அந்த குணத்துக்குப் பேர்தான் ஆண்மை..
யாருக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ,
அவர்களாலேயே சீக்கிரம் வலிகளை பெறுகிறோம்..
எந்தப் பொய் சொல்லியும் அம்மாவை ஏமாற்றி விடமுடியும்.
'சாப்பிட்டு விட்டேன்' என்கிற அந்த ஒரு பொய்யைத் தவிர..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 10:09 pm
தன் குறைந்த அளவு வருமானத்தை, தன் குழந்தைக்கு புரியவைக்க முயலும் ஒரு ஏழை தந்தையின் நிலை மிகவும் பரிதாபமானது..
விவசாயிகளை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள் ரியல் எஸ்டேட் நாட்டாமைகள்!
உச்சியை அடைய சுலபமான வழி இல்லை.. உச்சியை அடைந்த யாரும் சுலபமாக அதை அடைந்ததில்லை..
அழகில் மயங்கி காதலில் வீழ்ந்து விடலாம், ஆனால் வாழ்க்கை முழுவதும் வாழப்போவது என்னவோ குணத்தை வைத்து தான் என்பதை மறவாதீர்கள்..
என் மகனுக்காக நான் வேண்டும் வரம் ஒன்றே ஒன்றுதான்,
அவனும் முதியோர் இல்லம் வந்துவிடக் கூடாது என்பதே..
விவசாயிகளை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள் ரியல் எஸ்டேட் நாட்டாமைகள்!
உச்சியை அடைய சுலபமான வழி இல்லை.. உச்சியை அடைந்த யாரும் சுலபமாக அதை அடைந்ததில்லை..
அழகில் மயங்கி காதலில் வீழ்ந்து விடலாம், ஆனால் வாழ்க்கை முழுவதும் வாழப்போவது என்னவோ குணத்தை வைத்து தான் என்பதை மறவாதீர்கள்..
என் மகனுக்காக நான் வேண்டும் வரம் ஒன்றே ஒன்றுதான்,
அவனும் முதியோர் இல்லம் வந்துவிடக் கூடாது என்பதே..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 10:14 pm
வெற்றி உன்னைத் தேடிவராது. நீ தேடினால் வராமலும் போகாது.
ஏழை அப்பாவாக இருப்பதைவிட கொடுமையான விஷயம் வேறெதுவும் இல்லை.!
பாதை ஒன்று கிடைத்திருக்கிறது. வெகு தூரம் நடக்க நான் மட்டும் போதும். வெகு நேரம் நடக்க நீயும் வேண்டும்..
வாய்ப்புகளை தட்டிப் பறிக்காதீர்கள், விட்டும் கொடுக்காதீர்கள்..
அன்று வறுமையில் இருந்தபோது சாப்பிட்ட சாப்பாட்டில் இருந்த சத்து, இன்று வசதியான வாழ்க்கையில் சாப்பிடும் சாப்பாட்டில் இல்லை..
யாருக்கும் தெரியக்கூடாது என விளக்கை அணைத்துவிட்டு
அழுகிறேன். இருள் பார்த்துக் கொண்டிருகிறது..
தண்டவாளத்தின் மீது நடந்து பழகும் சிறுமியின் கவலையெல்லாம் ரயில் வந்துவிடக் கூடாது என்பதல்ல, கீழே இறங்கிவிடக் கூடாது என்பதுதான்.!
ஏழை அப்பாவாக இருப்பதைவிட கொடுமையான விஷயம் வேறெதுவும் இல்லை.!
பாதை ஒன்று கிடைத்திருக்கிறது. வெகு தூரம் நடக்க நான் மட்டும் போதும். வெகு நேரம் நடக்க நீயும் வேண்டும்..
வாய்ப்புகளை தட்டிப் பறிக்காதீர்கள், விட்டும் கொடுக்காதீர்கள்..
அன்று வறுமையில் இருந்தபோது சாப்பிட்ட சாப்பாட்டில் இருந்த சத்து, இன்று வசதியான வாழ்க்கையில் சாப்பிடும் சாப்பாட்டில் இல்லை..
யாருக்கும் தெரியக்கூடாது என விளக்கை அணைத்துவிட்டு
அழுகிறேன். இருள் பார்த்துக் கொண்டிருகிறது..
தண்டவாளத்தின் மீது நடந்து பழகும் சிறுமியின் கவலையெல்லாம் ரயில் வந்துவிடக் கூடாது என்பதல்ல, கீழே இறங்கிவிடக் கூடாது என்பதுதான்.!
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 10:17 pm
சிலசமயம், வாழ்க்கை நாம் விரும்புவதைத் தருவதில்லை. காரணம், நீ அதற்க்குத் தகுதியானவன் இல்லை என்றில்லை, அதைவிடச் சிறந்த ஒன்றுக்கு தகுதியானவன் என்பதால்..
'வாழ்க்கை அழகாதான் இருக்கு'னு நிமிந்து பாக்குறதுக்குள்ள, தலைல நங்குனு கொட்டி குனிய வச்சுருது இந்த வாழ்க்கை!
மாடி வீட்டுக் குழந்தை சாப்பிட அழுகிறது.. தெருவோர குழந்தை சாப்பாட்டிற்காக அழுகிறது..
தன் மனைவியின் கர்ப்பக் காலத்தில் அவள் ஆசைப்படுவதை வாங்கித்தர முடியாத அளவுக்கு வறுமை எதிரிக்கு மட்டுமல்ல துரோகிக்குக் கூட வந்துவிடக்கூடாது..
மகான் போல வாழவேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..
நல்ல விஷயத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கெட்ட விஷயத்தை நமது மனசாட்சியே சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
பள்ளிகளில் தமிழ் செய்யுள் பகுதிகளை மனப்பாடம் செய்ய கற்றுத் தருகிறார்களே தவிர, புரிந்துப் படிக்க யாரும் கற்றுத் தருவதில்லை. அதனால்தான் தமிழ் இலக்கியம் இளக்காரமாகி விட்டது..
மனசுக்கு இஷ்டம்'னா இருட்டு கூட இன்பம் தான்..
என்னிடம் இருந்த அனைத்தையும் மனிதனுக்கு கொடுத்து விட்டேன். இருந்தாலும் என்னை அவன் உயிரோடு விடுவதாக இல்லை! மரம்
'வாழ்க்கை அழகாதான் இருக்கு'னு நிமிந்து பாக்குறதுக்குள்ள, தலைல நங்குனு கொட்டி குனிய வச்சுருது இந்த வாழ்க்கை!
மாடி வீட்டுக் குழந்தை சாப்பிட அழுகிறது.. தெருவோர குழந்தை சாப்பாட்டிற்காக அழுகிறது..
தன் மனைவியின் கர்ப்பக் காலத்தில் அவள் ஆசைப்படுவதை வாங்கித்தர முடியாத அளவுக்கு வறுமை எதிரிக்கு மட்டுமல்ல துரோகிக்குக் கூட வந்துவிடக்கூடாது..
மகான் போல வாழவேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..
நல்ல விஷயத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கெட்ட விஷயத்தை நமது மனசாட்சியே சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
பள்ளிகளில் தமிழ் செய்யுள் பகுதிகளை மனப்பாடம் செய்ய கற்றுத் தருகிறார்களே தவிர, புரிந்துப் படிக்க யாரும் கற்றுத் தருவதில்லை. அதனால்தான் தமிழ் இலக்கியம் இளக்காரமாகி விட்டது..
மனசுக்கு இஷ்டம்'னா இருட்டு கூட இன்பம் தான்..
என்னிடம் இருந்த அனைத்தையும் மனிதனுக்கு கொடுத்து விட்டேன். இருந்தாலும் என்னை அவன் உயிரோடு விடுவதாக இல்லை! மரம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|