" சுய மதிப்பீடு "(SELF-APPRAISAL)
Sat Mar 07, 2015 11:24 am
ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான். அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த ஒரு கடையின் cash கவுன்ட்டர் பக்கத்தில் இருந்தது. அந்த கடை முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தார்.
பையன் : "மேடம்,உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்க முடியுமா?
பெண்மணி (எதிர் பக்கத்தில் பேசுபவர் ):எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து வருகிறார்.
பையன்:"மேடம் அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் கொடுத்தல் போதும், நான் உங்கள் தோட்டத்தை பராமரித்து தருகிறேன் "
பெண்மணி : இல்லை. இப்பொழுது பராமறிப்பவரின் பராமரிப்பில் தோட்டம் நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில் மிகவும் திருப்தி அடைகிறேன்"
பையன் இன்னும் பணிவோடு) ,மேடம் நான் உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட தருவேன்.அதற்க்கு தனியாக எனக்கு சம்பளம் வேண்டாம் .
பெண்மணி : "வேண்டாம் நன்றி "
அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன் ரீசிவரை வைத்துவிட்டு திரும்பினான்.
அந்த கடை முதலாளி அவனிடம் எனக்கு உன்னுடைய அணுகுமுறை,தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர் கொள்ளும் விதம் பிடித்து இருக்கிறது. நான் உனக்கு வேலை தருகிறேன் ,வருகிறாயா என்றார்
பையன் : நன்றி, எனக்கு வேலை வேண்டாம் !!!!!!!
கடை முதலாளி : இவ்வளவு நேரம் வேலைக்காக மன்றாடி கொண்டு இருந்தாய் !
பையன் :"இல்லை சார்,நான் நன்றாக வேலை செய்கிறேனா என்று தெரிந்து கொள்ளத்தான் இப்படி செய்தேன். அவர்களிடம் வேலை செய்யும் தோட்டக்காரன் வேறு யாருமல்ல , நான்தான்..!
பையன் : "மேடம்,உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்க முடியுமா?
பெண்மணி (எதிர் பக்கத்தில் பேசுபவர் ):எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து வருகிறார்.
பையன்:"மேடம் அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் கொடுத்தல் போதும், நான் உங்கள் தோட்டத்தை பராமரித்து தருகிறேன் "
பெண்மணி : இல்லை. இப்பொழுது பராமறிப்பவரின் பராமரிப்பில் தோட்டம் நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில் மிகவும் திருப்தி அடைகிறேன்"
பையன் இன்னும் பணிவோடு) ,மேடம் நான் உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட தருவேன்.அதற்க்கு தனியாக எனக்கு சம்பளம் வேண்டாம் .
பெண்மணி : "வேண்டாம் நன்றி "
அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன் ரீசிவரை வைத்துவிட்டு திரும்பினான்.
அந்த கடை முதலாளி அவனிடம் எனக்கு உன்னுடைய அணுகுமுறை,தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர் கொள்ளும் விதம் பிடித்து இருக்கிறது. நான் உனக்கு வேலை தருகிறேன் ,வருகிறாயா என்றார்
பையன் : நன்றி, எனக்கு வேலை வேண்டாம் !!!!!!!
கடை முதலாளி : இவ்வளவு நேரம் வேலைக்காக மன்றாடி கொண்டு இருந்தாய் !
பையன் :"இல்லை சார்,நான் நன்றாக வேலை செய்கிறேனா என்று தெரிந்து கொள்ளத்தான் இப்படி செய்தேன். அவர்களிடம் வேலை செய்யும் தோட்டக்காரன் வேறு யாருமல்ல , நான்தான்..!
இதற்கு பெயர்தான் " சுய மதிப்பீடு "(SELF-APPRAISAL)
Re: " சுய மதிப்பீடு "(SELF-APPRAISAL)
Sat Mar 07, 2015 4:07 pm
யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|