குழியில் விழுந்து கழுதை
Wed Feb 18, 2015 6:53 pm
ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தான். அவனிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது, கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தான். கழுதையை காப்பாற்றாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விட முடிவெடுத்தான். மண்வெட்டி கொண்டு மண்ணை அள்ளி கிணற்றுக்குள் தள்ளினான்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. அவன் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தான். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது. இதைக்கண்ட அந்த சலவைத் தொழிலாளி கழுதையின் விடாமுயற்சியையும், உயிர் பிழைக்கும் தாகத்தையும் கண்டு மனமிறங்கி, கழுதையை தன்னுடனே அழைத்துச் சென்றான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்துஉழன்று கொண்டிராமல், அதையெல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்யும் போதுதான் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..
எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தான். கழுதையை காப்பாற்றாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விட முடிவெடுத்தான். மண்வெட்டி கொண்டு மண்ணை அள்ளி கிணற்றுக்குள் தள்ளினான்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. அவன் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தான். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது. இதைக்கண்ட அந்த சலவைத் தொழிலாளி கழுதையின் விடாமுயற்சியையும், உயிர் பிழைக்கும் தாகத்தையும் கண்டு மனமிறங்கி, கழுதையை தன்னுடனே அழைத்துச் சென்றான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்துஉழன்று கொண்டிராமல், அதையெல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்யும் போதுதான் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|