தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சுவிசேஷத்தின் ரேட் மிகக் கடுமையாக ஏறிவிட்டது Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சுவிசேஷத்தின் ரேட் மிகக் கடுமையாக ஏறிவிட்டது Empty சுவிசேஷத்தின் ரேட் மிகக் கடுமையாக ஏறிவிட்டது

Sat Feb 21, 2015 9:19 pm
(சுவிசேஷத்தையும் அதன் தொடர்பான நன்மைகளையும்) இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள் என்றார் இயேசு (மத்தேயு 10:Cool.

சுவிசேஷத்தை அறிப்பவர்களுக்கு சுவிசேஷத்தால் பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டதாக பவுல் சொன்னார் (1 கொரி. 9:14). இங்கு பிழைப்பு என்பது உணவு/உடை போன்ற அடிப்படைத்தேவைகளை மட்டுமே குறிக்கிறது. ஆனாலும் இந்த உரிமையைத் தான் அனுபவிக்கவில்லை என அடுத்த வசனத்திலேயே பவுல் கூறினார்.

இப்படி மிகுந்த சுயமரியாதையுடன் அக்காலத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வந்து சுவிசேஷத்தை அறிவித்த மிஷனரிகள்கூட, தங்கள் உடைமைகளை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு சுவிசேஷம் அறிவித்தனர்.

சுமார் 40 வருடங்களுக்கு முன்னர்கூட ஒரு சிறிய ஒலிபெருக்கியைக் கையில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக சுவிசேஷம் அறிவித்தனர், பல சுவிசேஷகர்கள். ஆனால் அய்யகோ, சுமார் 30 வருடங்களாக இந்நிலை கடுமையாக மாறிவிட்டது. 

ஆரம்பத்தில் சுவிசேஷம் அறிவிக்க இவ்வளவு செலவாகிறது என்று சொல்லி, ஜனங்களிடம் பணம் கேட்கத் தொடங்கினார்கள், சுவிசேஷகர்கள். இவ்விதமாக சுவிசேஷத்திற்கு மறைமுகமாக விலை (ரேட்) நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆளாளுக்கு பெரிய மேடை போட்டு சுவிசேஷம் அறிவிப்பதாகச் சொல்லி, ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்தனர். பின்னர் ஆயிரம் என்பது பத்தாயிரமாக மாறியது, பின்னர் அது லட்சமாக மாறியது. இப்படியாக ஏறிவந்த சுவிசேஷத்தின் ரேட், இன்று கோடிக்கணக்காகிவிட்டது.

ஆம், ஆல்வின் தாமஸ் என்பவருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க 2 கோடி தேவைப்படுகிறதாம். அதற்கென கொடுக்கக்கூடிய நபர்கள் தேவை என அவர் விளம்பரம் செய்துள்ளதை, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் பார்க்கிறீர்கள்.

ஆலன்பால் என்பவருக்கு 20 கோடிக்கு மேலாக தேவைப்பட்டதை, தனது டிவி மூலம் சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இவ்வாறே பால் தினகரன், சாது செல்வராஜ், மோகன் சி லாசரஸ் போன்ற பலருக்கும் அவர்களது சுவிசேஷப் பணிக்காக கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுவதாக அவ்வப்போது அறிவிப்பதை நாம் பல்வேறு ஊடகங்களிலும் பார்க்கலாம்.

இதிலிருந்து நாம் அறிவதென்ன? இயேசுவின் காலத்தில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட சுவிசேஷத்தின் ரேட், இன்று மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டது என்பதே.

இந்த உயர்வுக்குக் காரணமென்ன? என்ன/ஏது என்ற கேள்வி கேட்காமல், இயேசுவின் பெயரைச் சொல்லி எவர் பணம் கேட்டாலும், பணத்தை அள்ளிக்கொடுக்கிற ஜனங்களாகிய நாம்தான்.

பணம் கேட்பவர்களின் செயல் வேதபோதனைக்கு உட்பட்டதா இல்லையா என்பதையெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. ஊழியத்தின் பெயரால் எவர் வந்தாலும் அவருக்குக் கொடுத்தால் நமக்கு இவ்வுலக ஆசீர்வாதம் கிடைக்கும் எனும் மூடத்தனமான எதிர்பார்ப்பால்தான் நம்மில் அநேகர் பணம் கொடுக்கிறோம்.

கேட்டால், இச்சிறியரில் ஒருவருக்குக் கொடுப்பவன் அதற்கேற்ற பலனை அடைவான் என இயேசு கூறியதாகக் கூறுகிறோம். உண்மையில் இயேசு என்ன சொன்னார்?

மத்தேயு 10:42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பணம் அல்ல, தண்ணீர் கொடுப்பதைப் பற்றி இவ்வசனத்தில் இயேசு கூறுகிறார். இதன் விரிவாக்கமாக உணவு மற்றும் உடையைச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி அவர்களின் ஆடம்பரச் செலவுகளுக்குப் பணம் கொடுப்பதைப் பற்றி இயேசு கூறவில்லை.

ஆனால் நாமோ அவர்கள் ஆடம்பரமாகக் கட்டுகிற கட்டடங்களுக்கும் பிற செயல்களுக்கும் பணத்தை வாரிவழங்குகிறோம். நம்மை நன்றாகப் புரிந்துகொண்ட அவர்களும், ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு, கோடிக்கணக்காகப் பணம் கேட்கின்றனர். அவர்களுக்கு நாம் கொடுக்கிற வரை அவர்கள் கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்; அது ஒரு நாளும் ஓயாது.


நன்றி: ரூபன்சாம் - முகநூல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum