வேதத்தைப் பற்றிய இவர்களின் கருத்து
Thu Feb 19, 2015 11:12 pm
நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்த பின் ஸ்பர்ஜன் கூறினார்,"நான் நூறாவது முறை வேதத்தை வாசித்த போது ,முதல்முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்"
Re: வேதத்தைப் பற்றிய இவர்களின் கருத்து
Thu Feb 19, 2015 11:13 pm
உலகப் புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் தனது மரணப் ப்டுக்கையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம் ,"அந்தப் புத்தகத்தை எனக்குத் தா"என்றாராம்.
மகன் அவரிடம்,"எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார்.
அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார்,"இவ்வுலகில் 'புத்தகம்' என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே"!
மகன் அவரிடம்,"எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார்.
அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார்,"இவ்வுலகில் 'புத்தகம்' என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே"!
Re: வேதத்தைப் பற்றிய இவர்களின் கருத்து
Thu Feb 19, 2015 11:13 pm
வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல.அது நித்திய காலமாக உள்ள ஒரு அழிவற்ற நூலாகும்-மார்ட்டின் லுத்தர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|