சிலுவை மரணம் இல்லையென்றால்...
Thu Feb 19, 2015 3:04 am
‘இயேசு சிலுவையில் மரிக்கவில்லை’ என்ற கருத்து இஸ்லாமிய மதத்துக்கும் சாத்தானுக்கும் மிக அவசியமானதொன்று.
இயேசுவுக்கு சிலுவை மரணம் இல்லையென்றால் நம்முடைய பாவங்களுக்கு அவர் நம்மை தேவனுடன் ஒப்புரவாக்க முடியாது.
மேலும் முகம்மதுவால், ஆபிரகாமால், மற்ற போதகர்களால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இயேசுகிறிஸ்து செய்துமுடித்தார். ‘நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை அவர் சிலுவையில் செலுத்தினார்’ என்று சத்தியவேதம் கூறுகிறது.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய இரத்தபலி அவசியமானது. ஏதேன் தோட்டத்திலும் இரத்தம் சிந்தப்பட்டது.
ஆதாம் ஏவாள் தங்களுக்கு அத்தியிலைகளைத் தைத்துக் கொண்ட பொழுது எந்தவித இரத்தமும் சிந்தப்படவில்லை. எனவே தேவன் ஒருமிருகத்தைக் கொன்று அவர்களை உடுத்துவித்தார்.
இன்றைய கிறிஸ்தவர்களாகிய நமக்கு இயேசுகிறிஸ்து கல்வாரியில் சிந்தின இரத்தம் மிகவும் விலையேறப் பெற்றதாக உள்ளது. நம்மீது உள்ள தேவனுடைய அன்பை நமக்கு அது நிரூபித்துக் காட்டுகிறது.
*** Selected ***
இயேசுவுக்கு சிலுவை மரணம் இல்லையென்றால் நம்முடைய பாவங்களுக்கு அவர் நம்மை தேவனுடன் ஒப்புரவாக்க முடியாது.
மேலும் முகம்மதுவால், ஆபிரகாமால், மற்ற போதகர்களால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இயேசுகிறிஸ்து செய்துமுடித்தார். ‘நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை அவர் சிலுவையில் செலுத்தினார்’ என்று சத்தியவேதம் கூறுகிறது.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய இரத்தபலி அவசியமானது. ஏதேன் தோட்டத்திலும் இரத்தம் சிந்தப்பட்டது.
ஆதாம் ஏவாள் தங்களுக்கு அத்தியிலைகளைத் தைத்துக் கொண்ட பொழுது எந்தவித இரத்தமும் சிந்தப்படவில்லை. எனவே தேவன் ஒருமிருகத்தைக் கொன்று அவர்களை உடுத்துவித்தார்.
பழைய ஏற்பாடு முழுவதிலும் இந்த இரத்தம் சிந்துதலைப் பற்றி நாம் வாசிக்கிறோம்.
இன்றைய கிறிஸ்தவர்களாகிய நமக்கு இயேசுகிறிஸ்து கல்வாரியில் சிந்தின இரத்தம் மிகவும் விலையேறப் பெற்றதாக உள்ளது. நம்மீது உள்ள தேவனுடைய அன்பை நமக்கு அது நிரூபித்துக் காட்டுகிறது.
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5: என்று சத்தியவேதம் கூறுகிறது.
*** Selected ***
Re: சிலுவை மரணம் இல்லையென்றால்...
Thu Feb 19, 2015 12:08 pm
வெளிப்படுத்தின விசேஷம் முதல் அதிகாரம் 18ஆவது வசனத்திலே, “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்”. மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவர் என்று சொல்லுகிறாரே,
அதன் பொருள் என்ன? திறவுகோல் அதிகாரத்தைக் காட்டுகிறது. பாவத்தின் மரணத்தின்மேல் அதிகாரமுள்ளவர். பாதாளத்தின்மேல் அதிகாரமுள்ளவர். ஆனால், அதை சொல்லுவதற்கு முன்பு, “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று ஏன் சொல்லவேண்டும்?
தம்மை மரித்தவராகக் காட்டுகிறார். மரித்தாலும் உயிரோடு எழுந்து, எப்போதும் உயிரோடிருக்கிறவராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். இதிலேதான் அவர் சாவை வென்றதின் இரகசியத்தை நாம் பார்க்கிறோம்.
சாவை சந்தித்ததின்மூலமாக, சாவின் அனுபவத்தின்மூலமாக அவர் சாவை வென்றார். ஆகையினாலே, அவர் மரித்ததிற்கும், மற்றவர்கள் மரித்ததிற்கும் வேறுபாடு இருக்கிறதில்லையா! மதத் தலைவர்கள் மரித்தார்கள்; சாகிறார்கள்; சாவார்கள்.
ஆனால், இயேசுகிறிஸ்து செத்தது ஒரு நோக்கத்திற்காக. பாவத்தை மேற்கொள்ளுவதற்காக. பாவத்திற்குப் பிராயசித்த பலியாக அவர் தம்மைக் கொடுத்தார். இதை வேதம் எடுத்துக்காட்டுகிறது.
ஆண்டவராகிய இயேசுவுமே இதை சொல்லியிருக்கிறார்: பாவத்திலிருந்து மனிதரை மீட்கும் பொருளாக அவர் தம் உயிரைக் கொடுத்தார் என்று கூறியிருக்கிறார்.
அதன் பொருள் என்ன? திறவுகோல் அதிகாரத்தைக் காட்டுகிறது. பாவத்தின் மரணத்தின்மேல் அதிகாரமுள்ளவர். பாதாளத்தின்மேல் அதிகாரமுள்ளவர். ஆனால், அதை சொல்லுவதற்கு முன்பு, “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று ஏன் சொல்லவேண்டும்?
தம்மை மரித்தவராகக் காட்டுகிறார். மரித்தாலும் உயிரோடு எழுந்து, எப்போதும் உயிரோடிருக்கிறவராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். இதிலேதான் அவர் சாவை வென்றதின் இரகசியத்தை நாம் பார்க்கிறோம்.
சாவை சந்தித்ததின்மூலமாக, சாவின் அனுபவத்தின்மூலமாக அவர் சாவை வென்றார். ஆகையினாலே, அவர் மரித்ததிற்கும், மற்றவர்கள் மரித்ததிற்கும் வேறுபாடு இருக்கிறதில்லையா! மதத் தலைவர்கள் மரித்தார்கள்; சாகிறார்கள்; சாவார்கள்.
ஆனால், இயேசுகிறிஸ்து செத்தது ஒரு நோக்கத்திற்காக. பாவத்தை மேற்கொள்ளுவதற்காக. பாவத்திற்குப் பிராயசித்த பலியாக அவர் தம்மைக் கொடுத்தார். இதை வேதம் எடுத்துக்காட்டுகிறது.
ஆண்டவராகிய இயேசுவுமே இதை சொல்லியிருக்கிறார்: பாவத்திலிருந்து மனிதரை மீட்கும் பொருளாக அவர் தம் உயிரைக் கொடுத்தார் என்று கூறியிருக்கிறார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|