தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மிரட்டி பணம் பறிக்கின்றனவா மேட்ரிமோனியங்கள்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மிரட்டி பணம் பறிக்கின்றனவா மேட்ரிமோனியங்கள்? Empty மிரட்டி பணம் பறிக்கின்றனவா மேட்ரிமோனியங்கள்?

Sat Dec 27, 2014 5:17 am
வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணி பார், என்பார்கள். அத் தனை நிஜம் இந்த வார்த்தைகள். பெண் தேடும் படலம் துவங்கி சாந்தி முகூர்த்தம் வரை பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக் கின்றன திருமணங்கள். எந்த மதமானாலும் சாதியானாலும் திருமணம் என்பது பொதுவானதே.

சடங்குகள் மட்டுமே வேறுபடுகின்றன. பெற்றோர்கள் தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ நல்ல இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து வைப்பதே அவர்களின் ஆசையும் எதிர்பார்ப்புமாக உள்ளது. பழங்காலத்தில் தரகர்கள் மூலம் பெண் பார்க்கும் படலம் நடந்தது.

பின்னர், நாளிதழ்களில் விளம்பரம் என பரவி இன்று ஊடகங்கள், இணை யங்கள், மற்றும் மேட்ரி மோனி யங்கள் எனப் பிரத்யேக வலைதளங் கள் பலவற்றின் மூலம் பொருத்தங்கள் பார்க்கப்பட்டு திருமணங்கள் முடிகின்றன. அதற்கேற்றாற்போல், போலி யான தரகர்களும் மேட்ரிமோனியங்களும் உருவாகிவிட்டதா கவும் அதிலும் குறிப்பாக மிரட்டி பணம் பறிக்கும் மேட்ரிமோனியங்கள் பல வரன்தேடுவோரை ஏமாற்றிவருவதாக புகார் எழுந்துள்ளது..

பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க மேட்ரிமோனியங்களை அணுகினால், அவர்கள் முதலில் நுழைவுக்கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி பதிவு செய்யச் சொல்கின்றனர். சில மேட் ரிமோனியங்களில் ஜாதகம் ஒன்றுக்கு ரூ.50 வீதமும், குறிப்பிட்ட எண்ணிக்கை உடைய ஜாதகங்களுக்கு ரூ.1,500 க்கும் மேல் கட்டி பதிவு செய்த பிறகு ஜாதகங்களைத் தருகின்றனர். அந்த ஜாதகங்கள் தங்களுடைய ஜாதகத்துக்குப் பொருத்தமானதாக இருப்பதில்லை என்பதோடு அதில் பல தவறானதாக இருக்கின்றன. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்.

“ மேட்ரிமோனி நிறுவனம் தரும் முகவரிகளும், போன் நம்பர்களும் போலியானதாக இருக்கின்றன. மேட் ரிமோனியத்தினரே இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரே மேட்ரிமோனியத்திடம் எங்கள் மகனுக்குப் பொருத்தமுள்ள ஜாதகம் கேட்டு ரூ.10,000 வரை செலவு செய்துவிட்டோம். ஆனால், மேலும்மேலும் அவர்கள் பணம்தான் கேட்கிறார்களே தவிர, இதுவரை உருப்படியான ஜாதகத்தைக்கூட அவர்கள் தரவில்லை.

அவர்கள் தந்த சில முகவரிகளை அணுகினால் தாங்கள் அப்படி எதுவும் பதிவு செய்யவில்லை என அதிர்ச்சி தருகின்றனர் அவர்கள். பணம் பறிப்பதற்காக அதே ஜாதகங்களில் பெயர், முகவரி, போன் நம்பர் ஆகியவற் றை மாற்றி, திரும்ப அனுப்பி வைக்கின்றனர். இதுகுறித்து வேறு எங்காவது புகார் கொடுத்தால், உன் மகன் (மகள்) ஜாதகத்தை எங்களிடம் கொடுத்திருக்கே. அதில் தோஷம் இருப்பதாகவும் வேறு பலவிதமான செய்திகளையும் திரித்துக் கூறி கல்யாணம் ஆகாமல் செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்“ என்று கண்ணீர் மல்கக் கூறினார் சென்னைவாசி ஒருவர்.

“ ஒரு பதிவு நம்பருக்கு ஒருமுறை மட்டுமே ஜாதகங்களை அனுப்புவோம். திரும்ப அனுப்பமாட்டோம். நாங்கள் அனுப்பியுள்ள ஜாதகங்களில் முழு விவரத்துடன் போன் நம்பர் கொடுத்துள்ளோம்.

அவர்கள்தான் அதை முழுதாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வழங்கப்பட்ட ஜாதகங்களில் யாருக்காவது திருமணம் நடந்திருந்தால், அதை உடனே தெரியப்படுத்தி விடுவோம்.

அதற்கு மேலும் ஜாதகம் வேண்டுமெனில், அவர்கள் பதிவு நம்பரை புதுப் பிக்க வேண்டும். அதற்குத் தனியே பணம் செலுத்த வேண்டும். இந்த நிபந் னைகளை முதலிலேயே அவர்களுக்கு தெரிவித்து விடுகிறோம். தவிர, நாங்கள் அதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது கிடையாது.’’ என்றார் வாடிக் கையாளரின் குற்றச்சாட்டு பதில் அளித்த ஒரு திருமணத் தகவல் மைய பொறுப்பாளர்.

திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர் என்பார்கள். அது தழைத்து ஓங்க மேட்ரிமோனியங்கள் பெற் றோர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

- ஜெ.பிரகாஷ்


Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum