கொள்ளவும் விற்கவுங் கூடாதபடி...
Sun Aug 10, 2014 9:30 pm
குஜராத்தில் தொழில்நுட்ப புரட்சி, கைரேகை இருந்தால் தான் ரேஷன் பொருட்கள்
மக்கள் நலனுக்கென்று குஜராத் அரசு புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக நியாயவிலைக்கடைகளில் நவீன தொழில்நுட்பம் கொண்டு பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இத்திட்டத்தை குறித்து முதன்மை செயலாளர் ஆர்.பி.குப்தா கூறுகையில் இத்திட்டம் நியாயவிலைக்கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும், மற்றவர்களின் ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதும் தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் மொத்தம் உள்ள 17,200 நியாய விலைக்கடைகளில் 70 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.
வெளிப்படுத்தல்: 13:17 - "அந்த மிருகத்தின் முத்திரையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது".
இந்த தொழில்நுட்பப் புரட்சி இதில் தான் முடியும் போலிருக்கு...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|