துறவியும்.... திருடனும்...
Sat Jun 07, 2014 12:03 pm
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். எங்காவது திருடலாம் என்று ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவியை சந்தித்தான். அவரிடம் எதுவும் இருக்காது என்று தெரிந்தாலும் சரி வந்ததுக்கு எதையாவது பிடுங்கிக்கலாம் என்று கத்தியை காட்டி மிரட்டினான்.
புன்முறுவல் பூத்த துறவி “உனக்கு என்னப்பா வேண்டும்”. என்று கேட்டார்.
அவரை ஏளனமாக பார்த்தபடி திருடன் சொன்னான் “ எனக்கு மூட்டை நிறைய தங்கம் வேண்டும் கொடுப்பாயா” என்றான்.
உடனே துறவி “ இவ்வளவு தானே, இங்கிருந்து அரைக்கல் தொலைவில் ஒரு மரம் இருக்கிறது. அதனடியில் நிறைய தங்கம் இருக்கிறது போய் எடுத்துக் கொள்” என்றார்.
அவரை சந்தேகமாக பார்த்தபடி சென்றவன் ஆச்சரியபட்டு போனான். அவர் சொன்னது போலவே அந்த மரத்தடியில் தங்க நாணயங்கள் குவியலாக இருந்தன. உடனே ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு வந்தவன், வரும் வழியில் சாமியாரைப் பார்த்தான்.
அவர் அமைதியாக இவனைப்பார்த்து “என்னப்பா தங்கம் கிடைத்த்தா” என்று சாதாரணமாக கேட்டார்.
உடனே இவனுக்கு மீண்டும் சந்தேகம் இதைவிட பெரிய விஷயம் ஏதோ இவரிடம் இருக்கிறது என நிணைத்து “ ஐயா இதைவிட மேலாக வைரம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான்.
துறவி சொன்னார் “இங்கிருந்து ஒரு கல் தொலைவில் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. அங்கே போனால் வைரம் நிறைய இருக்கிறது என்றார்.
பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைரம் ஒரு மூட்டை அள்ளி வந்தான்.
ஆனாலும் திருப்தி ஆகாமல் “ ஐயா இதைவிட வைடுரியம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான் துறவியிடம்.
துறவி சொன்னார் “இங்கிருந்து இரண்டு கல் தொலைவில் ஒரு மலை இருக்கிறது. அங்கே போனால் வைடுரியம் நிறைய இருக்கிறது என்றார்.
மீண்டும பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைடுரியத்தையும் அள்ளி வந்தான்.
ஆனாலும் திருப்தியடையாமல் இந்த ஆள் இதெல்லாம் வேண்டாம் என்று அமர்ந்திருக்கிறார் என்றால் இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் என்னவோ இவரிடம் இருக்கிறதென்று அவரிடம் சென்று அமர்ந்து அதைப்பற்றி கேட்டான்.
உடனே சிரித்தபடி துறவி அவனுக்கு தவம் செய்து ஆண்டவனை அடைவது தான் இதெல்லாம் விட சிறந்த மகிழ்ச்சியான விஷயம் என்று அவனை அருகில் அமர்த்தி தவம் செய்ய கற்றுக் கொடுத்தார்.
.
.
.
.
.
.
இரண்டு நாள் கழித்து திருடனின் மகன் அந்த வழியாக வந்தவன் இருவரையும் பார்த்தபடி அருகில் சென்றான். துறவியிடம் சென்று நடந்ததை கேட்டான். பின்னர் அருகில் இருந்த மூன்று மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினான்.
உடனே துறவி அவனை அழைத்து “குழந்தாய் இவையெல்லாம் வெறும் கற்கள், இவற்றைவிட மேலான விஷயங்களை நான் உனக்கு சொல்லித்தருகிறேன் கற்றுக் கொள்கிறாயா?” என்றார்.
திருடனின் மகன் சொன்னான் “ஐயா என் அம்மா வரும்போதே சொல்லிவிட்டார்கள், வேலையில்லாத வெட்டிப்பயலுக எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க, உங்கப்பன் அதை உக்காந்து கேட்டுட்டு இருப்பான். நீயாவது பொறுப்பா போனமா, போன வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருன்னு சொல்லிருக்காங்க, நான் வரட்டுங்களா ஐயா”, என்று மூட்டையை தூக்கிய படி நடையை கட்டினான்.
துறவி அவனைப்பார்த்து திகைத்து நின்றார்.
நன்றி: இன்று முதல் தகவல்
புன்முறுவல் பூத்த துறவி “உனக்கு என்னப்பா வேண்டும்”. என்று கேட்டார்.
அவரை ஏளனமாக பார்த்தபடி திருடன் சொன்னான் “ எனக்கு மூட்டை நிறைய தங்கம் வேண்டும் கொடுப்பாயா” என்றான்.
உடனே துறவி “ இவ்வளவு தானே, இங்கிருந்து அரைக்கல் தொலைவில் ஒரு மரம் இருக்கிறது. அதனடியில் நிறைய தங்கம் இருக்கிறது போய் எடுத்துக் கொள்” என்றார்.
அவரை சந்தேகமாக பார்த்தபடி சென்றவன் ஆச்சரியபட்டு போனான். அவர் சொன்னது போலவே அந்த மரத்தடியில் தங்க நாணயங்கள் குவியலாக இருந்தன. உடனே ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு வந்தவன், வரும் வழியில் சாமியாரைப் பார்த்தான்.
அவர் அமைதியாக இவனைப்பார்த்து “என்னப்பா தங்கம் கிடைத்த்தா” என்று சாதாரணமாக கேட்டார்.
உடனே இவனுக்கு மீண்டும் சந்தேகம் இதைவிட பெரிய விஷயம் ஏதோ இவரிடம் இருக்கிறது என நிணைத்து “ ஐயா இதைவிட மேலாக வைரம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான்.
துறவி சொன்னார் “இங்கிருந்து ஒரு கல் தொலைவில் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. அங்கே போனால் வைரம் நிறைய இருக்கிறது என்றார்.
பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைரம் ஒரு மூட்டை அள்ளி வந்தான்.
ஆனாலும் திருப்தி ஆகாமல் “ ஐயா இதைவிட வைடுரியம் போன்றவை எங்காவது இருக்கிறதா?” என்று கேட்டான் துறவியிடம்.
துறவி சொன்னார் “இங்கிருந்து இரண்டு கல் தொலைவில் ஒரு மலை இருக்கிறது. அங்கே போனால் வைடுரியம் நிறைய இருக்கிறது என்றார்.
மீண்டும பரபரப்பான திருடன் மீண்டும் ஒரு சாக்கை எடுத்து கொண்டு ஓடி வைடுரியத்தையும் அள்ளி வந்தான்.
ஆனாலும் திருப்தியடையாமல் இந்த ஆள் இதெல்லாம் வேண்டாம் என்று அமர்ந்திருக்கிறார் என்றால் இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் என்னவோ இவரிடம் இருக்கிறதென்று அவரிடம் சென்று அமர்ந்து அதைப்பற்றி கேட்டான்.
உடனே சிரித்தபடி துறவி அவனுக்கு தவம் செய்து ஆண்டவனை அடைவது தான் இதெல்லாம் விட சிறந்த மகிழ்ச்சியான விஷயம் என்று அவனை அருகில் அமர்த்தி தவம் செய்ய கற்றுக் கொடுத்தார்.
.
.
.
.
.
.
இரண்டு நாள் கழித்து திருடனின் மகன் அந்த வழியாக வந்தவன் இருவரையும் பார்த்தபடி அருகில் சென்றான். துறவியிடம் சென்று நடந்ததை கேட்டான். பின்னர் அருகில் இருந்த மூன்று மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினான்.
உடனே துறவி அவனை அழைத்து “குழந்தாய் இவையெல்லாம் வெறும் கற்கள், இவற்றைவிட மேலான விஷயங்களை நான் உனக்கு சொல்லித்தருகிறேன் கற்றுக் கொள்கிறாயா?” என்றார்.
திருடனின் மகன் சொன்னான் “ஐயா என் அம்மா வரும்போதே சொல்லிவிட்டார்கள், வேலையில்லாத வெட்டிப்பயலுக எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க, உங்கப்பன் அதை உக்காந்து கேட்டுட்டு இருப்பான். நீயாவது பொறுப்பா போனமா, போன வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருன்னு சொல்லிருக்காங்க, நான் வரட்டுங்களா ஐயா”, என்று மூட்டையை தூக்கிய படி நடையை கட்டினான்.
துறவி அவனைப்பார்த்து திகைத்து நின்றார்.
நன்றி: இன்று முதல் தகவல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|