ஆத்திசூடி அரசியல் சிறுகதைகள்
Fri Jan 31, 2014 1:18 am
ஆறுவது சினம்!
எம் எல் ஏ ஆறுமுகம் ஒரு சிங்கம். தனது தொகுதியிலும் சரி அதற்கு வெளியிலும் சரி, அவரது கோபத்திற்கு முன் யாரும் நிற்க மாட்டார்கள். அத்தனை முன்கோபி.
ஒரு முறை தனது பங்காளி தவறாகப் பேசிவிட்டான் எனும் ஒரே காரணத்தினால் அவர் பங்காளியை நடுத்தெருவில் பந்தாடினார். போலிசும் அவரைப் பிடித்து உள்ளே வைத்தது. இந்த ஒரு காரணத்தாலேயே அவர் உள்ளூரில் பிரபலமாகி, பின்னர் அரசியல் பிரவேசம் செய்து, ஜகஜ்ஜாலம் காட்டி, எப்படியோ கட்சியில் ஒரு முக்கிய பிரமுகர் ஆகி விட்டார்.
இவர் கோபப்பட்டாலும் படாவிட்டாலும் இவரது அல்லக் கைகளின் பயங்கர புரளிகளால் ஆறுமுகம் மென் மேலும் பிரபலமாகி விட்டார். பின்னாளில் இவர் அணிந்திருந்த ஒரு தங்க பிரேஸ்லெட்டில் ஒருவரின் மூக்கை உடைத்து மாவீரன் என்று காட்டிக் கொண்டார். இதனால் இவர் அருகில் வரும்போது அனைவரும் பவ்யமாக எழுந்து கொண்டு நமஸ்கரித்தனர்.
ஆனாலும் என்ன? ஆறுமுகத்தினால் வட்டச் செயலாளர் மட்டுமே ஆக முடிந்தது.
அல்லக் கைகளின் தொந்திரவும் பொறுக்க முடியவில்லை. 'எப்போ அண்ணே எம் எல் ஏ ஆகப் போறீங்க?' என்று துளைத்து எடுக்கத் துவங்கினார்கள்.
அதற்கும் ஒரு நேரம் வந்தது. தனது வட்டத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் மேடையில் வைத்து உள்ளூர் எம் எல் ஏவின் முகத்தில் கோபத்தில் ஒரு குத்து விட்டார். எம் எல் ஏவின் மூக்கு உடைந்து இரத்தம் தெறித்தது.
விஷயம் மேலிடம் வரை போனது. மேலிடத்தில் விசாரணை வந்தபோது அனைவரும் எதிர்பார்த்தது என்னவென்றால் 'ஒழிந்தான் ஆறுமுகம். இவனது முன் கோபத்திற்கு மேலிடம் நிச்சயம் தண்டனை கொடுக்கும். குறைந்த பட்சம் இவனது வட்டச் செயலாளர் பதவியை யாவது பறிப்பார்கள்' என ஆர்வம் மேலிட உள்ளூர்வாசிகள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தபோது அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிப போனது.
அந்த முறை வந்த சட்ட மன்ற வேட்பாளர் பட்டியலில் ஆறுமுகம் முதல் இடம் பெற்றிருந்தார்.
அதற்குச் சொல்லப் பட்ட காரணம் 'கோபப் படும் ஒரு முரட்டு மனிதர் நமது சட்ட மன்றத்திற்குத் தேவைப் படுகிறார்' என்று மேலிடம் கருதியதால் அவருக்கு ஒரு சீட் கொடுக்கப் பட்டு அவரும் ஜெயித்து விட்டார்.
ஜெயித்து வெற்றி மாலை சூடி வீட்டிற்குள் வருகையில் எம் எல் ஏ ஆறுமுகத்தின் மகன் அவ்வையாரின் ஆத்திச் சூடி படித்துக் கொண்டு இருந்தான்...
'அறம் செய்ய விரும்பு... ஆறுவது சினம்...'
ஆறுமுகத்தின் மகன் தன அப்பாவிடம் கேட்டான்
'அப்பா...ஆறுவது சினம்...என்றால் என்றால் என்ன?'
ஆறுமுகம் எம் எல் ஏ சொன்னார்.... ' உதவாததை எல்லாம் படிக்காதேடா.. நாளைக்கு நீ முன்னுக்கு வர முடியாது...'
- டி பெட்
எம் எல் ஏ ஆறுமுகம் ஒரு சிங்கம். தனது தொகுதியிலும் சரி அதற்கு வெளியிலும் சரி, அவரது கோபத்திற்கு முன் யாரும் நிற்க மாட்டார்கள். அத்தனை முன்கோபி.
ஒரு முறை தனது பங்காளி தவறாகப் பேசிவிட்டான் எனும் ஒரே காரணத்தினால் அவர் பங்காளியை நடுத்தெருவில் பந்தாடினார். போலிசும் அவரைப் பிடித்து உள்ளே வைத்தது. இந்த ஒரு காரணத்தாலேயே அவர் உள்ளூரில் பிரபலமாகி, பின்னர் அரசியல் பிரவேசம் செய்து, ஜகஜ்ஜாலம் காட்டி, எப்படியோ கட்சியில் ஒரு முக்கிய பிரமுகர் ஆகி விட்டார்.
இவர் கோபப்பட்டாலும் படாவிட்டாலும் இவரது அல்லக் கைகளின் பயங்கர புரளிகளால் ஆறுமுகம் மென் மேலும் பிரபலமாகி விட்டார். பின்னாளில் இவர் அணிந்திருந்த ஒரு தங்க பிரேஸ்லெட்டில் ஒருவரின் மூக்கை உடைத்து மாவீரன் என்று காட்டிக் கொண்டார். இதனால் இவர் அருகில் வரும்போது அனைவரும் பவ்யமாக எழுந்து கொண்டு நமஸ்கரித்தனர்.
ஆனாலும் என்ன? ஆறுமுகத்தினால் வட்டச் செயலாளர் மட்டுமே ஆக முடிந்தது.
அல்லக் கைகளின் தொந்திரவும் பொறுக்க முடியவில்லை. 'எப்போ அண்ணே எம் எல் ஏ ஆகப் போறீங்க?' என்று துளைத்து எடுக்கத் துவங்கினார்கள்.
அதற்கும் ஒரு நேரம் வந்தது. தனது வட்டத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் மேடையில் வைத்து உள்ளூர் எம் எல் ஏவின் முகத்தில் கோபத்தில் ஒரு குத்து விட்டார். எம் எல் ஏவின் மூக்கு உடைந்து இரத்தம் தெறித்தது.
விஷயம் மேலிடம் வரை போனது. மேலிடத்தில் விசாரணை வந்தபோது அனைவரும் எதிர்பார்த்தது என்னவென்றால் 'ஒழிந்தான் ஆறுமுகம். இவனது முன் கோபத்திற்கு மேலிடம் நிச்சயம் தண்டனை கொடுக்கும். குறைந்த பட்சம் இவனது வட்டச் செயலாளர் பதவியை யாவது பறிப்பார்கள்' என ஆர்வம் மேலிட உள்ளூர்வாசிகள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தபோது அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிப போனது.
அந்த முறை வந்த சட்ட மன்ற வேட்பாளர் பட்டியலில் ஆறுமுகம் முதல் இடம் பெற்றிருந்தார்.
அதற்குச் சொல்லப் பட்ட காரணம் 'கோபப் படும் ஒரு முரட்டு மனிதர் நமது சட்ட மன்றத்திற்குத் தேவைப் படுகிறார்' என்று மேலிடம் கருதியதால் அவருக்கு ஒரு சீட் கொடுக்கப் பட்டு அவரும் ஜெயித்து விட்டார்.
ஜெயித்து வெற்றி மாலை சூடி வீட்டிற்குள் வருகையில் எம் எல் ஏ ஆறுமுகத்தின் மகன் அவ்வையாரின் ஆத்திச் சூடி படித்துக் கொண்டு இருந்தான்...
'அறம் செய்ய விரும்பு... ஆறுவது சினம்...'
ஆறுமுகத்தின் மகன் தன அப்பாவிடம் கேட்டான்
'அப்பா...ஆறுவது சினம்...என்றால் என்றால் என்ன?'
ஆறுமுகம் எம் எல் ஏ சொன்னார்.... ' உதவாததை எல்லாம் படிக்காதேடா.. நாளைக்கு நீ முன்னுக்கு வர முடியாது...'
- டி பெட்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|