மாவீரன் நெப்போலியன்
Fri Sep 13, 2013 2:08 pm
இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.
படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன.
அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான்.
வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணமல் பதறிப்போனாள்.
கதவு திறந்திருப்பது கண்டு பதை பதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
அவன் அருகில் சென்று “மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே… உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய்.
இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன்.
படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன.
அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான்.
வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணமல் பதறிப்போனாள்.
கதவு திறந்திருப்பது கண்டு பதை பதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
அவன் அருகில் சென்று “மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே… உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்த சிறுவன் “பயமா? பயம் என்றால் என்னம்மா?” என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய்.
இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன்.
Re: மாவீரன் நெப்போலியன்
Tue Feb 17, 2015 8:19 am
1769 முதல் 1821 வரை வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட், பிரான்ஸ் நாட்டின் படைத் தளபதி மற்றும் பிரான்சின் முதல் பேரரசர். பிரெஞ்சுப் புரட்சியின் போது நடைபெற்ற போர்களை நடத்தியதன் வாயிலாக முன்னேற்றம் அடைந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படையெடுத்து, வெற்றிபெற்று பல நாடுகளை பிரான்சுக்குக் கீழ் கொண்டுவந்தார். நெப்போலியனின் லட்சியம், விவேகம் மற்றும் திறமையான இராணுவ உத்திகள் மூலம் அவரது பேரரசு விரிவடைந்தது. உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இராணுவ தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
1. முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.
2. உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
3. சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.
4. சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.
5. இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.
6. வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை.
7. இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது.
8. முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார்.
9. நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.
10. நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.
11. வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.
12. நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|