சோதோமின் பாவம் என்று வர்ணிக்கப்படும் ஓரின சேர்க்கை
Thu Jul 04, 2013 5:08 am
சோதோமின் பாவம் என்று வர்ணிக்கப்படும் ஓரின சேர்க்கை போன்ற பாலியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் போக்கு இப்போது உலமெங்கும் பெருகி வருகிறது.
இந்நிலையில் சென்ற ஞாயிற்று கிழமை(ஜுன் 30) சென்னையில் சுமார் 500கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் ராஜரத்தினம் விளையாட்டு மைதானதிலிருந்து எழும்பூர் வரை அணிவகுப்பு நடத்தினர்.
ஓரினச் சேர்க்கைக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் 377வது சட்டப் பிரிவை நீக்கக் கோரியும், ஓரினச் சேர்க்கையாளர்களின் சம உரிமையை வலியுறுத்தும் வகையிலும் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் தங்களின் உரிமையை வலிறுத்தி கோஷங்களும் எழுப்பினர்.
இதில் பங்கேற்றவர்களில் 95% பேர் 18 அல்லது 19 வயதே உள்ள இளைஞர்களே..
இச்செய்தி அறிந்த தேவபிள்ளைகள் சிலர் வேதனையுற்று, தேவ சமூகத்தில் ஜெபித்தனர்.
பாவத்தின் சேற்றில் வீழ்ந்த இந்த மக்களுக்கு நம் தேவனின் அன்பை தருவதற்கு 13 சகோதரர்களும் 4 சகோதரிகளும் கொண்ட சேனை ஒன்றை தேவன் ஜெபத்தால் இணைத்தார் எழுப்பினார். ஆவியானவரின் தெளிவான வழிநடத்துதலால் பேரணியில் கலந்து கொண்டு, வழி தப்பிய ஆடுகளை இடுக்கமான வாசலண்டை கொண்டு வருவதே எமது பணி என உறுதி ஏற்றனர்.
தேவ அன்பை எடுத்துச் சொல்லும் வாசகங்கள் நிறைந்த பதாகைகளை கைகளில் ஏந்தி, முகத்தில் புன்முறுவல் உதிர்த்து, இதயத்தில் தேவன்பு சுமந்தவாறு பேரணிக்கு சென்றனர். பதினேழு பேரும் தனித்தனியே பிரிந்து சென்று கைபிரதிகளை கொடுத்தனர்.
புதிய ஏற்பட்டு வேதாகமங்களும், துண்டு பிரசூரங்களும் விநியோகித்து நற்செய்தியை அறிவித்தனர். பாவத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் மாந்தருக்கு இரட்சகரை காட்டினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமல்லாது பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினரும் நற்செய்தி பிரதிகளையும், வேதாகமங்களையும் ஆர்வத்தோடு வாங்கிக் கொண்டது தேவனின் செயலே.
பேரணிக்கு பின் நடந்த பொதுக்கூட்டத்திலும் “உனக்காக தன் ஜீவனை தந்த இயேசு, உன்னை நேசிக்கிறார்” என்ற பதாகைகளை கைகளில் ஏந்திக் கொண்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.
துண்டு பிரசூரகத்தை வாங்கிக்கொண்ட பலரிடம் “நாங்கள் உனக்காக பிராத்தனை செய்யலாமா” என்று கேட்டதும் எந்த வித யோசனையுமின்றி “எனக்காக தயவு செய்து பிராத்தனை செய்து கொள்ளுங்கள்” என்றனராம்.
அதில் ஒரு இளைஞன் “நான் தவறான வாழ்வில் இருக்கிறேன் என்று தெரிகிறது. ஆனால் இதிலிருந்து வெளிவரும் வழி தான் தெரியவில்லை” என்று சொன்ன போது பலரது இருதயத்திலும் இதுபோலவே தேவன் கிரியை செய்திருப்பார் என்ற விசுவாசம் நம்முள் பிறக்கிறது.
இவர்கள் செய்த நற்செய்தி பணியினை பல பொதுஜன பத்திரிக்கைகளும் தங்கள் செய்திதாள்களில் வெளியிட்டுள்ளன.
இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே வந்தேன் என்ற ஆண்டவரின் விருப்பத்தை சரிவர புரிந்து கொண்டு, துணிவோடும் விசுவாசத்தோடும் தேவன்பை தேவையில் உள்ளவர்களுக்கு எடுத்து சென்ற நல்ல உள்ளங்களுக்கு ஒரு சபாஷ்!!!!!!!!!.
News paper links:
http://www.thehindu.com/news/cities/chennai/the-many-hues-of-pride/article4866749.ece
http://timesofindia.indiatimes.com/city/chennai/Gay-pride-on-display-but-Chennai-misses-show/articleshow/20851667.cms
( இங்கு துணிவுடன் ஊழியம் செய்த சகோதர சகோதரிகள் அனைவருமே “தகவல் தொழிநுட்ப துறையில்(IT) பொறியாளர்களாக வேலை செய்பவர்கள்)
Like Us : கதம்பம் [இ-இதழ்]
#gay #chennai #thehindu #thinamalar
- மனுதர்மம்" என்று கூறுவதா? அல்லது "மனு அதர்மம்" என்று கூறுவதா?
- கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
- சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில்,மாணவர் சேர்க்கை!
- ரஷ்யாவில் படிக்க நாளை நேரடி மாணவர் சேர்க்கை.
- +2 க்கு பின்பு - கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க - கடைசி தேதிகள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|